இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதனால், அங்கு அவசர நிலையை அமல்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே … Read more

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில், இலங்கையில் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, கோத்தபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை … Read more

பனாமாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்.!

பனாமாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 15-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதாக அதிபர் லாரன்டினோ கார்டிசோ சமீபத்தில் அறிவித்தார். கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான விலையை கட்டுப்படுத்தக்கோரியும், அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   Source link

Marburg virus: மார்பர்க் வைரஸ் கொரோனா விட கொடியதா.. பீதியை கிளப்பும் WHO

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து உலகம்  இன்னும் முழுமையாக  மீளவில்லை. முன்னபி போது லட்சக்கணக்கில் தொற்று பாதிப்பு பதிவாகவில்லை என்றாலும், தினசரி பாதிப்புகள் ஆயிரக்கணக்கில் பதிவாகின்றன. இந்நிலையில், மற்றொரு ஆபத்தான வைரஸ் தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த கொடிய வைரஸின் பெயர் மார்பர்க். இந்த வைரஸை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இரண்டு மார்பர்க் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பாதிப்பு … Read more

கோத்தபய தப்பிச்செல்ல உதவியா?: இந்திய தூதரகம் மறுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக வெளியான செய்திக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாத மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை, லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது … Read more

அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகள் 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய வீடியோ வெளியீடு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொடக்க பள்ளியில் 19 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ இடத்தை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் உவால்டே நகரில் உள்ள தொடக்க பள்ளியில் துப்பாக்கியுடன் நுழந்தை இளைஞன் 19 குழந்தைகள் உள்பட 21 பேரை சுட்டுக் கொன்றான். இந்நிலையில், அந்த கொடூர இளைஞன் பள்ளிக்குள் நுழைந்தது, போலீசார் பள்ளியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.  … Read more

அமெரிக்கா தப்ப முயன்ற பசில் ராஜபக்சே தடுத்து நிறுத்தம்| Dinamalar

கொழும்பு : இலங்கையில் இருந்து அமெரிக்கா தப்ப முயன்ற அந்நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்சே, 71, கொழும்பு விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற அதிபர் கோத்தபயவின் முயற்சியும் முறியடிக்கப்பட்டதால், அவர் கடல் வழியே தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால அதிபர் நம் அண்டை நாடான இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ … Read more

மாலத்தீவிற்கு தப்பி சென்று விட்டாரா ராஜபக்சே… வெளியான பரபரப்பு தகவல்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பி சென்று விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் எந்த நாட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் தனது விமானத்துடன் மாலத்தீவில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. அதிபர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் கோத்தபய ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளதாகவும், அது இன்று அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவி, மெய்ப்பாதுகாவலர் மற்றும் விமானியுடன் மாலைதீவு சென்றடைந்துள்ளதாக … Read more

‘‘ஆதாரமற்ற செய்தி’’- கோத்தபய மாலத்தீவு தப்பிச் செல்ல உதவியா?- இந்தியா திட்டவட்ட மறுப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக வெளியான ஆதாரமற்ற ஊகத்தின் அடிப்படையிலான ஊடக தகவல்களை திட்டவட்டமாக மறுப்பதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோட்டம்…!

கொழும்பு, இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே … Read more