காங்கோ: ஐ.நா. அமைதிப்படைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ; இந்திய வீரர்கள் 2 பேர் பலி

கின்ஷசா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அந்நாட்டு மக்கள், அரசு படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், காங்கோவில் அமைதியை நிலைநாட்டவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் ஐ.நா.வின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், ஐ.நா. அமைதிப்படைகள், உள்நாட்டு படைகள் இருந்தபோதும் காங்கோவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகும் ரஷ்யா

மாஸ்கோ: 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி பார்சோவ் கூறும்போது, “நாங்கள் 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விலக இருக்கிறோம். ஆனால் இருக்கும் காலக்கட்டத்தில் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவுக்கென ஒரு விண்வெளி … Read more

ஐநா அமைப்புக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் ஐ.நா அமைதிப்படையைச் சேர்ந்த இந்திய வீரர்கள் 2 பலி.!

காங்கோவில், ஐநா அமைப்புக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் ஐ.நா அமைதிப்படையைச் சேர்ந்த  இந்திய வீரர்கள் 2 பேர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். காங்கோவில், பல வருடங்களாக தொடர்ந்து வரும்  போராளிகளின் வன்முறையில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்க ஐநா அமைப்பு தவறியதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதிப்படையைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ஐநா அமைப்பின் பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ், வன்முறை குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். Source link

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

மணிலா, பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று … Read more

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 பேர் பலி, கட்டிடங்கள் சேதம்

மணிலா: பிலிப்பைன்ஸில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸின் வடக்குப் பகுதியில் உள்ள தீவான அம்ராவில் இன்று (புதன்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக ஆக பதிவாகியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.கட்டிடங்கள் பலவும் சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை … Read more

உலக நாடுகள் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும் – சவுமிய சாமிநாதன்

ஜெனீவா, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகிறது. இது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளைக் கொண்டது. பெரியம்மை தடுப்பூசிகளே குரங்கு அம்மைக்கு எதிராக … Read more

அமெரிக்காவில் செமிகண்டக்டர் சிப் ஆலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 5200 கோடி டாலர் ஊக்கத் தொகை வழங்க ஒப்புதல்!

அமெரிக்காவில் செமிகண்டக்டர் சிப் ஆலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 5200 கோடி டாலர் ஊக்கத் தொகை வழங்கும் சிப்ஸ் சட்ட மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. சிப் தேவைகளுக்குத் தைவான், சீனா ஆகிய நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய வணிகத் துறை அமைச்சர் கினா ரைமண்டோ, தேசியப் பாதுகாப்புக் கருதிச் சிப் தயாரிப்புத் தொழிலை ஊக்குவிக்கப் பெருந்தொகை செலவிடப்படுவதாகத் தெரிவித்தார். சிப் தயாரிப்பில் ஆசியாவைச் சார்ந்திருக்கும் நிலையை … Read more

கோத்தபய ராஜபக்சே விசா நீட்டிப்பு| Dinamalar

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா நாளை (ஜூலை 28) முடிய உள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் இலங்கை திரும்புவார் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் செய்தனர். இலங்கையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜபக்சே சிங்கப்பூர் சென்றார். அந்நாட்டு அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு 14 நாள் சுற்றுப்பயண விசா வழங்கியது. கோத்தபய விரைவில் நாடு திரும்புவார் என்று … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54.67 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 68 லட்சத்து 32 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more

ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு| Dinamalar

மணிலா: பிலிப்பைன்சில் அப்ரா மாகாணம் மற்றும் மணிலா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. மணிலா: பிலிப்பைன்சில் அப்ரா மாகாணம் மற்றும் மணிலா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு … Read more