அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபச்சே தடுத்து நிறுத்தம்.. விமானநிலையத்தில் இருந்த பயணிகள் கடும் எதிர்ப்பு..!

அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபச்சேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மீண்டும் இலங்கைக்கு திரும்பினார். ராஜபக்சே குடும்பத்தினர் துபாய் வழியாக அமெரிக்கா செல்ல முயற்சித்து வரும் நிலையில், கட்டுநாயக்கா விமானநிலைய சென்ற பசில் ராஜபக்சேவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுத்தனர். மேலும், விமானநிலையத்தில் இருந்த பயணிகள் பசில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வெளிநாடு செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. Source link

உக்ரைனின் மைகோலைவ் நகரில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி தொடர் தாக்குதல் – 12 பேர் காயம்!

உக்ரைனின் மைகோலைவ் நகரில் ரஷ்ய படைகள் ஏவுகணைகள் மூலம் நடத்திய தொடர் தாக்குதலில் அங்கிருந்த குடியிருப்புக் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. மைகோலைவ் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய படைகள் ஒரே நாளில் அடுத்தடுத்து 19 ஏவுகணைகளை ஏவி தொடர் தாக்குதல் நடத்தியதாக மைகோலைவ் மேயர் Oleksandr Senkevych தெரிவித்துள்ளார். இதில் 2 மருத்துவமனைகள், ஒரு பள்ளி மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். Source link

ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாடு செல்ல தடை கோரி மனு.. ஜூலை 27ம் தேதி இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

ராஜபக்சே சகோதரர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு வரும் 27ம் தேதி விசாணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிதி முறைகேடு மற்றும் தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.  … Read more

பிரபல மாடல் அழகி போல் மாற 40 முறை அறுவை சிகிச்சை செய்த மாடல் அழகி.. பழைய தோற்றத்துக்கே திரும்ப மீண்டும் அறுவை சிகிச்சை!

பிரபல மாடல் அழகி கிம் கர்டாஷியன் போல் தோற்றமளிக்க 40 முறை அழகு சாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமெரிக்க மாடல் அழகி ஒருவர், தனது பழைய தோற்றத்துக்கே திரும்ப மீண்டும் அறுவை சிகிச்சை செய்து வருகிறார். 29 வயதாகும் ஜெனிபர் பம்ப்லோனா கண்கள், மூக்கு, உதடு என கடந்த 12 ஆண்டுகளில் 40 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். கிம் கர்டாஷியன் போன்ற தோற்றத்தால் பேரும், புகழும் கிடைத்தாலும், ஒரு கட்டத்தில் தனது சுய அடையாளத்தை … Read more

எரிபொருள் தட்டுப்பாடு : மிதிவண்டிகளை வாங்க ஆர்வம் காட்டும் இலங்கை மக்கள்..!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் மிதிவண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கையில், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட எரிபொருள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. பல பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மக்கள் மிதிவண்டிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். எரிபொருள் வாங்க வரிசையில் நாள் கணக்கில் நிற்பதற்கு பதிலாக மிதிவண்டிகளில் சென்று விடலாம் என எண்ணி அதனை வாங்குவதாக மக்கள் கூறுகின்றனர். Source link

ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வுகான் நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள வுகாங் நகரில் ஒரே ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொண்ட வுகாங் நகரில் 3 நாட்களுக்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியம் வரை வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தேவைகள் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு: சைக்கிளுக்கு மாறும் இலங்கைவாசிகள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கார் மற்றும் டூவீலர் வைத்துள்ளவர்கள், அதனை ஓரங்கட்டிவிட்டு சைக்கிளை பயன்படுத்த துவங்கி விட்டனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், எரிபொருள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்கு பல கி.மீ., தூரம் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஒரு சில நேரங்களில் 4 அல்லது 5 … Read more

SpaceX Accident: ஸ்பேஸ்எக்ஸ் பூஸ்டர் ராக்கெட் சோதனையில் விபத்து

SpaceX Accident: ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்பின் பூஸ்டர் ராக்கெட், சோதனையின்போது ஏற்பட்ட வெடிப்பில், ராக்கெட்டின் அடிப்பகுதியில் தீப்பிழம்புகள் எழும்பியதுடன், அந்த வளாகத்தையே புகை சூழ்ந்தது. 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும், ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் சோதனைகளில் இதுபோன்ற விபத்துகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.   தற்போது ஏற்பட்ட வெடிப்பால், ராக்கெட்டின் அடிப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகள் எழும்பியதுடன், வளாகமே கடுமையான புகையில் சூழ்ந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் கேமராவும் அடைவது தோன்றியது. இந்தத் தகவலை எலன் மஸ்க் இன்று (2022, … Read more

பனிச்சரிவில் சிக்கி 5 அடி ஆழத்தில் புதைந்திருந்த பனிச்சறுக்கு வீரரை காப்பாற்ற உதவிய நாய்..!

அர்ஜெண்டினாவின் உசுவாயா நகரில் உள்ள மார்ஷியல் மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 5 அடி ஆழத்தில் புதைந்திருந்த பனிச்சறுக்கு வீரரை விரைந்து கண்டறிந்து காப்பாற்ற உதவிய லாப்ரடார் வகை நாயை பலரும் பாராட்டி வருகின்றனர். இருவர் மலைப்பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பனிச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் உள்ளூர் அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு சக பனிச்சறுக்கு வீரர் மாயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து உள்ளூர் மீட்புக்குழுவினர் தேடுதல் மற்றும் மீட்பு பணி பயிற்சி அளிக்கப்பட்ட டேங்கோ நாயுடன் அப்பகுதிக்கு … Read more

உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய ராணுவ ஆயுதங்களின் கண்காட்சி..!

போரில் உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய ராணுவ ஆயுதங்கள், செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராகில் காட்சிப்படுத்தப்பட்டன. பிராக் கோட்டையில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் லெட்னா சமவெளியில் T-90 ரக ரஷ்ய ராணுவ பீரங்கிகள், msta ரக ஹோவிட்சர் மற்றும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை காட்சிக்காக வைக்கப்பட்டன. அதனைக் காண வந்த மக்கள், ஆயுதங்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். Source link