மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை சட்டை இல்லாமல் பார்க்க சகிக்காது.. தன்னை கிண்டலடித்த தலைவர்களுக்கு புடின் பதிலடி..!

ரஷ்ய அதிபர் புடின் சட்டை அணியாமல் போஸ் கொடுத்ததை பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு பிரதமர்கள் கிண்டலடித்திருந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சட்டை அணியாவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது என விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டின் போது, புடினை விட நாம் கடுமையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட அவரைப்போலவே சட்டை அணியாமல் குதிரை சவாரி செய்ய வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் … Read more

கழிவறை நீரில் இருந்து பீர் : செம டேஸ்ட் என குடிமகன்களிடம் வரவேற்பு

சிங்கப்பூரில், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட கழிவறை நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிங்கப்பூர் அரசு ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கழிவு நீரில் உள்ள அசுத்தமான துகள்களை அகற்றி, பின் புற ஊதாகதிர்வீச்சின் மூலம் அதில் உள்ள கிருமிகளை அழித்து, இறுதியாக சுத்திகரிக்கப்பட்ட நீரை நியூவாட்டர் என்ற பெயரில் விற்பனை செய்தது. அந்த நியூவாட்டரை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நியூபுரூ  என்ற பீர் வகை குடிமகன்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. … Read more

சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் பீர்| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட ‘பீர்’ மதுபானம், ‘குடி’மகன்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால், அண்டை நாடான மலேஷியாவில் இருந்து, குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து, ‘நியூவாட்டர்’ என்ற பெயரில், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது தவிர, உப்பு நீரும் குடிநீராக மாற்றப்படுகிறது.இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த புருவெர்க்ஸ் நிறுவனம், நியூவாட்டரை பயன்படுத்தி, பீர் மதுபானம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more

அருவருப்பான தலைவர்கள்: புடின் பதிலடி| Dinamalar

மாஸ்கோ :”மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர்,” என, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார். கராத்தே வீரரான ரஷ்ய அதிபர் புடின், வெற்றுடம்புடன் அவ்வப்போது செய்யும் சாகசங்கள், ஊடகங்களில் வெளியாவது வழக்கம். இதை சில தினங்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ‘ஜி-7’ மாநாட்டில் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கிண்டல் செய்தனர்.இது பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘நாங்களும் உடைகளை கழற்றினால் புடினை விட வலிமையானவர்கள் என்பது … Read more

இந்திய நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை 2035ல் 67.5 கோடியாக இருக்கும்: ஆய்வறிக்கையில் தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்-‘இந்திய நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை, 2035ல், 67.5 கோடியாக இருக்கும்’ என, ஐ.நா., அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா., உலக நகரங்கள் குறித்த அறிக்கையை, நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவல் காலத்தில், நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால், மக்கள் நகரங்களில் இருந்து, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது, இந்த நிலை மாறி, மக்கள் மீண்டும் நகரங்களுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர்.படிப்பு, வேலை, தொழில் … Read more

அனைத்து மதங்களையும் மதித்தால் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம் – ஐ.நா

நியூயார்க், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்பவரை, ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட, ‘தனியார் செய்தி நிறுவனத்தின்’ இணை நிறுவனர் முகமது சுபைர் கைது குறித்தும், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:- … Read more

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலை முடக்கம்.. நச்சு நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நடவடிக்கை..!

பெல்ஜியத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய சாக்லெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் உணவை நச்சுப்படுத்தும் நுண்ணுயிரிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலை மிகப்பெரிய அளவில் திரவ சாக்லேட்டுகளை தயாரித்து வந்தது. ஜூன்  25 ஆம் தேதிவரை சப்ளை செய்யப்பட்ட சாக்லெட்டுகளை கடைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அத்தொழிற்சாலை தற்போது தனது டீலர்களை கேட்டுக்கொண்டுள்ளது. மூன்று மாத கால தீவிர ஆய்வுக்கு பின்னரே இந்த தொழிற்சாலையில் மீண்டும் சாக்லேட் தயாரிக்க அனுமதி அளிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் … Read more

இந்திய நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை 2035ல் 67.5 கோடியாக இருக்கும்: ஆய்வறிக்கை| Dinamalar

நியூயார்க்:’இந்திய நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை, 2035ல், 67.5 கோடியாக இருக்கும்’ என, ஐ.நா., அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா., உலக நகரங்கள் குறித்த அறிக்கையை, நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவல் காலத்தில், நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால், மக்கள் நகரங்களில் இருந்து, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது, இந்த நிலை மாறி, மக்கள் மீண்டும் நகரங்களுக்கு படையெடுக்கத் துவங்கி விட்டனர்.படிப்பு, வேலை, தொழில் என, பல காரணங்களால், மக்கள் … Read more

சட்டை இல்லாமல் பார்க்க "கேவலமாக" இருப்பீர்கள் – ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்களுக்கு புதின் பதிலடி!

மாஸ்கோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மேல் சட்டையின்றி, வெறும் மார்போடு குதிரை சவாரி செய்யும் புகைப்படம் வெளியாகியது. ரஷிய அதிபர் புதின் ஒரு திறமையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆவார். அவர் பலமான மனிதர் என்பதை காட்டுவதற்காக அவருடைய இது போன்ற புகைப்படங்கள் ரஷிய அதிபர் மாளிகையால் அடிக்கடி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்த பின், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் புதினைப் பற்றி கேலி … Read more

சீனா முழுவதும் 22 பேருக்கு மட்டுமே கொரோனா : பீஜிங், ஷாங்காய் நகரங்களில் பாதிப்பு இல்லை

4 மாதங்களுக்கு பிறகு சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் அந்நகரங்களில் கொரோனா தொற்று பரவிய நிலையில், தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளாகின. இந்நிலையில், பீஜிங், ஷாங்காயில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதுடன், நாடு முழுவதும் 22 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.  Source link