கிரீமியாவில் உள்ள ரஷ்ய ராணுவத்தின் ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியது – 2,000 பேர் வெளியேற்றம்..!

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியது. ஜான்கோய் பகுதியில் உள்ள ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியதற்கு உக்ரைன் காரணமாக இருக்கலாம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. அப்பகுதியில் இருந்து இரண்டாயிரம் பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து தடைபட்டது.  Source link

பெலோசியின் தைவான் பயணம் போரை தூண்டுவதற்கு தான்: அமெரிக்காவை சாடும் புடின்

பெலோசியின் தைவான் பயணம்  பதற்றத்தை தூண்ட “கவனமாக திட்டமிடப்பட்ட ” என்று  சாடிய புடின், இது “மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடும் வகையிலான செயல் என்றும், சர்வதேச பொறுப்புணர்ச்சி இல்லாத்ச செயல் என்றும் ப்புடின் சாடினார். அமெரிக்கா, உக்ரைனில் போர்  நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை புடின் குறிப்பாக சுட்டிக்காட்டினார். … Read more

சீனாவில் வறட்சி, வெயில்: குடிநீர், விவசாயத்திற்கு சிக்கல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில், வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதுடன் வறட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. மலை மற்றும் ஆறுகள் நிறைந்த பகுதியான சோங்குயிங் மாகாணத்தில் மழை குறைந்தளவே பெய்துள்ளது. வழக்கமான பெய்யும் மழையின் அளவில் பாதி அளவே இந்த ஆண்டு பெய்துள்ளது. இதனால், அங்குள்ள சிறிய நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில், குடிநீருக்காகவும், விவசாய பணிகளுக்காகவும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் … Read more

இந்தியாவில் பஞ்சம் ஏற்படும்… பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார். இவர் 1996ம் ஆண்டு தனது 84வது வயதில், காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.  அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் … Read more

லண்டன் வீதிகளில் உலாவும் துபாய் இளவரசர்: வைரலாகும் புகைப்படங்கள்

லண்டன்: ஐக்கிய அமீரகத்தின் இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும் லண்டனில் தெருக்களிலும், பொதுப் போக்குவரத்துகளிலும் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மன்னர்கள், இளவரசர்கள் என்றால் பொது உலகப் பார்வையில் ஒரு பிம்பம் எப்போதும் தோன்றும். அதனை உடைப்பதற்கான நடவடிக்கைகளில் சில அரபு நாடுகள் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஐக்கிய அரபு அமீரகம். இங்கு மற்ற அரபு நாடுகளை ஒப்பிடும்போது கட்டுப்பாடுகள் குறைவு … Read more

Yuan Wang 5: சர்ச்சைக்குரிய சீனாவின் 'யுவான் வாங்' கப்பல் இலங்கை வந்தடைந்தது

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றான ‘யுவான் வாங் 5’ (Yuan Wang 5) கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து கடந்த சில நாட்களாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது இந்த கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நுழைந்தது. சீனாவின் இந்த செயற்பாடுகள் குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை … Read more

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்கள் போக்கை மாற்ற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தலிபான்கள் தங்கள் போக்கை மாற்ற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். Source link

இலங்கை வந்தது சீன உளவுக்கப்பல்: ஒரு வாரம் துறைமுகத்தில் நிற்க போகிறது: இந்தியா உஷார்| Dinamalar

கொழும்பு: சீனாவின், ‘யுவான் வாங் 5’ என்ற உளவுக் கப்பல்,நம் அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடைந்தது. இக்கப்பல் வரும் 22ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளது. அப்போது, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘இஸ்ரோ’வின் ராக்கெட் ஏவுதளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையம் மற்றும் நம் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அந்த உளவுக் கப்பல் சேகரித்துச் செல்லக் கூடிய அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை … Read more

உக்ரைன் போர் : ரஷ்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறதா வடகொரியா?

வடகொரிய விடுதலை தினத்தை ஒட்டி, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்ய அதிபர் புடின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான கொரிய தீபகற்பம் மற்றும் வடகிழக்கு ஆசியப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரு தரப்பினரின் நலனுக்கும் உதவும் எனக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை விரிவுபடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் புடின் கூறியுள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் கிம் ஜாங் உன்னும் … Read more

ஊழல் வழக்குகளில் மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டு சிறை

யாங்கூன்: ஊழல் வழக்குகளில் மியான்மர் முன்னாள் அரசு ஆலோசகர்ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அரசின் ஆலோசகராக சூகி பொறுப்பு வகித்தார். எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு … Read more