போரை நிறுத்த எலான் மஸ்க் நடத்திய கருத்துக்கணிப்பு: உக்ரைன் கோபம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படுத்துவது குறித்தும், 4 பிராந்தியங்களில் ஐ.நா., மேற்பார்வையில் ஓட்டெடுப்பு நடத்துவது குறித்து, டெஸ்லோ நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் நடத்திய கருத்துக்கணிப்பு நடத்தினார். இதனால், கோபமடைந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார். உக்ரைன் மீது கடந்த எட்டு மாதங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், உலக நாடுகள் … Read more

உக்ரைனில் உள்ள கருஞ்சிறுத்தை, ஜாகுவாரை மீட்கும் போராட்டத்தில் இந்திய மருத்துவர்

கீவ்: உக்ரைனில் பதற்றமிகு போர்ச் சூழலில் குண்டுவெடிப்புச் சத்தங்களுக்கு இடையே தனது செல்லப் பிராணிகளான கருஞ்சிறுத்தையையும், ஜாகுவாரையும் பாரமரித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் கிரிகுமார் பாட்டீல் தற்போது அவைகளை கனத்த மனத்துடன் பிரிந்து வந்திருக்கிறார். உக்ரைனில் தான் அன்புடன் வளர்த்து வந்த கருஞ்சிறுத்தை, ஜாகுவார் இல்லாமல் நாடு திரும்பப் போவதில்லை என்று தீர்க்கமாக இருந்தவர்தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவரான கிரிகுமார் பாட்டீல். மேற்கு உக்ரைனில் உள்ள டான்மாஸ் மாகாணத்தில் உள்ள சிறு நகரமான செவரோடோனெட்ஸ்க்கி ஆறு … Read more

போரை நிறுத்துங்கள்: புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வாடிகன்: உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் கடந்த வாரம் அறிவித்தார். இதற்கிடையில், ரஷ்யப் படைகளால் ஒவ்வொரு நாளும் உக்ரைனியர்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக குற்றம் சுமத்தினார். இந்தச் சூழலில் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.37 கோடியாக உயர்வு

ஜெனீவா, சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,551,600 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

2022-க்கான மருத்துவ நோபல் பரிசுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி தேர்வு

ஸ்டாக்ஹோம்: 2022-ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன. … Read more

மனித உரிமை மீறல் விவகாரம்: இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு

கொழும்பு, இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆன நிலையில், அவரது ஆட்சியை எதிர்த்தும் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவமும், போலீசாரும் தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கையில் நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஜெனீவாவில் உள்ள ஐ.நா. … Read more

ஆப்கன் கல்விக்கூடத்தில் தற்கொலை தாக்குதல் | பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

காபூல்: ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்து கல்விக்கூடத்தின் பெண்கள் வகுப்பறையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கனிஸ்தானை ஆளும் தாலிபான்கள், பெண் கல்விக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருக்கிறார்கள். இதேபோல், ஆப்கனிஸ்தானில் செல்வாக்குள்ள தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பும் பெண் கல்வியை எதிர்க்கிறது. அதோடு, இந்த இரு அமைப்புகளும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை தங்கள் எதிரிகளாகக் கருதுகிறார்கள். இந்நிலையில், காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள புல் இ சுக்தா … Read more

இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி அதிரடி தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர். இதுபோன்ற தேடுதல் வேட்டைகளின்போது அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை … Read more

பத்து நாட்களில் ஐந்தாவது ஏவுகணை பரிசோதனை: அமெரிக்காவுக்கு சவால் விடும் வட கொரியா

பத்து நாட்களுக்குள் வடகொரியா ஐந்து ஏவுகணை பரிசோதனைகள் நடத்தியுள்ளது. இன்று மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்துள்ளது, கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சியோலுக்கு ராஜாங்கரீதியிலான பயணத்தை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மேற்கொள்வதற்கு முன்னதாகவும் வடகொரிய ஒரு ஏவுகணையை சுட்டு பரிசோதித்தது. தென் கொரியாவுக்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர், வடகொரியாவுடனான மோதலில் தென் கொரியாவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.   தென் கொரியாவும் அமெரிக்காவும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, … Read more

ஈராக்கில் துருக்கி ராணுவம் வான்தாக்குதல்: குர்திஸ் பயங்கரவாதிகள் 23 பேர் பலி

பாக்தாத், ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் பிகேகே எனப்படும் குா்திஸ்தான் தொழிலாளா் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஸ் பிராந்தியமான அசோஸ் பிராந்தியத்துக்குள் துருக்கி போர் விமானங்கள் நுழைந்து வான்தாக்குதல் நடத்தின. இதுபற்றி துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more