17 கொலை செய்த சைக்கோ கொலைக்காரனின் கண்ணாடி பல மில்லியனுக்கு விற்பனை – காரணம் இதுதான்!

தற்போது, சைக்கோ கொலைக்காரர்கள் தான் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளனர். இதற்கு, நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சீரியல் கில்லர்கள் குறித்த வெப்-சீரிஸ், திரைப்படங்கள், ஆவணப்படங்கள்தான் இணையத்தில் ஹிட் அடிக்கின்றன. மேலும், இதுபோன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் டிஆர்பி எகுறுகின்றன.   இதுபோன்ற டிரெண்ட்கள் நல்லதா, கெட்டதா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க, சைக்கோ கொலைக்காரர்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கும், அதுகுறித்த பொருள்களை வாங்கவும் லட்சக்கணக்காணோர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க தயாராக உள்ளனர்.  அந்த வகையில், அமெரிக்க … Read more

சோமாலியாவை வாட்டும் வறட்சி | பறிபோகும் குழந்தைகளின் உயிர்: ஐ.நா. கவலை

மோகாதிஷு: சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக அங்கு ஏராளமான குழந்தைகள் பலியாகி வரும் துயர நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு வறட்சியினால் குழந்தைகள் மரணம் அதிகரித்து வருவதாக சோமாலிய அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சோமாலியாவின் பல பகுதிகள் வறட்சி நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சோமாலியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் சோமாலியாவில் நிலைமை மிக … Read more

அணுஆயுத மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர் புடின் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்..!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்துள்ள அணுஆயுத மிரட்டல், ஆக்க சக்திகளுக்கும், அழிவு சக்திகளுக்கும் இடையிலான இறுதிகட்ட போர் அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க நினைத்தால் அணுஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று அண்மையில் ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன், 1962 ஆண்டு நிகழ்ந்த கென்னடி மற்றும் கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு பிறகு உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மனிதகுல பேரழிவுக்கான … Read more

பெலாரஸை சேர்ந்தவர் மற்றும் இரு அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நார்வே: இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் இரு மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் … Read more

nobel peace prize 2022: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 3, 4, 5 ஆம் தேதிகளில் முறையே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று (அக்டோபர் 6) இலக்கியத்துக்கான நோபல் … Read more

ஈரான் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: மாஷா அமினி மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் குடிமக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வரும் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. மாஷா அமினியின் மரணம் காரணமாக, ஈரானில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பலரை ஈரான் அரசு கைது செய்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், ஈரானில் இணையமும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாஷா அமினியின் மரணத்துக்கும், ஈரானில் போராட்டக்காரர்கள் மீது நடக்கும் வன்முறைகளுக்கு … Read more

ஆஸ்திரேலியாவின் சிறந்த மாணவர்கள் விருது பெற்ற இந்திய மாணவிகள்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் விக்டோரியன் பிரீமியர் விருதை வென்று இந்திய மாணவிகள் பெருமை சேர்த்துள்ளனர். 2021-22ம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் என்ற விருதை திவ்யங்கனா ஷர்மா என்ற இந்திய மாணவி வென்றுள்ளார். இதே கல்வி ஆண்டில் ஆராய்ச்சி பிரிவில் சிறந்த மாணவர் விருதை வென்றார் ரித்திகா சக்சேனாப் என்ற இந்திய மாணவி. இந்த விருதுகள் விக்டோரியாவில் உள்ள சிறந்த சர்வதேச மாணவர்களை பாராட்டும் விக்டோரியா அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். இதில் ரித்திகா தனது 18 வயதில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்தார், இப்போது ஸ்டெம் … Read more

'இந்து வெறுப்புக்கு பிரிட்டனில் இடமில்லை' – லண்டன் நவராத்திரி விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

லண்டன்: பிரிட்டனில் இந்துஃபோபியாவுக்கு இடமில்லை என்று பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய நவராத்திரி விழாவாக அறியப்படும் லண்டன் நவராத்திரி விழாவில் லேபர் கட்சித் தலைவர் உரையாற்றினார். விழாவில் நூற்றுக்கணக்கான பிரிட்டன் வாழ் இந்தியர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய கேர் ஸ்டார்மர், “நம் நாட்டில் நிறைய பேர் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சமீப ஆண்டுகளாக வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு நடக்கும் பிரிவினை அரசியல் சோர்வைத் தெருகிறது. மேலும் … Read more

பாகிஸ்தானில் பஸ் – லாரி மோதல்: பலி 11

கராச்சி: பாகிஸ்தானில் பயணியர் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ௧௧ பேர் பலியாகினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் ஜம்ஷோரோவிலிருந்து கராச்சி நோக்கி பயணியர் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட ௧௧ பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ௧௩ பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பஸ் டிரைவர் துாங்கியதால் எதிரே வந்த லாரி மீது மோதி … Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் – இந்தியா புறக்கணிப்பு!

ஜெனிவா, இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. ‘இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2012 – 2014 ல், அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், அந்த தீர்மானங்கள் இரண்டு முறை தோல்வி அடைந்தன. … Read more