மிரட்டுது மார்க்பர்க் வைரஸ் | Dinamalar

நியூயார்க்: புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘மார்க்பர்க்’ வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இருவர் ‘மார்க்பர்க்’ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இறந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கு … Read more

இலங்கையில் நாளை புதிய அதிபர் தேர்வு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை புதிய அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தினால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக செயல்படுகிறார். நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட … Read more

ஏலத்தில் ஹிட்லரின் கைக்கடிகாரம்; ரூ.31 கோடிக்கு விற்பனையாக வாய்ப்பு| Dinamalar

மேரிலேண்ட் : ஜெர்மனியை ஆண்ட அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது ஆண்ட்ரியாஸ் ஹூபர் கைக்கடிகாரம். இதை ஹிட்லர் 1933 ஏப்.20ல் தன் 44வது பிறந்த நாளுக்காக தனக்கு தானே பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள பிரபல அலெக்சாண்டர் நிறுவனம் இந்த கைக்கடிகாரத்தை ஏலத்திற்கு விட்டுள்ளது. தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கடிகாரத்தில் ஜெர்மனியின் அரசு முத்திரை, ஹிட்லரின் பிறந்த நாள், ஹிட்லர் அதிபராகப் பதவியேற்ற நாள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.இது 31 கோடி ரூபாய் வரை ஏலம் … Read more

இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தொடர்பான தகவல் பரிமாற்றத்தை இந்தியாவிடம் பகிரலாம் என சுவிஸ் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தொடர்பான தகவல் பரிமாற்றத்தை இந்தியாவிடம் பகிரலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் பல முன்னணி வர்த்தகக் குழுமங்களின் வங்கி கணக்குகள் குறித்த தரவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Source link

பாக்.,கில் பொது தேர்தல் நடத்த முன்னாள் பிரதமர் கோரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர் : பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இடைத்தேர்தலில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, பாக்.,கில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். நம் அண்டை நாடான பாக்.,கில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இம்ரான் கானின் தெஹ்ரீக் – இ – இன்சாப் தலைமையிலான கூட்டணி, 15 … Read more

பாராசூட்டின் உதவியுடன் தரையை தொட்ட சிறிய ரக விமானம்.!

பெல்ஜியம் நாட்டின் ப்ரூகெஸ் நகரில் சிறிய விமானம் ஒன்று பாராசூட்டின் உதவியுடன் தரையிரங்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விமானத்தை தரையிறக்க முடியாததால் பாராசூட்டை விரித்து அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. பாராசூட்டில் மிதந்தபடி அந்த விமானம்  ஒரு வீட்டு வேலியின் மீது விழுந்து தரையை தொட்டது. அதிர்ஷ்டவசமாக அதை ஓட்டியவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். Source link

வீட்டிற்கு வெளியே வர வேண்டாம்; பிரிட்டன் மக்களுக்கு அரசு எச்சரிக்கை| Dinamalar

லண்டன் : ‘பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என, அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நேற்று வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் நிலவியது. இதையடுத்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் வெப்பத்தால் மரணம் நிகழும் அபாயம் உள்ளதாக, வானிலை மையம் முதன் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து வானிலை ஆய்வு … Read more

டிக்டாக்கில் தனது சம்பளத்தை வெளிப்படுத்திய பெண் – வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்

டென்வர்: அமெரிக்காவில் தனது சம்பளத்தை டிக்டாக் வீடியோவில் வெளிப்படுத்தியதற்காக பெண் ஒருவர் வேலையை இழந்துள்ளார். அமெரிக்காவின் டென்வரைச் சேர்ந்த லெக்ஸி லார்சன் என்பவர் தான் வேலையை இழந்த அந்தப் பெண். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்த லார்சன் இதற்கு முன் அக்கவுண்ட்ஸ் தொடர்பான பணிகளை செய்துவந்துள்ளார். சில நாட்கள் முன் அவருக்கு தொழில்நுட்ப பிரிவில் பணி கிடைத்துள்ளது. இதற்காக சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலைபார்த்த போது 70,000 டாலர் சம்பளம் பெற்ற லார்சன் … Read more

துப்பாக்கிச் சூடு4 பேர் பலி| Dinamalar

கிரீன்வுட் : அமெரிக்காவில், உணவகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், கொலையாளி உட்பட, நான்கு பேர் பலியாகினர்.அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் நகரில், கிரீன்வுட் பார்க் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள உணவகத்தில், துப்பாக்கியுடன் புகுந்த ஒருவர், சரமாரியாக சுட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். அப்போது, அங்கிருந்த ஒருவர் தன் துப்பாக்கியால் கொலையாளியை சுட்டுக் கொன்றார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கொலையாளி உட்பட நான்கு பேர் பலியாகினர்; இருவர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த … Read more

இலங்கை முழுதும்… எமர்ஜென்சி!; நாளை அதிபர் தேர்தல்| Dinamalar

கொழும்பு, : இலங்கை அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாடு முழுதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் … Read more