சீனாவில் புதிதாக 1,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,988 பேருக்கு … Read more

பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட அமெரிக்க குழு

லாகூர், பாகிஸ்தானில் பெய்து வரும் பருவகால மழை பாதிப்புகளால் பெருவெள்ளம் ஏற்பட்டு அந்நாடு நீரில் தத்தளித்து வருகிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளால் 3-ல் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கி போயுள்ளது. வெள்ள நீரில் லட்சக்கணக்கான ஏக்கரிலான பயிர்களும், கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டு உள்ளன. உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. 1,200 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் … Read more

பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்தில் வெள்ள பாதிப்பு; நிவாரண முகாம்களில் 47 ஆயிரம் கர்ப்பிணிகள்

லாகூர், பாகிஸ்தானில் பெய்து வரும் பருவகால மழை பாதிப்புகளால் பெருவெள்ளம் ஏற்பட்டு அந்நாடு நீரில் தத்தளித்து வருகிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சிந்த் மாகாண சுகாதார மந்திரி ஆஜிரா பெச்சுகோ சில புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளார். இதன்படி, வெள்ளத்திற்கு பின்பு, லட்சக்கணக்கானோர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.34 லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா … Read more

14 ஆண்டில் 16 குழந்தை பெற்றெடுத்த சாதனை பெண்| Dinamalar

ராலீ:அமெரிக்காவில், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி, 14 ஆண்டுகளில் 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். அடுத்த குழந்தைக்கு காத்திருக்கும் அவர்கள், 20 குழந்தைகள் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கார்லோஸ் – பட்டி ஹெர்னாண்டஸ் தம்பதி, 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் தற்போது 40 வயது ஆகிறது. இந்த தம்பதி இதுவரை 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இவர்களது ஆறு ஆண், 10 பெண் குழந்தைகளில் ஆறு பேர் இரட்டைக் … Read more

மெக்சிகோவில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தரின் சிலை..! – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்..!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாமெக்சிகோவில்சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்தார். “இந்தச் சிலை மக்களுக்கு உத்வேகமாக இருக்கும், குறிப்பாக இப்பகுதியின் இளைஞர்கள் தங்கள் நாட்டை புதிய தலைமைக்கு கொண்டு செல்லும் மாற்றத்தை கொண்டு வருவதற்கு உத்வேகத்தை அளிக்கும்” என்று ஓம் பிர்லா ட்வீட் செய்துள்ளார். மேலும் “மனித குலத்திற்கான சுவாமி விவேகானந்தரின் செய்தி மற்றும் போதனைகள் மிக முக்கியமான ஒன்று. மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைப்பதன் மூலம், அவருக்கு எங்களது பணிவான அஞ்சலிகளை செலுத்துகிறோம்” என்று … Read more

சிரியா விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்

டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கடந்த புதன்கிழமை இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சிரியாவின் சனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று அந்நிறுவனம் கூறியது. பிரிட்டனை மையமாகக் கொண்ட … Read more

மெக்ஸிகோவில் விவேகானந்தர் சிலை – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்

மெக்ஸிகோ சிட்டி: இந்திய நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்ஸிகோவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மெக்ஸிகோ சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலையை, ஓம் பிர்லா நேற்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டர்பதிவில் அவர் கூறியிருப்பதாவது: லத்தீன் அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தருக்கு அமைக்கப்பட்டுள்ள முதல் சிலை இதுவாகும். இச்சிலை மக்களுக்கு, குறிப்பாக இப்பகுதி இளைஞர்களுக்கு, நாட்டை புதிய தலைமைக்கு கொண்டு செல்லும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான உத்வேக மாக இருக்கும். … Read more

லண்டனில் திருடப்பட்ட Bentley கொகுசு கார்… பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து மீட்பு!

சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் இருந்து திருடப்பட்ட சொகுசு காரான, பென்ட்லி கார் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பங்களா ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் நிறுவனத்திடம் இருந்து திருடப்பட்ட பென்ட்லி முல்சேன்  சொகுசு கார், DHA பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததும், காராச்சியில் உள்ள சுங்கத் துறை விசாரணை நடத்தியது.  விசாரணைக்காக சென்றது,  வீட்டின் முன் கார்  நிறுத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, சாம்பல் … Read more

உணவு தானியங்களை ஏற்றி வருவதற்காக உக்ரைன் சென்ற சரக்கு கப்பலில் நடுவழியில் இன்ஜின் கோளாறு

இஸ்தான்புல்: உணவு தானியங்களை ஏற்றி வருவதற்காக உக்ரைன் சென்ற சரக்குக் கப்பல் பாஸ்பரஸ் நீரிணை பகுதியில் இன்ஜின் கோளாறால் நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுபோல் நடப்பது இது 2-வது முறையாகும். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது. இதனால், துறைமுகங்கள் மூடப்பட்டதால் உக்ரைனிலிருந்து உணவு தானிய ஏற்றுமதி முடங்கி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை … Read more

இந்தியா எங்களுக்கு செய்த உதவி., விரைவில் இந்தியாவில் சுற்றுபயணம்..! – வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பேட்டி..!

உக்ரைன் நாட்டு போரின் போதும், கொரோனா வைரஸ் பாதிப்பின் போதும் இந்தியா தங்களுக்கு பெரும் உதவி செய்ததாக வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். விரைவில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் போரின் பொது இந்திய மாணவர்களை மீட்டது போலவே வங்க தேச மாணவர்களையும் மீட்டதாக நெகிழ்ந்து பேசியுள்ளார் ஹசினா. இரு நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியான நல்லிணக்கம் நிலவுவதாகவும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ரோஹிங்கியாக்கள் வங்கதேச … Read more