"எதிர்ப்பு குரல்கள் எரிமலையாக வெடித்து சிதறும்" – ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா!

வாஷிங்டன், ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானிய இளம் பெண் மஹ்சா அமினியை போலீசார் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் பெண்கள், தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா களமிறங்கியுள்ளார். முன்னதாக ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் உள்ளிட்ட முன்னணி பிரெஞ்சு நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரியங்கா சோப்ராவும் சமூக … Read more

பாகிஸ்தானில் கைதிகளை பார்க்க வரும் பெண்கள் பலாத்காரம்| Dinamalar

லாகூர்: பாகிஸ்தான் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அட்டோக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் உள்ளிட்ட பெண்களை, சிறை பணியாளர்கள் பலாத்காரம் செய்துள்ளனர் என மாநில உளவு துறை மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.அட்டோக் சிறையில் போதை பொருள் பயன்பாடும் அதிகமாக உள்ளது. மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் அதிகமாக அடைக்கப்பட்டுள்ளனர். சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் சிறையில் வலம் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.51 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 55 லட்சத்து 47 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

உக்ரைன் போர் | அணு ஆயுதம் குறித்து புதின் ஜோக் அடிக்கவில்லை: பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் பேசுவதை வெறும் பகடி என்று கடந்து செல்ல முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மான்ஹாட்டன் நகரில் ஊடக உலகின் ஜாம்பவானான ரூபர்ட் மர்டாக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். ஜனநாயகக் கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய பைடன், 1962க்குப் பின்னர் அமெரிக்கா மிகப் பெரிய அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை. அப்போது … Read more

கைகளால் பிடிமானம் இன்றி 1904 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த ஸ்டண்ட் வீரர்

லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் வீரர் ஒருவர் 1904அடி தூரத்திற்கு கைகளால் பிடிமானம் இன்றி மோட்டார் சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 32 வயதான Arunas Gibieza என்ற வீரர் தான் இத்தகைய சாதனை முயற்சியில் ஈடுபட்ட நபராவார். ,இதற்கு முன்பு 1860அடி தூரத்திற்கு கைகளால் பிடிமானம் இன்றி மோட்டார் சைக்கிளை ஓட்டியதே சாதனையாக இருந்து வந்தது.  Source link

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு -அமெரிக்கா கடும் கண்டனம்!

வாஷிங்டன், தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த பயங்கர சம்பவத்தில், 38 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம்

கொழும்பு, இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனையும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே, பொருளாதார சிக்கலில் இருந்து மீள சர்வதேச நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கைக்கு ரூ.23 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்க சம்மதம் தெரிவித்து சர்வதேச நிதியம் பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், இந்த கடனை இறுதி செய்வதற்கு முன்பு, … Read more

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தி கொலை – பின்னணி தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தி, கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், ஹோசிராபூர் மாவட்டம், ஹர்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங் (36). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இவர்களது 8 மாத பெண் குழந்தை ஆரூஹி. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மெர்சட் பகுதியில் குடும்பத்துடன் வசித்த ஜஸ்தீப் சிங், அங்கு சரக்கு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்தார். அவரது அண்ணன் அமன்தீப் சிங்கும் … Read more

இன்று உலக பருத்தி தினம்| Dinamalar

பருத்தியின் முக்கியத்துவத்தை உணர, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 07 அன்று உலக பருத்தி தினம் கொண்டாடப்படுகிறது. பருத்தியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் குறிக்கோள்.விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இது வறட்சியை தாங்கி விளையும் பயிர் என்பதால் உற்பத்தி செலவு குறைவு. உலகின் ஜவுளித்தேவையில் 27 சதவீதத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது. பருத்தி, துணி உலகில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. … Read more

சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!

உலகின் முன்னணி சமூகவலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவன சந்தை மதிப்பீடு 2022ம் ஆண்டு முதலே சரிவை சந்தித்து வரும் நிலையில், பேஸ்புக் நிறுவனத்தில்,கடந்த மே மாதம் முதல் புதிய ஆட்சேர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது பேஸ்புக் நிறுவனம் சத்தம் இல்லாமல் பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, செயல்திறன் மோசமாக உள்ளதாக கருதப்படும் ஊழியர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்தகைய ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் … Read more