இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பியோட்டம்

கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் வலுவடைந்த சூழலில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்டார். அவருடன் பாதுகாவலர்கள் இருவரும் உடன் சென்றுள்ளனர். மாலத்தீவுக்குச் சென்றடைந்த அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்தது என்ன? – இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார … Read more

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவரை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்க தகவல்!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரியா தலைவரை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. Jindayris பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஐ.எஸ். தலைவர் மகெர் அல் அகல் கொல்லப்பட்டதாக பெண்டகன் மத்திய கமாண்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் மகெர் அல் அகல் கொல்லப்பட்டதை உறுதி செய்தது. Levant பிராந்தியத்தின் ஆளுநராக மகெர் அல் அகல் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது Source link

ஜப்பான் மாஜி பிரதமர் இறுதி சடங்கு: கண்ணீருடன் வழியனுப்பிய மக்கள்| Dinamalar

டோக்கியோ : தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு டோக்கியோவில் நேற்று நடந்தது. ஜப்பான் பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. இதற்காக நாட்டின் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரெடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.கடந்த 8ம் தேதி மேற்கு ஜப்பானின் நரா என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையம் முன் சாலையில் நின்று மக்கள் மத்தியில் உரையாற்றினார். … Read more

அத்தியாவசிய சேவைகளுக்காக கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெற்றது உக்ரைன்…!

கீவ், உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உக்ரைனில் இருந்து பல மருத்துவ ஊழியர்கள் வெளியேறிய நிலையில், சில மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ள்ன. மற்ற மருத்துவமனைகள் குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் வேலையைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவியை … Read more

உலக மக்கள் தொகை நவ., 15ல் 800 கோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க் : இந்தாண்டு நவ.15ல் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.ஐ.நா. உலக மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும் நவ.15ல் 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நாளில் துல்லியமாக எட்டும் என உறுதியாக கூற முடியாது. வரும் 2030ல் உலக மக்கள் தொகை 970 … Read more

இங்கிலாந்து புதிய பிரதமர் தேர்தல்; வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக குறைவு

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்தது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்த 30 பேர்பதவி விலகினர். மொத்தம் 58 மந்திரிகள் அரசில் இருந்து வெளியேறினர். இதனால், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக … Read more

எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய எலான் மஸ்க் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்க ஒப்புக் கொண்ட எலான் மஸ்க், ஒப்பந்தத்தின் படி போலி கணக்குகள் குறித்து தரவுகளை நிறுவனம் வழங்கவில்லை எனக் கூறி ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஒப்பந்தத்தில் அனுமதித்த தொகைக்கு ட்விட்டரை வாங்க எலான் மஸ்கிற்கு உத்தரவிடுமாறு அந்நிறுவனம் அமெரிக்காவின் டெலவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. Source link

மாலத்தீவு தப்பிச் சென்றார் இலங்கை அதிபர் கோத்தபய!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய மாலத்தீவுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் நிலவி வரும் கடும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாத மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை, லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைவதற்கு முன், கடற்படை உதவியுடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறி, கடற்படைக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து … Read more

பிரேசிலில் போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையே துப்பாக்கி சூடு; 6 பேர் பலி

ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டின் மிக பெரிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனீரோவின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மங்கினோஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு குழுவினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் படையுடன் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசாருக்கும் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இந்த கடுமையான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். … Read more

இலங்கை | அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய ராஜபக்ச திடீர் மறுப்பு

கொழும்பு: கொழும்பு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் துபாய் தப்பியோட முயன்ற கோத்தபயவின் தம்பி பசில் ராஜபக்சவை போராட்டக்காரர்களிடம் சிக்கினார். அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய ராஜபக்ச மறுத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்கு முன்பேஇல்லத்தை விட்டு வெளியேறியஅதிபர் கோத்தபய, தற்போதுராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக … Read more