மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

ராஜினாமா கடிதம் கூட கொடுக்காமல் நாட்டிலிருந்து தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் எதிர்ப்பு வலுப்பதால் அங்கிருந்து இன்று சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அறிவித்தபடி கோத்தபய தனது ராஜினாமா கடிதத்தை நேற்று அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா கடிதம் எதையும் வழங்காமல் ரகசியமாக நேற்று மாலத்தீவுக்கு தப்பியோடினார். அவர், மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலத்தீவு … Read more

கோத்தபய மாலத்தீவு தப்பி ஓட்டம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

கொழும்பு, இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. மக்கள் போராட்டம் அன்னியச்செலாவணி இல்லாமை, விஷம்போல நாளும் ஏறிவரும் விலைவாசி, எரிபொருட்கள் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு என பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்ற நிலையில் இலங்கை மக்கள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர். நாட்டை இப்படியொரு நெருக்கடியில் தள்ளிவிட்டதற்கு ராஜபக்சே குடும்பத்தார்தான் காரணம் என ஒருமித்த குரலில் … Read more

அமெரிக்காவில் பணவீக்கம் 9.1%அதிகரிப்பு: 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

நியூயார்க்: அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் சீனாவில் கரோனா தொற்று அதிகரிப்பு போன்ற காரணங்களால் உலக அளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து வட்டி விகிதத்தை பெடரல் வங்கி உயர்த்தி வருகிறது. இது இன்னமும் … Read more

இங்கிலாந்து பிரதமர்: முதல் சுற்று தேர்தலில் முதலிடம் பிடித்து ரிஷி சுனக் வெற்றி!

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், அடுத்தடுத்து எம்.பி.க்களின் ராஜினாமா என சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் … Read more

புதிய அரசு அமைப்பது குறித்து ரணில் விக்ரமசிங்கே அமைச்சர்களுடன் ஆலோசனை… பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றி சூறையாடிய போராட்டக்காரர்கள்!

புதிய அரசு அமைப்பது பற்றி தமது அமைச்சர்களுடன் இலங்கையின் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்தியுள்ளார். நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் கோத்தபயா ராஜபக்சே இடைக்கால அதிபராக ரணிலை நியமிக்கும்படி கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்று உள்ளதால், பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சியினரின் ஒப்புதல் பெற்ற நபரை நியமிக்கும்படி அவர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே ரணில் விக்ரமசிங்கே அலுவலகத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள உடைமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். ராணுவத்தினர் போராட்டக்காரர்களை … Read more

ஹைதி கலவரத்தில்50 பேர் உயிரிழப்பு| Dinamalar

போர்ட் – ஓ – பிரின்ஸ்:ஹைதி நாட்டில், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததில், 50 பேர் கொல்லப்பட்டனர்.வட அமெரிக்காவின் கரீபிய தீவு நாடான ஹைதியின் தலைநகர் போர்ட் – ஓ – பிரின்ஸில், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோவெனல் மோஸின் மறைவுக்குப் பின், பல்வேறு பகுதிகளில் கலவரங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன.ஜனாதிபதி ஜோவெனல் படுகொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினம், கடந்த 8ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளிலிருந்து, நாட்டின் பல்வேறு … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான முதல் சுற்று தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி

லண்டன், இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சன் தனது பிரதமா் பதவியையும் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி தலைவா் பதவியையும் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? என்பது உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் நிதி மந்திரியுமான ரிஷி சுனக், இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டா்னி ஜெனரல் … Read more

Nuclear Weapons Accord: இரான் அணுஆயுத ஒப்பந்தமும் ஜோ பிடனின் சூசக எச்சரிக்கையும்

Joe Biden on Nuclear Deal with Iran: சர்வதேச சமூகத்தை கவலையில் ஆழ்த்தியிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மீண்டுமொரு போருக்கான சாத்தியங்களை அமெரிக்க அதிபர் சூசகமாக தெரிவித்திருப்பது அரசியல் நிபுணர்களை கவலைக் கொள்ள செய்திருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரானுடனான ஒப்பந்தம் தொடர்பாக பேசும்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அணுவாயுத ஒப்பந்தத்திற்கு இரான் ஒத்து வராவிட்டால், இறுதி முயற்சியாக ‘சக்தி பிரயோகம்’ செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் உருவாக்குவதற்கான … Read more

மயிலாக மாற நினைத்து குயிலான வான்கோழி..! நடிகைக்கு நேர்ந்த சோகம்..! ரூ.5 கோடியில் 40 முறை உருவமாற்று சிகிச்சை

பிரபல அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் போல மாற வேண்டும் என்பதற்காக 40 முறை உருவமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட  நடிகையின் உருவம் விசித்திரமாக மாறியதால், பழைய நிலைக்கு திரும்புவதற்காக 95 லட்சம் ரூபாய் செலவழித்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஜெனிபர் பாம்ப்லோனா என்பவர் தனது உருவத்தை அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் ((Kim Kardashian)) போல மாற்றிக் கொள்ள … Read more

ஆப்கானிஸ்தானில் 2 நாட்களாக பெய்த கனமழை – 39 பேர் உயிரிழப்பு

காபூல், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் அவ்விரு மாகாணங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் அங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இந்த … Read more