ஹைதி கலவரத்தில்50 பேர் உயிரிழப்பு| Dinamalar

போர்ட் – ஓ – பிரின்ஸ்:ஹைதி நாட்டில், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததில், 50 பேர் கொல்லப்பட்டனர்.வட அமெரிக்காவின் கரீபிய தீவு நாடான ஹைதியின் தலைநகர் போர்ட் – ஓ – பிரின்ஸில், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோவெனல் மோஸின் மறைவுக்குப் பின், பல்வேறு பகுதிகளில் கலவரங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன.ஜனாதிபதி ஜோவெனல் படுகொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினம், கடந்த 8ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளிலிருந்து, நாட்டின் பல்வேறு … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான முதல் சுற்று தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி

லண்டன், இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சன் தனது பிரதமா் பதவியையும் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி தலைவா் பதவியையும் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? என்பது உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் முன்னாள் நிதி மந்திரியுமான ரிஷி சுனக், இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டா்னி ஜெனரல் … Read more

Nuclear Weapons Accord: இரான் அணுஆயுத ஒப்பந்தமும் ஜோ பிடனின் சூசக எச்சரிக்கையும்

Joe Biden on Nuclear Deal with Iran: சர்வதேச சமூகத்தை கவலையில் ஆழ்த்தியிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மீண்டுமொரு போருக்கான சாத்தியங்களை அமெரிக்க அதிபர் சூசகமாக தெரிவித்திருப்பது அரசியல் நிபுணர்களை கவலைக் கொள்ள செய்திருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரானுடனான ஒப்பந்தம் தொடர்பாக பேசும்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அணுவாயுத ஒப்பந்தத்திற்கு இரான் ஒத்து வராவிட்டால், இறுதி முயற்சியாக ‘சக்தி பிரயோகம்’ செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் உருவாக்குவதற்கான … Read more

மயிலாக மாற நினைத்து குயிலான வான்கோழி..! நடிகைக்கு நேர்ந்த சோகம்..! ரூ.5 கோடியில் 40 முறை உருவமாற்று சிகிச்சை

பிரபல அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் போல மாற வேண்டும் என்பதற்காக 40 முறை உருவமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட  நடிகையின் உருவம் விசித்திரமாக மாறியதால், பழைய நிலைக்கு திரும்புவதற்காக 95 லட்சம் ரூபாய் செலவழித்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஜெனிபர் பாம்ப்லோனா என்பவர் தனது உருவத்தை அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் ((Kim Kardashian)) போல மாற்றிக் கொள்ள … Read more

ஆப்கானிஸ்தானில் 2 நாட்களாக பெய்த கனமழை – 39 பேர் உயிரிழப்பு

காபூல், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் அவ்விரு மாகாணங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் அங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இந்த … Read more

உக்ரைனின் 3 ராணுவ ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா..!

உக்ரைனின் மூன்று ராணுவ ஜெட் விமானங்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் விமானப்படையில் பயன்படுத்தப்பட்ட சோவியத் காலத்து ஜெட் விமானங்களான Su-25 மற்றும் Su-24 விமானங்கள் கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோவியத் வடிவமைத்த மற்றொரு போர் விமானமான MiG-29 மைகோலைவ் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

விண்வெளியில் நீரூடன் கோள் : நாசா தொலைநோக்கி தகவல்| Dinamalar

வாஷிங்டன் :அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி நடத்திய ஆய்வில் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளில் தண்ணீர் மேகங்கள் மூடுபனி இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.விண்வெளியில் மிக மிக தொலைவில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்காக அதிக திறன் உடைய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.இது நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவு சென்று சூரியனை சுற்றியவாறு ஆய்வுப்பணியை செய்து வருகிறது.இந்த தொலைநோக்கி வாயிலாக … Read more

விண்வெளியில் நீரூடன் கோள்நாசா தொலைநோக்கி தகவல்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி நடத்திய ஆய்வில் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளில் தண்ணீர் மேகங்கள் மூடுபனி இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.விண்வெளியில் மிக மிக தொலைவில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்காக அதிக திறன் உடைய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.இது நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவு சென்று சூரியனை சுற்றியவாறு ஆய்வுப்பணியை செய்து வருகிறது.இந்த தொலைநோக்கி வாயிலாக … Read more

இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமனம்

கொழும்பு: நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்து விட்டதால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட் டுள்ளது. இடைக்கால அதிபராக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்யப் பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த மார்ச் முதல் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிபர் மாளிகைக்குள் நுழைந்து … Read more

நாடு விட்டு நாடு பறக்கிறார் கோத்தபய ராஜபக்சே| Dinamalar

கொழும்பு-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, குடும்பத்துடன் மாலத்தீவுக்கு நேற்று தப்பிச் சென்றார். அங்கிருந்தபடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை காபந்து அதிபராக நியமித்தார். இதனால் அந்நாட்டு அரசியல் நெருக்கடி தீவிரமடைந்து, மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாலத்தீவிலும் ராஜபக்சேவுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், அவர் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அண்டை நாடான இலங்கையின் அதிபர் மாளிகையை லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். விபரீதத்தை முன்னரே உணர்ந்த அந்நாட்டு அதிபர் கோத்தபய … Read more