லடாக் எல்லை பகுதியில் இருந்து இந்திய, சீன படை வாபஸ் – இரு நாட்டு ராணுவம் கூட்டறிக்கை

புதுடெல்லி: இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடந்த 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லடாக் எல்லையின் முக்கிய பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இரு நாட்டு ராணுவமும் நேற்று மாலை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில், 40 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 20 வீரர்கள் … Read more

போதைப் பொருள் விற்ற 8 பேர் சுட்டுக் கொலை| Dinamalar

கராச்சி- பாகிஸ்தானில் போதைப் பொருள் விற்ற எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது குறித்து, குவெட்டா டி.ஐ.ஜி., அஸ்பர் மைசர் நேற்று தெரிவித்ததாவது:பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் போதைப் பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது.இது குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில், நகரின் ஒதுக்குப்புறத்தில் போதைப் பொருள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசாருக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். … Read more

விமான நிலையத்தில் கலைஞர்களுடன் நடனம் ஆடி அசத்திய வங்காளதேச பிரதமர்; வைரல் வீடியோ

அஜ்மீர், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவுக்கு கடந்த திங்கட்கிழமை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹசீனாவுக்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறையிலான சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹசீனா, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின்பு, பிரதமர் மோடியுடனான சந்திப்பு நடந்தது. இதில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை தலைவர்கள் … Read more

பிரிட்டன் ராணி காலமானார்| Dinamalar

லண்டன்:மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ‘பிரிட்டன் ராணி எலிசபெத் 96, நேற்று இரவு காலமானார். பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் ஸ்காட்லாண்டு நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். வயது மூப்பால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள் ராணிக்கு ஏற்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ராணியின் மகனும் பிரிட்டன் இளவரசருமான சார்லஸ், மனைவி கமீலா உள்ளிட்ட ராணியின் குடும்பத்தினர் பால்மோல் வந்துள்ளனர் என கூறப்பட்டது.இந்நிலையில் … Read more

வியட்நாமில் மதுபான பாரில் தீ விபத்து- 32 பேர் பலி

வியட்நாமின், ஹோசிமின் நகரில் உள்ள மதுபான பாரில் சுமார் 150 பேர் கூடியிருந்தனர். அப்போது அக்கட்டிடத்தில் 2-வது மாடியில் திடீரென்று தீப்பிடித்தது. தீ வேகமாக பரவியதால் அங்கிருந்தவர்கள் வெளியே ஓடி வர முயற்சித்தனர். ஆனால் தீ மற்றும் புகைமூட்டத்தில் பலர் சிக்கி கொண்டனர். இதனால் கட்டிடத்தின் பால்கனியில் இருந்து பலர் கீழே குதித்தனர். தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்களின் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த … Read more

ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம்| Dinamalar

டோக்கியோ:பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா – ஜப்பான் நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தில் கிழக்காசிய நாடான மங்கோலியா பயணத்தை முடித்து விட்டு, நேற்று ஜப்பானுக்கு வந்தார். அவருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகளும் வந்தனர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடந்த இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் 2 பிளஸ் 2 … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானார்| Dinamalar

லண்டன்-பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் காலமானார். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. ராணியின் மகனும், பிரிட்டன் இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கமீலா, இளவரசர் ஹாரி, … Read more

பிரிட்டன் மன்னராகிறார் இளவரசர் சார்லஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்ற இரண்டாம் எலிசபெத். 96 உடல்நிலை மோசமான நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோல் அரண்மணையில் காலமானார். இந்நிலையில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நிலை கடந்த அக்டோபர் மாதம் முதலே மோசமாக இருந்ததால் அவரது மகன் இளவரசர் சார்லஸ் தான் மகாராணியின் வேலைகளில் பெரும்பாலானவற்றைக் கவனித்து … Read more

இலங்கை அமைச்சரவை விரிவாக்கம்37 இணை அமைச்சர்கள் பொறுப்பேற்பு| Dinamalar

கொழும்பு:இலங்கை அமைச்சரவையில் புதிதாக 37 பேர் இணை அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர். நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப் படும் என அவர் தெரிவித்தார். கடந்த மாதம் அவர் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். இந்நிலையில், இலங்கை அமைச்சரவை … Read more

70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு

லண்டன்: இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக … Read more