இலங்கை அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்: அதிகாரியிடம் ஒப்படைத்த போராட்டக்காரர்கள்

இலங்கையில் மக்களின் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய, வரும் 13-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இதனிடையே, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அதை போராட்டக்காரர்கள் மொத்தமாக எண்ணி, பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல், சமையல் காஸ், மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த ஏப்ரல் முதல் அதிபர் மாளிகை முன்பு … Read more

தவறான கொள்கையால் பற்றி எரியும் இலங்கை| Dinamalar

அண்டை நாடான இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக, சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த மக்களின் எதிர்ப்பு, நேற்று முன்தினம் பெரிய அளவில் வெடித்தது. தலைநகர் கொழும்புவில் பலத்த பாதுகாப்புடன் கூடிய அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடி, அட்டகாசத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு சற்று முன்னதாகவே மாளிகையில் இருந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியேறி விட்டார். அவர், குடும்பத்தினருடன் தனி விமானம் அல்லது கப்பலில் வெளிநாடு தப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வரும், 13ம் தேதி … Read more

இலங்கையில் அனைத்துக்கட்சி அரசு இன்று முக்கிய ஆலோசனை

கொழும்பு, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே ஆகியோர் அதிகாரபூர்வமாக பதவி விலகியதும் அனைத்துக்கட்சி அரசு அமைய உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. நேற்று முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி., அதன் கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தின. அதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவுப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் ரிஷாத பாதியுதீன் … Read more

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் கட்சி வெற்றி..!

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில், சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடாளுமன்ற தேர்தலில் அனுதாப அலையை வீசியது. மொத்தமுள்ள 248 இடங்களில் ஷின்சோ அபேயின் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.  பல்வேறு சட்ட திருத்தங்களை பிரதமர் கிஷிடோ தலைமையிலான அரசு மேற்கொள்ளும் … Read more

ஜப்பான் மேல்சபை தேர்தல்சோகத்தில் ஓட்டு போட்ட மக்கள்| Dinamalar

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இரு தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று அந்நாட்டின் மேல்சபை தேர்தல் நடந்தது. பல இடங்களில் மக்கள் சோகத்துடன் ஓட்டு போட்டதை காண முடிந்தது. ஜப்பான் மேல்சபையின், 124 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் மறைந்த ஷின்சோ அபேயின் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும் என, ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே … Read more

இலங்கையில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்- அமெரிக்க தூதர் ஜூலி சுங்

கொழும்பு, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பிச்சென்றுவிட்டார். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது … Read more

போர்ச்சுகலில் 3,500 ஏக்கர் பரப்பில் தாவரங்களை கபளீகரம் செய்த காட்டுத் தீ.. உச்சகட்ட வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை..!

போர்ச்சுகலில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க ஆயிரத்து 500 வீரர்கள் போராடி வருகின்றனர். வடக்கு மற்றும் மத்திய போர்ச்சுகலை ஒட்டியுள்ள 250 இடங்களை காட்டுத் தீ கபளீகரம் செய்துள்ளது. 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிலான தாவர வகைகள் தீக்கிரையான நிலையில், தற்செயல் நிலை அறிவிக்கும் சூழலுக்கு அரசு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணங்களால் விரைவில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் வெப்ப அலை வீசக் கூடும் என விஞ்ஞானிகள் … Read more

சோகத்துடன் ஓட்டு போட்ட மக்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இரு தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று அந்நாட்டின் மேல்சபை தேர்தல் நடந்தது. பல இடங்களில் மக்கள் சோகத்துடன் ஓட்டு போட்டதை காண முடிந்தது. இறுதி அஞ்சலி ஜப்பான் மேல்சபையின், 124 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் மறைந்த ஷின்சோ அபேயின் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதநேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்

அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் அந்நாட்டில் அதிக முதலீடு செய்யும் தொழிலதிபர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. கோல்டன் விசா என்பது ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். மேலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, … Read more

ஷின்சோ அபேவுக்கு தலைவர்கள் அஞ்சலி: ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தல் திட்டமிட்டபடி நடந்தது

டோக்கியோ: ஜப்பானில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு முக்கிய பிரமுகர்கள் நேற்று அஞ்சலி செலுத்திய நிலையில் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தலும் நடைபெற்றது. இன்று முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஜூலை 10-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஷின்சோ (67)கடந்த 8-ம் தேதி நாரா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அபே உயிரிழந்தார். … Read more