மலேசியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள்.!

ஆப்ரிக்காவில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். செலங்கூர் துறைமுகத்திற்கு வந்த கப்பலில், ஆபத்தான பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டிருந்த 3 கண்டெய்னர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 6,000 கிலோ யானை தந்தங்களை இருந்துள்ளன. இது தவிர, காண்டாமிருக கொம்புகள், புலியின் எலும்புகள், எறும்பு தின்னியின் செதில்கள் என 144 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய கடத்தல் நடந்துள்ளது தெரியவந்தது. Source link

இணையத்தில் வைரலாகிய இம்மானுவேலை தெரியுமா?

“இம்மானுவேல்… இம்மானுவேல்…” இணையத்தில் கடந்த இரு தினங்களாக நெருப்புக் கோழி ஒன்றின் வீடியோ வைரலாகி வருகின்றது. அமெரிக்காவில் தெற்கு ஃபுளோரிடாவில் உள்ளது நக்கில் பம்ப் பண்ணை. இப்பண்ணையில் பணிபுரியும் டைய்லர் ப்ளேக் என்ற பெண் தனது டிக்டாக் பக்கத்தில் அப்பண்ணை குறித்தும், அப்பண்ணையில் உள்ள விலங்குகளின் தகவல்கள் குறித்தும் நகைச்சுவையான தொனியில் வீடியோ பகிர்ந்து வருகிறார். தனது வீடியோக்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்யும் வீடியோக்களில் நெருப்புக் கோழி … Read more

Naked Crepe: "இட்லி, தோசை"க்கு என்ன பெயர் பாருங்க.. இந்தியர்களை உலுக்கிய ஹோட்டல்!

அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் இட்லி, தோசை, மசால் தோசை, சாம்பார் வடைக்கு அதன் ஒரிஜினல் பெயர்களை வைக்காமல் ஆங்கிலமயப்படுத்தி பெயர் வைத்திருப்பதால் அந்த ஹோட்டலுக்கு வரும் தென்னிந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். பெயரில் என்ன இருக்கு என்று சொல்வார் ஷேக்ஸ்பியர். ஆனால் அதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இந்திய உணவகம் அப்படியே எடுத்துக் கொண்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம், பரம்பரை பரம்பரையாக, பல காலமாக சொல்லப்பட்டு … Read more

கால நிலை மாற்றத்தின் விளைவால், இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை… கடற்கரையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்

இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதன் எதிரொலியாக அங்குள்ள பிரைட்டன் பீச்சில் ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் திங்கள் மற்றும் செவ்வாயன்று வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை விட அதிகரிக்கக்கூடும் என கணித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், சில பகுதிகளில் ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து சில பள்ளிகளுக்கு விடுமுறையும் … Read more

சமையல் எண்ணெய் கொடுத்தால் பீர்… பண்டமாற்று முறைக்கு மாறிய ஜெர்மனி

பண்டமாற்று முறையை பற்றி நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். நாணயங்கள் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத காலத்தில், அம்முறை முக்கிய பரிவர்த்தனை முறையாக இருந்தது. ஆனால் நாணயங்கள் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து பண்டமாற்று முறை மெதுமெதுவாக வழக்கத்தில் இருந்து மறைந்து போனது. இருப்பினும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு முடிவுக்கு வராத நிலையில், அதன் காரணமாக ஐரோப்பா முழுவதும் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்பொழுது நூதனமான பண்டமாற்று முறை மீண்டும் அங்கே நடைமுறைக்கும் வந்துள்ளது.  … Read more

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சி: ஈரான்

தெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்தார். பாலஸ்தீனம், அமீரகம், சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு அரசியல் ரீதியாக அவர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அமெரிக்கா – மத்திய கிழக்கு நாடுகள் இடையே உள்ள உறவுக் குறித்து பைடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பைடனின் இந்தப் பயணத்தை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து … Read more

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில்  3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். சத்தம் கேட்டு பொதுமக்களில் துப்பாக்கி வைத்திருந்த நபர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பதிலுக்குச் சுட்டார். இதில் அந்த மர்ம நபரும் உயிரிழந்தார். இதனால், இந்த துப்பக்கிச்சூட்டில் மொத்தமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படிக்க | அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு; சிகாகோவில் 5 பேர் … Read more

US Mall Shooting: வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் பலியாகினர். இறுதியில், அந்த மர்ம நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவு விடுதிகள் அமைந்த பகுதியில் துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, சத்தம் … Read more

வங்காள தேசத்தில் இந்து மக்கள் வீடு, கடைகள் சூறையாடல்; தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம்

டாக்கா, வங்காள தேசத்தில் இந்து மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து, அவர்களது வீடுகள், கடைகளை, கொள்ளையடித்தும் மற்றும் சூறையாடியும் சென்ற சம்பவத்திற்கு அந்நாட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மதசார்பற்ற ஒரு நாட்டில் சமூக கலவரங்களை எந்த சூழ்நிலையிலும் ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள உத்தரவில், விரும்பத்தகாத தாக்குதலை தடுக்கும் சூழலை ஏற்படுத்த தவற விடப்பட்டதா? மற்றும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் போலீசார் … Read more

வணிக வளாகத்தின் உணவு கூடத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 4 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் இந்தியானா மாகாண வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர். வணிக வளாகத்தின் உணவு விற்பனை கூடத்திற்குள் புகுந்த மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார். கூட்டத்தினுள் இருந்த ஒருவர் பதில் தாக்குதல் நடத்தினார். ஒருவருக்கு ஒருவர் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டதில் மர்ம நபர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். Source link