அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு| Dinamalar

நியூயார்க் : என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக அமெரிக்கா, ஐ.நா.,வில் கொண்டு வந்த வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகள் ஓட்டளித்தன. ஐ.நா.,வின், 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. இக்கூட்டத்தில், என்.ஜி.ஓ.,க்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘விக்கிபீடியா’ நிறுவனத்தை நடத்தும் அறக்கட்டளை உட்பட, ஆறு என்.ஜி.ஓ.,க்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் … Read more

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் இலங்கை அமைச்சரவை விரிவாக்கம்?| Dinamalar

கொழும்பு : இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அனைத்து கட்சி பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நேற்று முன்தினம் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தலைமையிலான அரசில், 17 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இது குறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியதாவது:இலங்கை அமைச்சரவையில் தற்போது 17 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்; 30 அமைச்சர்கள் வரை நியமனம் செய்ய முடியும். தற்போது ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி … Read more

தானிய சுத்திகரிப்பு தளத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்!

ஒடெசா துறைமுகத்தில் உள்ள தானிய சுத்திகரிப்பு தளத்தை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியது. ஒடெசா துறைமுகத்தில் உள்ள தானிய வசதியை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கின என்று உக்ரேனிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் ஒடெசாவில் உள்ள தானிய பதப்படுத்தும் வசதிகளை இலக்காகக் கொண்டதாக போரிடும் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியைத் தடுக்க ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு. “தானிய ஏற்றுமதிகள் செயலாக்கப்படும் இடத்தில் குறிப்பாக ஒடெசா துறைமுகம் தாக்கப்பட்டது. இரண்டு ஏவுகணைகள் துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கியது, … Read more

ஈரானில் கன மழை 17 பேர் உயிரிழப்பு| Dinamalar

தெஹ்ரான் : ஈரானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான ஈரானின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சாலைகள், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நாட்டின் கடும் வறட்சி பகுதியான தெற்கு பார்ஸ் மாகாணத்தில் கன மழை கொட்டியதால், ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நேற்று வரை 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். எஸ்தாபன் நகரில் ரௌட்பால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு வெள்ளத்தில் சிக்கித் … Read more

குரங்கு அம்மை | சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) அறிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 -க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை இப்போது தொற்று பரவி உள்ளது. அதனால் இந்த அறிவிப்பை உலக … Read more

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் ஊழலை தடுப்பதில் தோல்வியடைந்ததாகக் கூறி பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த விவாதத்தின் இறுதியில் பிரயுத்துக்கு 256 எம்பிக்கள் ஆதரவாகவும், 206 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.   Source link

சர்வதேச அவசரநிலையாக அறிவிக்கப்பட்ட குரங்கு அம்மை நோய் – உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. சமீப காலத்தில் அதிகம் பரவி வரும் தொற்று நோயாக குரங்கு அம்மை நோய் பார்க்கப்படுகிறது.ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. தற்போது பல்வேறு நாடுகளுக்கு அது பரவியுள்ளது. உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோயை சர்வதேச நெருக்கடி ஆக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் … Read more

பிரபல யூடியூபரை தாக்கிய தலிபான்கள்: அதிர்ச்சியில் மக்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பிரபல யூடியூபரை தலிபான்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களை முடக்கும் நடவடிக்கையில் தலிபான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் … Read more

'நான் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு' – ரிஷி சுனக் பளீச்!

பிரிட்டன் பிரதமருக்கான தேர்தலில் தான் பின்தங்கி இருப்பதாக, முன்னாள் அமைச்சர் ரிஷி சுனக் வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில், போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகித்து வந்தார். இவருக்கு … Read more

உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு| Dinamalar

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனைதொடர்ந்து குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் இது குறித்து கூறியதாவது: இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு … Read more