உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷியா இந்த வாரம் 84 ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை … Read more

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி படுகொலை!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான்(Balochistan) மாகாண நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முகமது நூர் மெஸ்கன்சாய்(Muhammad Noor eskenazi) மீது நேற்று(வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பள்ளிவாசலுக்கு வெளியே நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த முகமது நூர் மெஸ்கன்சாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாகிஸ்தான் நீதிமன்ற வரலாற்றில் மிகவும் தைரியமான நீதிபதி என்ற பெருமைக்குரிய முகமது நூர் மெஸ்கன்சாய்க்கு பலமுறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஷரியாவுக்கு எதிராக … Read more

இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கொழும்பு, இலங்கையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதில் மேற்கு மாகாணத்தில் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் கண்டி, காலே, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் கடந்த ஆண்டை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவானோரே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு … Read more

உலக பட்டினி குறியீடு 2022 வெளியீடு | 107-வது இடத்தில் இந்தியா: மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் … Read more

கனடாவில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு; இந்தியா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி, பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டுமென சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில் இந்த அமைப்பு பஞ்சாப்பை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மாதம் 18-ந்தேதி பொது வாக்கெடுப்பு நடத்தியது. இதை இந்தியா வன்மையாக கண்டித்தது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி … Read more

துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து – 22 பேர் பலி

அங்காரா, துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் … Read more

இந்தியாவும் சீனாவும் தான் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகள் – ரஷ்ய அதிபர் புதின்

இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவின் நெருக்கமான நட்பு நாடுகள் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். கஜகஸ்தான் தலைநகரான அஸ்தனாவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய புதின், ஆசியாவின் இரு பலம் மிக்க நாடுகள் உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி கூறி வருவதாகவும் புதின் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய போது இது போருக்கான காலம் அல்ல என்று கூறியிருந்தார். இந்தியா,சீனா ஆகிய நட்பு நாடுகளின் உக்ரைன் போர் குறித்த நிலைப்பாடு நன்கு … Read more

மருத்துவமனை பிணவறை மீது அழுகிய நிலையில் 200 மனித உடல்கள்

பாகிஸ்தான் நகரான முல்தானில் உள்ள மருத்துவமனையின் பிணவறை கூரை மீது சிதிலம் அடைந்து அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்ததும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் சௌத்ரி குஜ்ஜார் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை நடத்தி காரணமானவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்க மாநில அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. Source link

அமெரிக்கா செல்ல 1 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களுக்கு பணி விசா

அமெரிக்கா செல்ல விண்ணப்பித்து காத்திருக்கும் பல லட்சம் இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஒரு லட்சம் H&L பணி விசாக்களை இந்தியாவின் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. அண்மையில் இந்தியா வந்த வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தலைமையிலான அமெரிக்கக் குழுவினருடன் பேச்சுநடத்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தொழில் ரீதியான விசாக்களுக்கான காத்திருப்பு காலம் மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் நீள்வதாக குறிப்பிட்டார். 2022 ஜனவரி முதல் 9 மாதங்களில் சுமார் ஒரு லட்சம் 60 ஆயிரம் விசாக்கள் பரிசீலிக்கப்பட்டு ஒரு … Read more

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கண்டித்து சீனாவில் அதிபர் ஜின்பிங்குக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுக்கிறது

பெய்ஜிங்: சீனாவில் அரசியல் எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது. ஜி ஜின்பிங் அதிபரானது முதல் மக்கள் போராட்டங்கள் அடிக்கடி நடந்ததில்லை. ஆனால் தற்போது கரோனா தடுப்பு கொள்கைக்கு எதிராகவும், அதிபர் தலைமைக்கு எதிராகவும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்படுவது போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் முடிவுக்கு வர வேண்டும். அதிபர் ஜின்பிங் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் பரவுகின்றன. இதை தடுக்கும் நடவடிக்கைகளில் … Read more