ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்

தாஷ்கண்ட், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் … Read more

சீனாவில் புதிதாக 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,062 பேருக்கு … Read more

கல்வான் மோதலுக்கு பிறகு முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் பிரதமர் மோடி- ஜி ஜின்பிங்?

தாஷ்கண்ட், 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர மோதல்களுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நாளை நேருக்கு நேர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. கொரோனா தொற்று … Read more

வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் ராணியின் உடல்பல கி.மீ., துாரம் நின்று பொதுமக்கள் அஞ்சலி| Dinamalar

லண்டன்-மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், லண்டனில் உள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பல கி.மீ., துாரம் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில், அவரது உயிர் பிரிந்தது. ஸ்காட்லாந்தில் இருந்து, விமானம் வாயிலாக ராணியின் உடல், 13ல் லண்டன் கொண்டு வரப்பட்டது. விமான நிறுத்தம் ராணி வசித்த … Read more

சிறுத்தைகளை அழைத்து வர இந்தியாவில் இருந்து நமீபியா சென்று அடைந்த சிறப்பு விமானம்..!!

விண்ட்ஹோக், இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘சீட்டா’ ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதே நேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது. 5 … Read more

கனடாவில் ஹிந்து கோயில் உடைத்து சேதம்நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

டோரன்டோ:’கனடாவில், பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண் கோயிலை சேதப்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதிய காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்தியா அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, கனடாவில் உள்ள இந்திய துாதரகம், ‘இச்செயலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதில், கனடா அரசு விரைவில் விசாரணை நடத்தி, பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளது.கனடா எம்.பி.,யும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சந்திரா ஆர்யா, ‘சுவாமி நாராயண் கோவில் … Read more

ரஷ்ய அதிபரை கொல்ல முயற்சி| Dinamalar

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கொலை முயற்சியில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகிஉள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்து, இன்று வரை நீடித்து வருகிறது. போர் துவங்கியதில் இருந்தே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில், புடினை கொல்ல முயற்சி நடந்ததாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, ‘ஈரோ வீக்லி நியூஸ்’ என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் … Read more

முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு காலமானார்| Dinamalar

கோலாலம்பூர்:மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, 86. வயது முதிர்வு காரணமாக காலமானார். தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் மலேசிய – இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் டத்தோ சாமிவேலு. இவர் பொதுப்பணி எரிசக்தி, தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 29 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். மலேசியாவில் உள்ள அவரது வீட்டில் துாக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இவரதுமறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர்:மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ … Read more

கனடாவில் கோவில் சேதம் மத்திய அரசு கண்டனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரன்டோ-‘கனடாவில், உள்ள சுவாமி நாராயண் கோவிலை சேதப்படுத்திய, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்தியா அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இதை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்தியதுடன் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதினர்.இதையடுத்து, கனடாவில் உள்ள இந்திய துாதரகம், ‘இச்செயலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதில், கனடா அரசு விரைவில் விசாரணை நடத்தி, பயங்கரவாதிகள் மீது … Read more

சிவிங்கிகளை அழைத்து வரசிறப்பு விமானம் தயார்| Dinamalar

வின்தோயக்-இந்தியாவுக்கு புறப்பட தயாராக உள்ள சிறுத்தை இனத்தைச் சேர்ந்த எட்டு சிவிங்கிகளை அழைத்து வர, புலி உருவத்துடன் கூடிய சிறப்பு விமானம், நமீபியாவை சென்றடைந்துள்ளது. நம் நாட்டில், சிவிங்கிகள் அழிந்துபோன இனமாக, 1952ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் மத்திய அரசு, கடந்த ஜூலையில் ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஐந்து பெண், மூன்று ஆண் என, எட்டு சிவிங்கிகளை நன்கொடையாக வழங்குவதாக, நமீபியா அறிவித்தது. இந்த சிவிங்கிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் … Read more