சீனாவில் புதிதாக 1,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 2,038 பேருக்கு … Read more

தைவானுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு

தைவானுக்கு ஒரு பில்லியன் டாலருக்கும் மேலாக ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கப்பல் ஏவுகணை தடுப்பு சாதனங்கள், வானில் இருந்தே வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் மற்றும் ஹார்பூன் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வாஷிங்டனில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு, தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும், சீனாவின் உள் விவகாரங்களில் … Read more

மெக்சிகோவில் கால்பந்து போட்டியில் துப்பாக்கிச்சூடு; முன்னாள் மேயர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் மோரேலோஸ் மாகாணம் யேகாபிக்ஸ்ட்லா நகரில் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நகரின் முன்னாள் மேயர் ரெபுஜியோ அமரோ லூனா உள்பட ஏராளமானோர் கால்பந்து போட்டியை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் சிலர் கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிர் பயத்தில் அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த … Read more

தைவானுக்கு ரூ.8,688 கோடிக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்; சீனா எதிர்ப்பு

வாஷிங்டன், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்கள் தொடர்நது தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் தைவானுக்கு 1.09 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8ஆயிரத்து … Read more

வெளிநாடு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்ச இலங்கை திரும்பினார் – வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கொழும்பு: வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச 7 வாரங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார். கொழும்புவின் மையப் பகுதியில் உள்ள அரசு வீட்டில் அவர் பலத்த பாதுகாப்புடன் தங்கியுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம்அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த இந்தப் போராட்டம் கடந்த ஜூலை மாதம் உச்சகட்டத்தை எட்டியது. பொதுமக்கள் … Read more

பாகிஸ்தானில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு

பாகிஸ்தானில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது. 1975-ம் ஆண்டுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 27.3 சதவீதமாக உயர்ந்தது. பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் அதன் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. Source link

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு; திங்கட்கிழமை முடிவுகள் வெளியாகிறது

லண்டன், போரிஸ் ஜான்சன் ராஜினாமா இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நிகழ்ச்சிகளை நடத்திய விவகாரத்தில் சொந்த கட்சியான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது. இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் … Read more

வால்மார்ட் கட்டிடத்திற்கு மிரட்டல்: எரிபொருள் தீர்ந்ததும் விமானத்தை தரையிறக்கிய விமானி..போலீசார் விசரணை

வாஷிங்டன், அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி ஒருவர் விடுத்த மிரட்டல் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுமார் 3 மணி நேரம் 29-வயதான விமானி சுற்றி வந்தார். இந்த நபருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருபக்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்ட் அங்காடியில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் … Read more

டிரெண்ட் ஆன ஒற்றை வார்த்தை| Dinamalar

கீவிவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, பல லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி உள்ளனர். போர் துவங்கி ஆறு மாதம் ஆகியுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான சண்டையின் தீவிரம் குறையவில்லை. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மக்களும், அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், இணைந்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒற்றை வார்த்தை டிரெண்ட் ஆகி வருகிறது. அவர்கள் … Read more

மெக்சிகோவில் விவேகானந்தர் சிலை : ஓம்பிர்லா திறந்து வைத்தார்| Dinamalar

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ பல்கலை.யில் விவேகானந்தர் சிலையை பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார் . பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பி்ர்லா தலைமயிலான பார்லி., குழு, நட்பு முறை பயணமாக லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோ சென்றுள்ளது. அங்குள்ள ஹிடால்கோ நகரில் மெக்சிகோ பல்கலை. வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர் சிலையை சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார். பின்னர் மெக்சிகோ நாட்டு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளிடையே பொருளாதாரம், வணிகம் மற்றும் கலாச்சாரம் … Read more