உலக செய்திகள்
உணவு நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு 20 மில்லியன் டாலர் கூடுதல் நிதி – அதிபர் பைடன் அறிவிப்பு.!
உணவு பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு கூடுதலாக 20 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்தார். ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் பைடன் நிதியுதவியை அறிவித்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா வழங்கிய நிதி இலங்கையின் உணவு நெருக்கடியை தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படும் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Source link
கொரோனாவே இன்னும் முடியல, அடுத்து புது ஆபத்தா; அலறவைக்கும் அறிகுறிகள்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்குப் பிறகு, தற்போது ஒரு புதிய நோயின் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது. அதன்படி பிரிட்டனில் ஒரு புதிய நோய் கண்டறியப்பட்டுள்ளது, அதில் போலியோவின் அறிகுறிகள் மாதிரியில் கண்டறியப்பட்டுள்ளன. பிரிட்டனின் வரலாற்றில் 40 வருடங்களில் முதன்முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த நோய் சரியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், கொரோனாவை போன்று உலகின் பிற பகுதிகளுக்கும் பரவும் என நம்பப்படுகிறது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போலியோவின் அறிகுறிகள் தென்பட்டது கூட்டாளர் இணையதளம் டிஎன்ஏ … Read more
போர் முடிய எத்தனைக் காலமானாலும் உக்ரைனுக்கு ஆதரவு தொடரும்.. ஜி 7 நாடுகள் மாநாட்டுக்கு இடையே தலைவர்கள் உறுதி..!
எத்தனைக் காலம் ஆனாலும் ரஷ்யாவிடமிருந்து உக்ரைனை பாதுகாக்க துணை நிற்போம் என ஜி 7 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைத் தடுத்து நிறுத்தவும் உறுதி எடுக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில் ரஷ்யாவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதியைத் தடை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருப்புக் கடல் வழியாக உக்ரைனுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்ல உதவவும் ஜி 7 நாடுகள் உறுதியளித்துள்ளது. … Read more
துருக்கியில் இளைஞர் வயிற்றில் 233 நாணயங்கள், நகங்கள், பேட்டரிக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி
அன்காரா: துருக்கியில் சுமார் நூற்றுக்கணக்கான நாணயங்கள், நகங்கள்,பேட்டரிகள் நோயாளியின் வயிற்றில் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. துருக்கியில் 35 வயதான நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் எண்டோஸ்கோபி செய்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நோயாளியின் வயிற்றில் 233 காயின்களும், ஏராளமான நகங்களும், பேட்டரிகளும், கற்களும் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அந்த நபருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில், அவரது வயிற்றிலிருந்து அனைத்து பொருட்களையும் மருத்துவர்கள் நீக்கினர். இந்தப் பொருட்கள் … Read more
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வெளியேற முயன்ற 47 பேரை மீட்ட இலங்கை கடற்படை வீரர்கள்.!
வாழ்வாதாரம் தேடி இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வெளியேற முயன்ற குழந்தைகள் உள்பட 47 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் மீட்டனர். கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் எரிபொருள் தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. கடந்த இரு வாரங்களில் மட்டும் 120-க்கும் மேற்பட்டோர் சிறிய மீன்பிடி படகுகளில் வெளிநாடுகளுக்கு ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர் Source link
எமிரேட்ஸ் அதிபருடன்பிரதமர் மோடி பேச்சு | Dinamalar
அபுதாபி:மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயித் அல் நயான், விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபராக, 2004 முதல் இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நயான், கடந்த மாதம் 13ம் தேதி இறந்தார். இதையடுத்து, அவரது சகோதரர் ஷேக் முகமது பின் சயித் அல் நயான், புதிய அதிபராக பதவியேற்றார்.இந்நிலையில், ‘ஜி௭’ மாநாட்டில் பங்கேற்க, ஐரோப்பிய … Read more
ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை
அபுதாபி: ஜெர்மனியில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஐக்கிய அரபு அமீரக தலைநகரம் அபுதாபி சென்றார். அந்நாட்டின் மரபுப்படி, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் விமானநிலையத்துக்கு வந்து, உலகத் தலைவர்களை வரவேற்பது வழக்கம். ஆனால், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது, மரபுகளை உடைத்து, நேரடியாக விமானநிலையத்துக்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இரு தலைவர்களும் ஆரத்தழுவி, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அந்நாட்டின் அரச குடும்பத்தினரும் விமானநிலையத்துக்கு வந்திருந்தனர். இதுகுறித்து பிரதமர் … Read more
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கூட்டறிக்கை – கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா, இந்தியா நாடுகள் உறுதி
முனிச்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியேற்றன. ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் மோடி, இந்தோனேசியா, அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, செனகல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் ஜி7 நாடுகளும், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் வெளியிட்டன. … Read more