இலங்கையில் இந்திய விசா மைய அதிகாரி மீது நள்ளிரவில் நடந்த தாக்குதல்

கொழும்பு: இலங்கையில் நேற்றிரவு இந்திய விசா மைய அதிகாரி மீது சில அடையாளம் தெரியாதோர் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்தார். இதனைடுத்து இலங்கை வாழ் இந்தியர்கள் அங்குள்ள நிலைமையை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் ஒருவேளை வெளியேற திட்டமிட்டால் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டு சிங்கப்பூரில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார். கோத்தபய ராஜபக்ச தப்பிச் செல்ல … Read more

உக்ரைன் தேசிய கொடியின் வண்ணம் கொண்ட பூங்கொத்துகளால் ஜெலன்காவை வரவேற்ற பைடன்

வாஷிங்டன், உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா பின்பு, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24ந்தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த போரானது தொடர்ந்து பல மாதங்களாக நீடித்து வருகிறது. போரால் உக்ரைனின் நாட்டில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷிய தரப்பில் வீரர்கள், ஆயுதங்கள் ஆகிய இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து அதற்காக … Read more

இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி

கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியில் இருக்கிரார். 73 வயதான ரணில் விக்கிரமசிங்க, 63 வயதான தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியும், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) கட்சி மற்றும் இடதுசாரி ஜனதா விமுக்தியில் இருந்து பிரிந்த குழுவின் முக்கிய உறுப்பினருமான டலஸ் அழகப்பெருமவும் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக உள்ளனர்.பெரமுன (ஜே.வி.பி) அனுரகுமார திஸாநாயக்கவும் அதிபர் … Read more

அரசியல் நெருக்கடி நிலவும் சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதிய அதிபர் தேர்வு

கொழும்பு: நெருக்கடி நிலையை சந்தித்துள்ள இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபரை தேர்வு செய்யவுள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி சிங்கப்பூர் சென்றுவிட்டார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் தேர்தலுக்கு … Read more

முந்துகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்| Dinamalar

லண்டன் :பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சி தலைவர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கூடுதலாக, 14 ஓட்டுகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பழமைவாத கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான மூன்றாம் கட்ட தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. ஆளும் கட்சி தலைவராக தேர்வானால் மட்டுமே பிரதமராக முடியும். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், … Read more

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம்: வெயிலால் அலறுது ஐரோப்பா| Dinamalar

லண்டன்: பிரிட்டன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை நேற்று பதிவானது.பிரிட்டனின் சராசரி வெப்பநிலை 18 – 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இரு நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. அந்நாட்டின் வரலாற்றில் 2019 ஜூலையில் கேம்பிரிட்ஜ் பகுதியில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது. இதை முறியடிக்கும் விதமாக நேற்று லண்டன் ஹீத்ரோவ் விமான நிலைய பகுதியில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. . … Read more

டிவிட்டர் வாங்குவது தொடர்பான வழக்கில் எலான் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Twitter vs Elon Musk: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் இடையிலான சட்ட மோதல் அக்டோபருக்கு ஒத்தி போடப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை வாங்க முடிவு செய்த மஸ்க், 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். பிறகுக் நிர்பந்திக்க முடியுமா என்பதை தீர்மானிக்க இரு தரப்பினரையும் அக்டோபரில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான  ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் எலான் மஸ்க். போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான … Read more

இலங்கையின் புதிய அதிபராக டல்லாஸ் அழகப்பெரும தேர்வாக வாய்ப்பு| Dinamalar

கொழும்பு : இலங்கையின் புதிய அதிபராக டல்லாஸ் அழகப்பெரும, 63, மற்றும் பிரதமராக சஜித் பிரேமதாசா, 55, ஆகியோரை தேர்வு செய்ய, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் தப்பி சென்ற பின், காபந்து அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல், அந்நாட்டு பார்லி.,யில் இன்று நடக்கிறது. உறுப்பினர்கள் ஓட்டு போட்டு … Read more

இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்வு – மாலையில் முடிவு தெரியும்

பொதுமக்களின் கோபாவேசத்தில் சிக்கிய கோத்தபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், புதிய அதிபரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 3 பேர் களத்தில் உள்ளனர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே கட்சியில் இருந்த டலஸ் … Read more

எகிப்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிரக் மீது பேருந்து மோதி விபத்து.. 22 பேர் உயிரிழப்பு!

எகிப்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிரக் மீது பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்தவர்களில் 22 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயம் அடைந்தனர். தலைநகர் கெய்ரோவில் இருந்து 300 கிலோமீட்டர் தெற்கே உள்ள அல்-மின்யா கவர்னரேட்டில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது சாலையோரம் டயரை மாற்றுவதற்காக நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.  Source link