இலங்கை புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. இதனால், மின் உற்பத்தி தடை, விலைவாசி உயர்வு என, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்னைகள் தீவிரமடைந்ததால், அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர். … Read more

ஹெனான் மாகாணத்தில் வங்கிக்கணக்குகள் முடக்கம்.. வங்கிகளை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்!

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள 4 சிறிய கிராமப்புற வங்கிகளில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கிகளைப் பாதுகாக்க பீரங்கிகளுடன் ராணுவம் நிறுத்தப்ப்டடுள்ளது. மீண்டும் தியானமென் சதுக்கப் படுகொலைகளை நினைவுபடுத்தும் அச்சமூட்டும் காட்சி போல இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 1989 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது சீனா ராணுவ அடக்குமுறையை ஏவியது. அதில் 241 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கில் காயம் … Read more

மருந்துக்கு தவிக்கும் பாகிஸ்தான்| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் சிக்கித் தவிக்கிறது. அங்கு, பயங்கரவாத பிரச்னையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, மனநல பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படும் ‘லித்தியம் கார்பனேட்’ குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வலிப்பு நோய்க்கான ‘குளோனாசெபம்’ போன்ற மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவைகளுக்கான மாற்று மருந்துகள் … Read more

யு.ஏ.இ.,யில் ஆசிய கோப்பை கிரிக்கெட்| Dinamalar

புதுடில்லி: இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (யு.ஏ.இ.,) மாற்றப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார். புதுடில்லி: இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் … Read more

இலங்கையின் 9-வது அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு: புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று பொறுப்பேற்கிறார்

கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக ரணில் விக்ரமசிங்க(73) நேற்று பதவியேற்றார். ‘நான் ராஜபக்சவின் நண்பர் அல்ல’ என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இலங்கையின் புதிய பிரதமராக, மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தன இன்று (ஜூலை 22) பதவி ஏற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், அதிபராக இருந்த அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவும் … Read more

திருமண கோஷ்டி சென்ற படகு நதியில் கவிழ்ந்து கோர விபத்து.!

பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்டோர் சென்ற படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 50 பேர் வரை உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 2 படகுகளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அதிக பாரம் தாங்காமல் சிந்து நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்த போலீசார், மீட்புக் குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்த நிலையில், 48 மணி நேரம் ஆகியும் மற்றவர்களை … Read more

உலக தடகளம் ஈட்டி எறிதல்: பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஈகுனே: உலக தடகளம் ஈட்டி எறிதல் தகுதி சுற்றில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார். அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று போட்டி இன்று நடந்தது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் பங்கேற்றனர். இதில் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில், 88.39 தூரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார். … Read more

Russia Ukraine Crisis: போர்க்களத்தில் மலரும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்

சர்வதேச அளவில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும், தேவையை பூர்த்தி செய்வதில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. உக்ரேனின் துறைமுகங்களில் 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தேங்கிக் கிடப்பதால் யாருக்கும் பயனின்றி தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு … Read more

மருந்து தட்டுப்பாடு:பாகிஸ்தானில் பதற்றம்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் சிக்கித் தவிக்கிறது. அங்கு, பயங்கரவாத பிரச்னையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, மனநல பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படும், ‘லித்தியம் கார்பனேட்’ குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வலிப்பு நோய்க்கான ‘குளோனாசெபம்’ போன்ற மருந்துகளுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கான மாற்று மருந்துகள் உரிய பலன் … Read more