ஜப்பான் பல்கலைக்கழகங்களில் பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

ஜப்பானில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. மே 1ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கின்படி அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்து 975 பெண்கள் ஆசிரியர் பணியிடங்களில் உள்ளனர் என்று அந்நாட்டு கல்வித் துறை அமைச்சகம் … Read more

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Dinamalar

பீஜிங்: சீனாவின் சூங்கிங் நகரத்தில் 6.4 என்கிற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பெரும் அஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பீஜிங்: சீனாவின் சூங்கிங் நகரத்தில் 6.4 என்கிற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு … Read more

UK Election: பரபரப்பான இறுதி கட்ட தேர்தல்; பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்..!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 7-ம் தேதி, பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா காலத்தில் பிறந்தநாள் கொண்டாடியது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபருக்கு அரசு அதிகாரியாக நியமித்தது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியது போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் கட்சிக்கு உள்ளேயே போரிஸ் ஜான்சனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதையடுத்து ரிஷி சுனக் … Read more

அடுத்தடுத்து கத்திக் குத்து, மரண ஓலம்… கனடாவில் யாரும் எதிர்பார்க்காத பெரும் அதிர்ச்சி!

கனடா நாட்டில் உள்ள சாஸ்கட்சேவன் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் திடீரென கத்துக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்க்டன் ஆகிய இடங்களில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். யார் இவர்கள்? ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று யோசிக்கக் கூட நேரமில்லை. அப்பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து தப்பியோடினர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவதற்குள் நிலைமை கைமீறிப் போனது. பல்வேறு இடங்களில் நடந்த கத்திக்குத்து … Read more

பிரிட்டனின் புதிய பிரதமர் பெயர் இன்று அறிவிப்பு

பிரிட்டனின் புதிய பிரதமர் பெயர் இன்று இரவு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் லிஸ் டிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இடையே போட்டி நிலவுகிறது. இதில் வெற்றி பெறுபவரை அரசு அமைக்கும் படி ராணி இரண்டாம் எலிசபெத் முறைப்படி அழைப்பு விடுப்பார். போரிஸ் ஜான்சன் ராஜினாமாவையடுத்து நாளை புதிய பிரதமர் இங்கிலாந்து அரசுக்கு பொறுப்பு ஏற்பார். பதவிக்கு வந்த ஒருவாரத்தில் மின்கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ள லிஸ் டிரஸ் … Read more

தூக்கிலிடப்பட்ட நிரபராதி : 70 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை..!

கொலைக் குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் சிறையில் தூக்கிலிடப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம், நீதி தவறியதற்காக இங்கிலாந்து காவல்துறை மன்னிப்புக் கோரியுள்ளது. 1952-ஆம் ஆண்டில் கார்டிஃப் நகரத்தில் ஆடை வியாபாரியான Lily Volpert என்ற பெண்ணை கொலை செய்ததற்காக, மஹ்மூத் மட்டான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். மட்டான் குற்றம் புரியவில்லை என்று நிரூபிக்க அவருடைய மனைவியும், மகன்களும் கடந்த 46 ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இப்போது உயிருடன் … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச பிரதமர் பாராட்டு| Dinamalar

தாகா : ”இந்தியாவுடனான எங்கள் நட்பு, எங்கள் நாடு உருவானதில் இருந்து துவங்கியது. உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டு வந்தது, கொரோனா தடுப்பூசி வழங்கியது என, பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நண்பராக விளங்குகிறார்,” என, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, அரசு முறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகிறார். இந்நிலையில் நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:இந்தியா, வங்கதேசம் இடையேயான நட்புறவு மிகவும் நீண்டது; ஆழமானது; … Read more

அர்ஜென்டினாவில் 4 பேர் பலி| Dinamalar

டுகுமான் : அர்ஜென்டினா நாட்டில், ‘லெஜியோனேயர்ஸ்’ என்ற நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ளது, சான்மிகுவல் டிடுகுமான் என்ற நகரம். இங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட, 70 வயது மூதாட்டிக்கு, ‘லெஜியோனேயர்ஸ்’ என்ற நுரையீரல் தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.அதேபோல், வேறு சிகிச்சைகளுக்காக அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த மேலும் மூவரும் லெஜியோனேயர்ஸ் தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் மரணம் அடைந்தனர். அந்த … Read more

உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையிடம் அடைக்கலம் கோரும் நித்யானந்தா

கொழும்பு: உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நித்யானந்தா (44) சிகிச்சைக்காக இலங்கை அரசிடம் அடைக்கலம் கோரியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்திவந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளை ஆசிரமங்களையும் நடத்தி வந்தார்.கடந்த 2010-ம் ஆண்டு அவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டது. மேலும் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததாக அந்த மாநில போலீஸார் கடந்த 2019-ம் ஆண்டில் வழக்கு … Read more

கடல்சார் பாதுகாப்பு ஆலோசனைஅமெரிக்க குழு இந்தியா வருகை| Dinamalar

வாஷிங்டன் : கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, அமெரிக்க குழு இந்தியா வருகிறது.அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்தியா, அமெரிக்கா கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, செப்., 5 – 8ம் தேதி வரை அமெரிக்க குழு இந்தியா செல்கிறது.வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்டு லுா … Read more