டிக்டாக்கில் தனது சம்பளத்தை வெளிப்படுத்திய பெண் – வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்

டென்வர்: அமெரிக்காவில் தனது சம்பளத்தை டிக்டாக் வீடியோவில் வெளிப்படுத்தியதற்காக பெண் ஒருவர் வேலையை இழந்துள்ளார். அமெரிக்காவின் டென்வரைச் சேர்ந்த லெக்ஸி லார்சன் என்பவர் தான் வேலையை இழந்த அந்தப் பெண். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்த லார்சன் இதற்கு முன் அக்கவுண்ட்ஸ் தொடர்பான பணிகளை செய்துவந்துள்ளார். சில நாட்கள் முன் அவருக்கு தொழில்நுட்ப பிரிவில் பணி கிடைத்துள்ளது. இதற்காக சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலைபார்த்த போது 70,000 டாலர் சம்பளம் பெற்ற லார்சன் … Read more

துப்பாக்கிச் சூடு4 பேர் பலி| Dinamalar

கிரீன்வுட் : அமெரிக்காவில், உணவகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், கொலையாளி உட்பட, நான்கு பேர் பலியாகினர்.அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் நகரில், கிரீன்வுட் பார்க் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள உணவகத்தில், துப்பாக்கியுடன் புகுந்த ஒருவர், சரமாரியாக சுட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். அப்போது, அங்கிருந்த ஒருவர் தன் துப்பாக்கியால் கொலையாளியை சுட்டுக் கொன்றார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கொலையாளி உட்பட நான்கு பேர் பலியாகினர்; இருவர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த … Read more

இலங்கை முழுதும்… எமர்ஜென்சி!; நாளை அதிபர் தேர்தல்| Dinamalar

கொழும்பு, : இலங்கை அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாடு முழுதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் … Read more

இலங்கை முழுதும்… எமர்ஜென்சி! நாளை அதிபர் தேர்தல்| Dinamalar

கொழும்பு :இலங்கை அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாடு முழுதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் பதவியிலிருந்து … Read more

மார்க்பர்க் எனும் கொடிய வைரஸ் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

இந்த மாத தொடக்கத்தில் இரண்டு வழக்குகளில் நோய்களை ஆய்வகங்கள் சரிபார்த்த பிறகு, உலக சுகாதார அமைப்பு (WHO) கானாவில் எபோலாவைப் போன்ற மார்பர்க் வைரஸால் ஏற்படும் நோயின் முதல் வெடிப்பை அறிவித்தது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி , எபோலாவின் அதே குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் தொற்றுநோயான ரத்தக்கசிவு காய்ச்சலானது, பழம் வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கும், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் மேற்பரப்புகளின் உடல் திரவங்களுடனான நேரடி தொடர்பு மூலமும் மனிதர்களுக்கு பரவுகிறது. new type of corona … Read more

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாகப் பணம் அனுப்பும் மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்த மகாராஷ்டிரம்..!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாகப் பணம் அனுப்பும் மாநிலங்களில் கேரளத்தை முந்தி மகாராஷ்டிரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2020 – 2021 நிதியாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணத்தில் 35 விழுக்காட்டை மகாராஷ்டிரமும், பத்து விழுக்காட்டைக் கேரளமும் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா சூழலில் வெளிநாடுகளில் வேலையிழந்த கேரளத்தவர் நாடு திரும்பியதே அவர்களின் பங்களிப்பு குறைந்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பணம் அனுப்பும் நாடுகளில் ஐக்கிய அரபு … Read more

13 சிவசேனா எம்.பி.,க்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர முடிவு| Dinamalar

மும்பை :மஹாராஷ்டிராவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 13 எம்.பி.,க்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மஹாராஷ்டிராவில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து, அக்கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.,க்கள் சமீபத்தில் வெளியேறினர். பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளனர். இந்நிலையில், அக்கட்சியின் 19 லோக்சபா எம்.பி.,க்களில் 13 பேர் தனிக்குழுவாக செயல்பட … Read more

மலேசியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள்.!

ஆப்ரிக்காவில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட்ட சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். செலங்கூர் துறைமுகத்திற்கு வந்த கப்பலில், ஆபத்தான பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டிருந்த 3 கண்டெய்னர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 6,000 கிலோ யானை தந்தங்களை இருந்துள்ளன. இது தவிர, காண்டாமிருக கொம்புகள், புலியின் எலும்புகள், எறும்பு தின்னியின் செதில்கள் என 144 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய கடத்தல் நடந்துள்ளது தெரியவந்தது. Source link

இணையத்தில் வைரலாகிய இம்மானுவேலை தெரியுமா?

“இம்மானுவேல்… இம்மானுவேல்…” இணையத்தில் கடந்த இரு தினங்களாக நெருப்புக் கோழி ஒன்றின் வீடியோ வைரலாகி வருகின்றது. அமெரிக்காவில் தெற்கு ஃபுளோரிடாவில் உள்ளது நக்கில் பம்ப் பண்ணை. இப்பண்ணையில் பணிபுரியும் டைய்லர் ப்ளேக் என்ற பெண் தனது டிக்டாக் பக்கத்தில் அப்பண்ணை குறித்தும், அப்பண்ணையில் உள்ள விலங்குகளின் தகவல்கள் குறித்தும் நகைச்சுவையான தொனியில் வீடியோ பகிர்ந்து வருகிறார். தனது வீடியோக்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்யும் வீடியோக்களில் நெருப்புக் கோழி … Read more

Naked Crepe: "இட்லி, தோசை"க்கு என்ன பெயர் பாருங்க.. இந்தியர்களை உலுக்கிய ஹோட்டல்!

அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் இட்லி, தோசை, மசால் தோசை, சாம்பார் வடைக்கு அதன் ஒரிஜினல் பெயர்களை வைக்காமல் ஆங்கிலமயப்படுத்தி பெயர் வைத்திருப்பதால் அந்த ஹோட்டலுக்கு வரும் தென்னிந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். பெயரில் என்ன இருக்கு என்று சொல்வார் ஷேக்ஸ்பியர். ஆனால் அதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இந்திய உணவகம் அப்படியே எடுத்துக் கொண்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம், பரம்பரை பரம்பரையாக, பல காலமாக சொல்லப்பட்டு … Read more