ஜப்பான் பிரதமர் அபேவின் நினைவு நிகழ்ச்சி ..! – பிரதமர் மோடி பங்கேற்பு ..!

ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கடந்த ஜூலை 8ம் தேதி அன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் . இச்சம்பாவம் ஜப்பான் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே என்பது குறிப்பிடத்தக்கது. ஷின்ஜோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ந் தேதி டோக்கியோவில் நடந்தது. … Read more

கணவனை கவனித்துக் கொள்ள பெண்கள் தேவை… அதிசய மனைவியின் அசத்தல் விளம்பரம்!

இரண்டு மனைவி கான்செப்ட்… மனைவியே தமது கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது… இதுவெல்லாம் சினிமாவில் தான் நடக்கும்…. நிஜவாழ்வில் நிகழ சாத்தியமில்லை என்ற உலகளாவிய கூற்றை தகர்த்தெறிந்துள்ளார் தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்ற பெண்மணி. 44 வயதாகும் இந்த பெண் அண்மையில் விளம்பர வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். உலக அளவில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ள அந்த விளம்பரத்தில், ‘என்னுடைய கணவரை சிறப்பாக கவனித்து கொள்ள மூன்று பெண்கள் தேவை. … Read more

குப்பையாய் செவ்வாய்| Dinamalar

செவ்வாய் கோள் ஏற்கனவே விண்வெளி குப்பையாகி விட்டது என அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணி 1960ல் இருந்து துவங்கியது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம், இந்தியா, யு.ஏ.இ., சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை செலுத்தியுள்ளன. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ரோவர், ஆர்பிட்டர்களின் எடை, தற்போது அங்கு செயல்படும் ரோவர், ஆர்பிட்டர்களின் எடையுடன் ஒப்பிடப்பட்டது. இதில் இதுவரை 7118 கிலோ விண்வெளி குப்பை செவ்வாயில் விடப்பட்டுள்ளன என … Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா வென்றார்!| Dinamalar

லண்டன்: ஆண்டின் சிறந்த பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் ராணி 2ஆம் எலிசபெத் விருதை வென்றார். மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் நினைவாக அவரது பெயரில் முதன்முறையாக இந்த ஆண்டு முதல், “ராணி எலிசபெத் II விருது” வழங்கும் விழா லண்டனில் நடந்தது. இதில், “ஆண்டின் சிறந்த பெண்ணாக” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார். அவருடைய பெற்றோர் அவர் சார்பாக விருதை பெற்றுக் கொண்டனர். சுயெல்லா … Read more

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்யா ஆதரவு!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 77வது பொதுச் சபையில் உரையாற்றிய லாவ்ரோவ், “ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தின் மூலம் பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயகமாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். அவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக ஆக்கப்பட வேண்டும்” என்று  கூறினார். ஐநா … Read more

பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது: ஜெய்சங்கர்| Dinamalar

ஐக்கிய நாடுகள்: இந்தியாவின் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அவர் மேலும் பேசியதாவது: பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், துளியளவு கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. இந்த அணுகுமுறை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது. எங்கள் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக்கறையை … Read more

அணு ஆயுதங்களை கைவிட மாட்டேன்: சூளுரைக்கும் கிம் ஜாங் உன்னின் அதிரடி ஏவுகணை

தென் கொரிய மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்ளவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக வட கொரியா அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. கொரிய தீபகற்பத்திற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த வாரத்தில் வரவிருக்கும் நிலையில், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை, சவால்விடும் நடவடிக்கை என சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர். தென் கொரியாவின் இராணுவத்தின் கூற்றுப்படி, வடக்கு பியோங்யாங்கின் டேச்சோன் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து காலை 7 … Read more

எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கருப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது. இந்த … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.98 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 கோடியே 99 லட்சத்து 52 ஆயிரத்து 013 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை … Read more

ரஷ்யாவில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு| Dinamalar

மாஸ்கோ ; ரஷ்யாவில் ‘கோஸ்டா – 2’ என்ற கொரோனா போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வவ்வால்களிடம் ‘கோஸ்டா – 2’ என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இது ‘சர்பிகோவைரஸ்’ என்ற ‘சார்ஸ் கோவிட் 2’ கொரோனாவின் துணை வகையை சேர்ந்தது. இது மனித செல்களையும் தாக்கும் வாய்ப்புள்ளதால் மனிதர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக அமையலாம். இந்த வைரஸ் கொரோனா தடுப்பூசியில் இருந்து கிடைக்கும் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறனுடையது. இந்த … Read more