சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மேர்காங் நகரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தன்னாட்சி பெற்ற அபா திபெத்தியன் – கியாங் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேர்காங் நகரத்தில் ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகிய நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரோடு மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டு சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  Source link

தென்சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

தென்சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம், நிலச் சரிவுகளில் சிக்கி புதையுண்ட 25 பேரின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டனர். ஏறத்தாழ ஒரு லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள், 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட வீடுகள் பெருமழை வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகின. ஏறத்தாழ 10 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் கனமழைக்கு வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் மின் தடையால் இருளில் … Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசர் எச்சம் கண்டெடுப்பு… 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என கணிப்பு

ஐரோப்பாவின், இறைச்சி உண்ணும் மிகப் பெரிய டைனோசரின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். “ஐல் ஆப் வைட்” தீவு கடற்கரையில் பாறைகளுக்கிடையே டைனோசரின் புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டைனோசரின் பல்வேறு எலும்புகளை ஆய்வு செய்ததில் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த வகை டைனோசர் வாழ்ந்திருக்கலாம் என்றும், 33 அடி நீளம் இருந்திருக்கக் கூடும் எனவும் கருதுகின்றனர். கண்டுபிடிக்கப்பட்டவை Spinosaurs வகை டைனோசர்களாக கூட இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். Source link

இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பசில் ராஜபக்ச கடந்த ஆண்டு ஜூன் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரையில் இலங்கையின் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் நிதியமைச்சர் பதவியிலியிருந்து அவர் ராஜினாமா … Read more

பெருவில் சுரங்க தொழிலாளர்களிடையே மோதல் – 14 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்க தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். காரவெலியில் உள்ள சுரங்கத்தில் முறைசார தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடின ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 31பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

காங்கோவில் வைரச்சுரங்கத்தில் கற்கள் சரிந்து விழுந்த விபத்து – 40 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைரச்சுரங்கம் சரிந்த விழுந்த விபத்தில் சிக்கி, 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கின்ஷசா நகரில் செயல்பட்டு வரும் வைரச்சுரங்கத்தில், தொழிலாளர்கள் வைரத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Source … Read more

எரிமலை குழம்பில் விழுந்த ஹெலிகாப்டர்| Dinamalar

ஹோனலுாலு:அமெரிக்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று எரிமலை குழம்பில் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.அமெரிக்காவில் பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு மாகாணம் ஹவாய். இங்கு, விமானி உட்பட ஆறு பேருடன் சென்ற சுற்றுலா ஹெலிகாப்டர் எரிமலைக் குழம்பில் விழுந்து நொறுங்கியது. இதில், நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், விமானி, 50, மற்றும் 18 வயது பெண் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. ஹோனலுாலு:அமெரிக்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் … Read more

கார்கீவில் போரால் உருக்குலைந்த பள்ளியின் முன் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் நடனம்

உக்ரைன் கார்கீவில் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உருக்குலைந்த தங்கள் பள்ளியின் முன் பட்டம் பெற்ற மாணவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். ரஷ்ய படையெடுப்பால் வீட்டில் இருந்து இணைய வழியில் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பட்டம் பெற்றனர். பள்ளி இறுதியில் நடைபெறும் நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில் போரால் உருக்குலைந்து காட்சியளிக்கும், தங்கள் பள்ளியின் மூலம் மாணவர்கள் நடனமாடி கொண்டாடினர். Source link

மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு| Dinamalar

சியோல்:தென் கொரியாவில், நீதிமன்றம் அருகே அலுவலக கட்டடம் ஒன்றில் மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.கிழக்காசிய நாடான தென் கொரியாவின் டேகு நகரில், மாவட்ட நீதிமன்ற கட்டடத்துக்கு அருகில், ஏழு மாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு, வழக்கறிஞர்கள் உட்பட பலர் அலுவலகங்கள் வைத்திருந்தனர். இதன் இரண்டாவது தளத்துக்கு நேற்று காலை சிறு சிலிண்டருடன் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த ஒரு அலுவலகத்துக்கு தீ வைத்தார். அது மற்ற தளங்களுக்கும் வேகமாக … Read more

சர்வதேச நிதியத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி| Dinamalar

வாஷிங்டன்:சர்வதேச நிதியத்தின் ஆசிய – பசிபிக் மண்டல இயக்குனராக இந்திய பொருளாதார நிபுணர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இது பற்றி சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா வெளியிட்டு உள்ள அறிக்கை:சர்வதேச நிதியத்தின் ஆசிய – பசிபிக் மண்டல துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், அதன் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இம்மாதம் 22ல் அவர் இந்தப்பதவியை ஏற்பார். இந்தியரான கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், சர்வதேச நிதித்துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். நிதியத்தின் முக்கியமான காலகட்டங்களில் எங்களுடன் இணைந்து … Read more