விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததால் விமான ஊழியர் அதிர்ச்சி! விசாரணைக்கு உத்தரவு

அங்காரா, துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார். இதை அடுத்து விமான நிறுவனம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி புறப்பட்ட விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது அந்த விமான ஊழியர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுடன் … Read more

இந்துக்களும், சீக்கியர்களும் ஆப்கன் திரும்பலாம்: தலிபான்கள் அழைப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது பாதுகாப்பு நிலைமை சீராகிவிட்டது எனவே இந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் நம் நாட்டுக்கு திரும்பலாம் என தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான்கள் கடந்த சில நாட்களாக இந்து, சீக்கிய அமைப்புகளிடம் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், “பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய இந்துக்களும், சீக்கியர்களும் நாடு திரும்பலாம். பாதுகாப்பு பிரச்சினைகள் சீராகிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு … Read more

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் – தலீபான்கள் வலியுறுத்தல்

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதனை அடுத்து சீக்கிய குருத்வாரா மறுசீரமைப்பு செய்ய தலீபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு முடிவு எடுத்தது. இந்நிலையில் தலீபான்கள் சிறுபான்மையினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகி விட்டதாகவும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட மதச் சிறுபான்மையினர் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். சீக்கிய குருத்வாரா தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு குருத்வாராவுக்கு … Read more

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்…!ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் – ஜோ பைடன்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் ஜோ பைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்,ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கணினி மைக்ரோசிப் தயாரிப்பு குறித்த கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றபிறகு பேசிய அவர் … Read more

போப் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு.. கத்தோலிக்க உறவிடப் பள்ளியில் உயிரிழந்த குழந்தைகளுக்காக பிரார்த்தனை..!

கனடா சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், அல்பெர்டா மாகாணத்தில் உள்ள பழங்குடியின மக்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். போப் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கத்தோலிக்க உறவிடப் பள்ளியில் உயிரிழந்த ஒன்றரை லட்சம் பழங்குடியின குழந்தைகளுக்காக போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். Source link

நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை: வதந்திகளுக்கு விளக்கமளிக்கும் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். அதேபோல அவரும் தனது சமூக ஊடகங்களில் பல விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசுவார். நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். வதந்திகளுக்கு விளக்கமளிக்கும் எலோன் மஸ்க்கின் இந்த விளக்கம் பலனளிக்குமா என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர். கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடனான விவகாரம் குறித்த செய்திக்கு பதிலளித்த எலோன் மஸ்க் தனது பாலியல் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். தான் … Read more

சீன அதிபருடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசக தகவல்..!

அமெரிக்கா மற்றும் சீன அதிபர்கள் இடையே இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வாரம் சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அமெரிக்காவில் ஒரு போதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறிய பைடன் விரைவான வளர்ச்சியில் இருந்து நிலையான வளர்ச்சிக்கு செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.  Source link

Asteroid Bennu: சிறுகோள் பென்னுவின் ஆச்சரியமான மர்மங்களை அவிழ்க்கும் நாசா

சிறுகோள் பென்னு மர்மம்: மர்மங்கள் நிறைந்த சிறுகோள் பென்னுவின் பகல்-இரவு சுழற்சி 4.3 மணி நேரத்தில் முடிகிறது, காலையில் 127 டிகிரி வெப்பத்தால் நெருப்பாய் தகிக்கும் என்றால், இரவில் -23 டிகிரி வெப்பநிலையில் கல்லாய் உறையும் என்று நாசா வெளியிட்டுள்ள தகவல் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு, நாசா பென்னு என்ற சிறுகோளின் மேற்பரப்பில் OSIRIS-REx வாகனத்தை செலுத்தியது. இந்த வாகனம் அங்கிருந்து அனுப்பும் தகவல்கள் விஞ்ஞானிகளுக்கும் ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. இன்னும் சில நாட்கள் விஞ்ஞானிகள் இந்த சிறுகோளை ஆய்வு செய்வார்கள். … Read more

திரவுபதி முர்முவுக்கு சீன, இலங்கை அதிபர்கள் வாழ்த்து

புதுடெல்லி: இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்ற திரவுபதி முர்முவுக்கு ரஷ்ய, சீன, இலங்கை அதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள். திரவுபதி முர்முவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்கவும் விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உயரிய பதவியான … Read more

சீனாவில் வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் அவதி.. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும் அபாயம்..!

சீனாவில் கொளுத்தும் வெப்பம் காரணமாக அங்குள்ள 70 நகரங்களுக்கு ‘அதீத வெப்ப எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அங்கு 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியிருப்பதால் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. 393 சீன நகரங்களில் 35 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பநிலை இருக்கும் எனவும், கடும் வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.  Source link