உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்க உக்ரைன் – ரஷ்யா இடையே ஒப்பந்தம்
இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரியளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு, பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இந்த போரின் காரணமாக உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கருங்கடல் பகுதியில் இருந்து உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுத்து வைத்துள்ளது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பொருட்கள் வந்து சேர்வதற்கு பெரும் கால தாமதமும் ஏற்பட்டுள்ளது. … Read more