இன்று உலக தேங்காய் தினம்| Dinamalar

தாயைப் போல தாராள குணம் கொண்டது தென்னை. அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் மனிதனுக்கு தேவைப்படுகிறது. இந்தத் தென்னை குறித்த விழிப்புணர்வுக்காக செப்.2 ல் ‘உலக தேங்காய் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஆசியா முழுவதும் தென்னை பரவலாக இருந்தாலும், இலங்கை, இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் அதிகம் சாகுபடியாகிறது. பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கு இணையான ஊட்டச்சத்து தேங்காயில் உள்ளது. ஐந்து ஆண்டுகளில் மகசூல் தரக்கூடியது. அறுபது ஆண்டுகள் வாழும். தேங்காய் விளைச்சலில் உலகில் … Read more

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் பிரதமரின் மனைவிக்கு பத்தாண்டு சிறை

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி ரோஸ்மா மன்சோருக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  தம்பதியருக்கு சொந்தமான சொத்துகளில் 12,000 தனிப்பட்ட நகைகள், 567 ஆடம்பர கைப்பைகள், 423 கைக்கடிகாரங்கள் மற்றும் 26 மில்லியன் டாலர் ரொக்கம் ஆகியவற்றை … Read more

பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் மனு| Dinamalar

வாஷிங்டன்:பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் மீது, இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தொடுத்துள்ளார். பணப்பரிமாற்றம் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி டாக்டர் லோகேஷ் வய்யுரு. இவர் இரைப்பை குடல் நிபுணராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்: இந்திய பிரதமர் மோடி, … Read more

அமெரிக்காவில் ஹிந்துவை அவமதித்த இந்தியர் கைது| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துவை, அவமதிக்கும் வகையில் நடந்த மற்றொரு இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பெர்மான்ட் பகுதியில் வசிக்கும், இந்திய வம்சாவளியான கிருஷ்ணன் ஜெயராமன், சமீபத்தில் அங்குள்ள உணவகத்துக்கு சென்றுள்ளார்.அப்போது, அங்கிருந்த இந்தியரான தெஜிந்தர் சிங் என்பவர், கிருஷ்ணன் ஜெயராமனை அசைவ உணவு சாப்பிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு, கிருஷ்ணன் ஜெயராமன் மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தெஜிந்தர் சிங் அவரை தாறுமாறாக திட்டியுள்ளார். ஹிந்து மதம் குறித்தும் அவதுாறாக பேசிய அவர், கிருஷ்ணன் ஜெயராமன் … Read more

உய்கர் முஸ்லிம்கள் சித்ரவதை சீனா மீது ஐ.நா., குற்றச்சாட்டு| Dinamalar

ஜெனீவா:’சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்துள்ளது, மனித குலத்துக்கு எதிரான குற்றம்’ என, ஐ.நா.,வின் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம் பழங்குடியின மக்கள், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.ஆனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, ஐ.நா.,வின் மனித உரிமை … Read more

அடடா… அமைச்சர்னா இப்படி இல்ல இருக்கணும்!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் போர்ச்சுக்கல் நாட்டுக்கு அண்மையில் சுற்றுலா சென்றுள்ளார். கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு சுற்றுலா போன இடத்தில் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே லிஸ்பனில் உள்ள பிரபல சான்டா மரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தாயும், சேயும் மேல்சிகிச்சைக்காக சாவ் பிரான்சிஸ்கோவில் உள்ள சேவியர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டனர். ஆம்புலன்சில் பயணிக்கும்போதே அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடையவே அவரை மயக்கத்தில் இருந்து … Read more

போர்ச்சுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.!

போர்ச்சுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். போர்ச்சுகலில் இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் லிஸ்பனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பேறுகால பிரிவில் படுக்கை வசதி இல்லாததால், மற்றொரு மருத்துவமனைக்கு அவரை மாற்றும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்நாட்டில், பணியாளர் பற்றாக்குறை போன்றவற்றால் அவசரகால மகப்பேறு சேவைகளை தற்காலிகமாக மூடுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் சீனாவின் செங்டு நகரில் பொது முடக்கம்.!

புதிய வகை கொரோனா தொற்று தலைதூக்கியுள்ளதால் சீனாவில் 1 கோடியே 60 லட்சம் பேர் வசிக்கும் செங்டு நகரம் இன்று முதல் மூடப்படுகிறது. அந்நகரில் 147 பேருக்கு புதிய வகை தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு ஒருவர் அதாவது கடந்த 24 மணிநேரத்தில்  தொற்று பாதிப்பு இல்லாத ஒரு நபர் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் பழமைவாத கட்சித் தலைவர் தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு துவங்குகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான … Read more

அமெரிக்காவில் 20,000+ முறை தேனீக்கள் கொட்டியதில் கோமா நிலைக்குச் சென்ற இளைஞர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேனீக்கள் 20,000-க்கும் மேற்பட்ட முறை கொட்டியதில் இளைஞர் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேந்தவர் ஆஸ்டின் பெல்லமி (20). தனது நண்பருக்காக பெல்லாமி எலுமிச்சை மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார், அவ்வாறு ​​மர வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர் தவறி தேனீக்கள் கூட்டை வெட்டிவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆஸ்டினை சூழ்ந்த தேனிக்கள் அவரை முற்றிலுமாக சூழ்ந்துகொண்டு கொட்ட தொடங்கின. இதில் தேனீக்கள் அவரை 20,000-க்கும் மேற்பட்ட முறை … Read more