பாகிஸ்தானில் பெய்த தொடர் கனமழையால் 24 குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் 24 குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் மற்றும் இடிபாடுகள் உள்ளிட்டவற்றில் சிக்கி 48 பேர் காயமடைந்திருப்பதாகவும், 670-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கராச்சியில் கனமழையால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலையில் கொறங்கி, சடார், நிப்பா உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. சமீபத்திய பருவமழையால் 339 அடி கொள்ளளவு கொண்ட ஹப் அணையின் நீர் மட்டம் 334 அடியை எட்டியுள்ளது. … Read more

பிரிட்டன் பிரதமர் யார்? செப்டம்பர் 5ம் தேதி வரை காத்திருக்கவும்

இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்: இங்கிலாந்தின் புதிய பிரதமர் செப்டம்பர் 5ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்றும், தற்போது போரிஸ் ஜான்சனுக்குப் பின் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்க 11 பேர் போட்டியிடுகின்றனர்.  போட்டியின் ரிஷி சுனக் முன்னணியில் இருக்கிறார், ஆனால் உடனடி வரிக் குறைப்புகளின் வாய்ப்புகள் தொடர்பான அவரது கருத்து அவருக்கு எதிராக மாறலாம். “ஆறுதல் தரும்” உடனடி வரிக் குறைப்பு என்பது, எதிர்கால சந்ததியினரை மோசமாக்கும் என்று ரிஷி சுனக் கூறினார்.  பிரிட்டனின் புதிய பிரதமர் செப்டம்பர் 5ஆம் தேதி … Read more

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர் ராக்கெட் சோதனை தோல்வி.. தரைவழி சோதனையின் போது ராக்கெட் வெடித்து தீப்பிழம்பானது..!

அமெரிக்காவில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, பூஸ்டர் ராக்கெட் ஒன்று தரைவழி சோதனையின் போது திடீரென வெடித்து தீப்பிழம்பானது. விண்வெளிக்கு குறைந்த செலவில் மனிதர்களை சுற்றுலா அழைத்துச்செல்லும் முயற்சியில், அதற்கான விண்வெளி ஓடத்தை தயார் செய்யும் ஆராய்ச்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பூஸ்டர் ராக்கெட் நேற்று டெக்ஸாஸ் மாகாணத்தில் நிலத்திலேயே சோதித்து பார்க்கப்பட்டது. ஆனால், முதலில் புகையை வெளிப்படுத்திய அந்த பூஸ்டர் ராக்கெட், பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்பானது Source … Read more

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் வண்ணப்படம் – மனிதன் இதுவரை காணாத பிரபஞ்ச காட்சி!

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகியுள்ள தொலை நோக்கி கருவிதான், ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி. நாசா நிறுவனத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த தொலைநோக்கியாக இது பார்க்கப்படுகிறது.குறிப்பாக இது ஒரு அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாக இருக்கும் என்றே நம்பலாம். இந்திய மதிப்பில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகள் கடின உழைப்பில் மிகவும் … Read more

நாசா வெளியிட்ட ஆச்சரியப்பட வைக்கும் பிரபஞ்சத்தின் புகைப்படம்!

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான நாசா, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது. சுமார் ரூ.75,000 கோடிக்கும் அதிகமான மிகப்பெரிய பட்ஜெட்டுடன் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி, … Read more

பசில் ராஜபக்ச துபாய் தப்பிச் செல்ல முயற்சி: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்

கொழும்பு: ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்றபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி, பெட்ரோல், டீசல், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அங்கு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் … Read more

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்.!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருட்கள், மருந்துகள், எரிவாயு ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மணி நேர மின்வெட்டும் நிலவுகிறது. நாட்டின் பல்வேறு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் அவசர உதவி எண்ணான 1990-யை அழைப்பைத் தவிர்க்குமாறு அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அனுராதபுரம், ரத்தினபுரி, வவுனியா, முல்லைத்தீவு … Read more

ஈரானிடம் இருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை வாங்கும் ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்த ஈரானிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷ்யா வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. வெள்ளை மாளிகையில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவென், ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை ரஷ்ய படையினருக்கு இம்மாதமே கற்றுக்கொடுக்க ஈரான் தயாராகி வருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  Source link

உக்ரைன் மக்கள் அனைவருக்கும் ரஷிய குடியுரிமை ஆணையில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்

கார்கிவ், உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷியா கிட்டத்தட்ட 150 நாட்களாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைனியர்கள் அனைவருக்கும் ரஷிய குடியுரிமை வழங்குவதற்கான விரைவான பாதையை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷிய அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார். கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷிய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை கடந்த 2019-ம் … Read more

ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்க ஈரான் திட்டமிட்டுள்ளதா: அமெரிக்கா

Ukraine Invasion and Drones: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஈரான் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு இரான் வழங்கவிருக்கும் ட்ரோன்களில் சில ஆயுதங்களை தாங்கும் திறன் கொண்டவை. ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஜூலை மாத தொடக்கத்தில் ஆயுதங்களைத் தாங்கிச் செலும் திறன் கொண்ட ட்ரோன்களை பயன்படுத்துவதது தொட்ர்வான பயிற்சி அமர்வுகளை வழங்கியிருக்கலாம் என்று நம்புவதாக அமெரிக்கா கூறுகிறது. வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள்கிழமை, ஜூலை 11) செய்தியாளர்களை … Read more