Rajapaksa in Singapore: நாடு நாடாக தப்பித்து செல்லும் அதிபர் கோத்தபய ராஜபக்சே

Sri Lanka crisis: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்கள் வீதியில் இறங்கி அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை கைப்பற்றிய பொதுமக்கள், தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். அங்கேயே தங்கி சமைத்து சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது என அவரது வீட்டை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளனர். புதன்கிழமை அதிகாலையில் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தங்கினார். அதே … Read more

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து அமைதியாக வெளியேறிய போராட்டக்காரர்கள்

கொழும்பு: கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதை அடுத்து, நாடு இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் அமைதியாக வெளியேறினர். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சவேவின் அதிபர் மாளிகையில் நுழைந்ததைத் தொடர்ந்து ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார். கடந்த சில நாட்களாக அதிபர் மாளிகையிலே போராட்டக்காரர்கள் தங்கியிருந்தனர். அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்தனர், கூட்டாக சமைத்து சாப்பிட்டனர். அதிபர் மாளிகையில் தங்கியிருக்கும் போராட்டக்காரர்களின் வீடியோக்கள் நாளும் வந்த … Read more

2வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி ‛பவுலிங்| Dinamalar

லார்ட்ஸ்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ‛டுவென்டி’ மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டுவென்டி தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, முதலாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இந்த நிலையில் லார்ட்ஸில் இன்று (ஜூலை 14) இரண்டாவது ஒருநாள் போட்டி துவங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரேயாஷ் ஐயருக்கு பதிலாக விராட் கோஹ்லி … Read more

இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவின் போர் தான் காரணம் – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவின் போர் தான் காரணம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய அவர், ரஷ்யாவால் தான் உலகளவில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளதாகவும், இது எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியாது என்றும் கூறினார். உக்ரைன் மீதான படையெடுப்பின்போது பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தந்திரத்தை ரஷ்யா பயன்படுத்துவதாகவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். Source link

இலங்கை உட்பட பல நாடுகளில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ்: இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் நிலவுவதற்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பே காரணம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அறிவித்தபடி கோத்தபய தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா கடிதம் எதையும் வழங்காமல் ரகசியமாக மாலத்தீவுக்கு தப்பியோடினார். அங்கும் மக்கள் எதிர்ப்பு வலுக்கவே அங்கிருந்து தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த நிலையில் … Read more

பிரதமர் பிரதமர் போட்டியின் முதல் கட்ட தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி

லண்டன்: பிரிட்டன் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் கட்ட தேர்தல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் பல கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்தெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். போரிஸ் பதவி யேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்ற தொடங்கின. இதில், கரோனா … Read more

நேற்று மாலத்தீவு.! இன்று சிங்கப்பூர்.! நாளை சவுதி.! நாடு, நாடாக ஓடும் கோ.பக்சே.!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்றார். இச்சூழ்நிலையில் இலங்கையில் வியாழக்கிழமை காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் ஆவசேமடைந்த இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, ராணுவ உதவியுடன் மாலத்தீவு தப்பிச் சென்றார். இதனால் மேலும் கோபமடைந்த மக்கள் பிரதமர் அலுவலகத்திற்குள்ளும் நுழைந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இலங்கையில் வியாழக்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொது … Read more

செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்

Viral Video: அறிவியல் அற்புதங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமானவை. அண்மையில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.  மிகவும் முக்கியமான விஞ்ஞான விஷயங்களை கொடுக்கத் தொடங்கிவிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் வழங்கும் காட்சிகள் இனி உலகம் முழுவதும் ஊடகங்களில் வைரலாகப் போகிறது என்பது எதிர்கால வைரல் செய்தியாக இருக்கலாம். ஆனால், தற்போது நாசா வெளியிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அதை … Read more

Sri Lanka Crisis: கொழும்பு ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா?

இலங்கை நெருக்கடி: இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி மேலும் அதிகரித்தது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலைமை மோசமடைந்ததைக் கண்டு, இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், இந்த அசாதாரண சூழலில் ஒரு விசித்திரமான நிகழ்வும் அங்கு நடந்தது. இலங்கையில் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஜோடி … Read more

அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல்: ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிப்பு

மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 130 நாட்களை கடந்தும் உக்கிரமாக தொடர்கிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்கான போரில் வேகமாக முன்னேறி வரும் ரஷிய படைகள் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள மைகோலைவ் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மைக்கோலைவ் … Read more