அமெரிக்க சுற்றுலா விசா பெறுவதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும்… காரணம்?

அமெரிக்கா செல்ல திட்டமிடுபவர்கள், இன்றைய நாளில் விண்ணப்பித்தால், சுற்றுலா விசாவுக்கான நேர்காணல் அழைப்பு கிடைக்கப்பெற 2024ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.  இதில், அமெரிக்க சுற்றுலா விசா நேர்காணலுக்கான சராசரி காத்திருப்பு காலம் தற்போது சென்னைக்கு 557 நாட்களாகவும், டெல்லிக்கு 581 நாட்களாகவும், மும்பைக்கு 517 நாட்களாகவும் உள்ளன. அதேசமயம், மாணவர் சுற்றுலா விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் சென்னைக்கு 8 நாட்களாக உள்ள நிலையில், டெல்லிக்கு 479 நாட்களாகவும், மும்பைக்கு 10 நாட்களாகவும் … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக்கை பின்னுக்கு தள்ளி லிஸ் டிரஸ் 60% ஆதரவுடன் முன்னிலை

லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ் முன்னிலையில் உள்ளது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவி வகிக்கிறார். இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. … Read more

சூடானில் கனமழையால் பாதிப்பு : 70க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.!

சூடானில் கடந்த மே முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதமடைந்துள்ளன. வடக்கு கோர்டோஃபான், நைல் ஆறு பகுதிகள் கனமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு சூடானில் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. Source link

அமெரிக்க சுற்றுலா விசா | 2024 வரை காத்திருக்க வேண்டும்

புதுடெல்லி: அமெரிக்க சுற்றுலா விசாவை பெறுவதற்கான காத்திருப்பு காலம் ஒன்றரை ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக விடுமுறை கால பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பயண ஏற்பாட்டு முகவர்கள் கூறியது: இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமெரிக்காவின் நியூயார்க்கில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட ஆசைப்பட்டு அமெரிக்க தூதரகத்தின் வலைதளத்தை அணுகி சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கான நேர்காணல் தேதி மார்ச் 2024-ல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கையில், அந்த மென்பொறியாளர் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தைதான் அமெரிக்காவில் … Read more

இணையதள ஆட்சி மன்ற குழுவில் அல்கேஷ் நியமனம் – ஐ.நா. பொதுச் செயலாளர் அறிவிப்பு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் இணையதள ஆட்சி மன்றக் குழுவில், இந்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அல்கேஷ் குமார் சர்மாவை உறுப்பினராக நியமித்து பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அறிவித்துள்ளார். ஐ.நா. சபையின் இணைய நிர்வாகத்தை மேற்கொள்ள கடந்த 2006-ம் ஆண்டில் இணைய ஆட்சி மன்றம் (ஐஜிஎப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இணைய தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி முக்கிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வளரும் நாடுகளில் இணைய ஆட்சி நடைமுறைக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க … Read more

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எப்-16 போர் விமானங்களுடன் தைவான் தீவிர போர் பயிற்சி

தைபே: தைவானை தனது பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகளுக்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சமீபத்தில் தைவான் பயணம் மேற்கொண்டார். இதனால் கோபம் அடைந்த சீனா, தைவான் எல்லை அருகே போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. சீனாவின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்தன. இதனால் தைவான் மீது சீனா … Read more

மதுபோதையில் ஆட்டம் போட்டு, விமர்சனத்துக்குள்ளான பின்லாந்து பிரதமர்..!

மதுபோதையில் தனது நண்பர்களுடன் பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியானதால், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக, சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார்.  இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சன்னா மரீன் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால், அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு … Read more

போலீசுக்கு போன் அடித்த குட்டி குரங்கின் சுட்டித்தனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாஸோ ரோபில்ஸ்-அமெரிக்காவில் ஒரு குரங்கு குட்டி, காவல் துறையின் அவசர எண்ணுக்கு மொபைல் போனில் இருந்து அழைப்பு விடுத்த சம்பவம், சுவாரசியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கிருந்து, போலீசாரின் அவசர உதவி எண்ணான 911க்கு, 13ம் தேதி மொபைல் போனில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. ஆனால், உரையாடலுக்கு முன்னரே அழைப்பு துண்டிக்கப்பட்டது. போலீசார் போன் அழைப்பை சோதனை செய்ததில், அது பாஸா … Read more

சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்ததை நம்பமுடியவில்லை: தாக்கியவர் பேட்டி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ‘சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை’ என அவரை கத்தியால் தாக்கிய நபர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, ‘தி சட்டானிக் வெர்சஸ்’ என்ற நாவலை, 1988ல் வெளியிட்டார். இதற்கு, முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ருஷ்டியை படுகொலை செய்ய வேண்டும் என, அப்போதைய ஈரான் அதிபர் அயதுல்லா கோமேனி பகிரங்கமாக அறிவித்தார். ருஷ்டியை படுகொலை செய்ய நடந்த பல்வேறு … Read more

Emergency Aid: இலங்கைக்கு 25 மில்லியன் டாலர் அவசரகால கடனுதவி தரும் ஆஸ்திரேலியா

கொழும்பு: இலங்கைக்கு மேலும் 25 மில்லியன் டாலர்கள் அளவிலான உதவித்தொகையை அவசர உதவியாக வழங்கியுள்ளது ஆஸ்திரேலியா. இதுவரை ஆஸ்திரேலியா மொத்தமாக 75 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஜூன் மாதத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா  $50 மில்லியன் நிதியுதவி அளித்தது. தற்போது ஆஸ்திரேலியாவில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 25 மில்லியன் டாலர்களை அவசர நிதியாக வழங்க தீர்மானித்துள்ளது. அடிப்படைத் தேவைகளுக்காக பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் இலங்கைப் பொதுமக்களுக்கு சுகாதாரம் … Read more