வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை: சீனா

நியூயார்க்: வடகொரியா மீண்டும் ஒருமுறை ஏவுகணை பரிசோதனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நாவுக்கான சீன தூதர் ஜாங் ஜுன் கூறும்போது, ‘வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அணு ஆயுத ஒழிப்பு என்பது சீனாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். Source link

சீனாவின் ஹங்சோ நகரத்தில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து… 4 பேர் உயிரிழப்பு

கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஹங்சோ நகரத்தில் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தின் 2-வது மாடியில் இயங்கி வந்த சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் முதலில் தீப்பிடிக்கத் தொடங்கி கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நச்சு வாயுவை சுவாசித்த ஒருவர், தீக்காயங்கள் ஏற்பட்ட 5 பேர் என மொத்தம் 11 பேர் … Read more

மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலை துண்டிக்க முடியாது: விளாடிமிர் புடின்

மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்து, மாஸ்கோவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைத் திசைதிருப்ப முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலை மேற்கத்திய நாடுகள் பல ஆண்டுகளுக்கு முழுமையாகத் துண்டிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வியாழனன்று இதை கூறினார். ரஷ்ய மன்னர் பீட்டர் தி கிரேட் அவர்களின் 350 வது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்கோவில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் ரஷ்ய அதிபர் … Read more

மனித நடமாட்டமே இல்லாத அண்டார்டிகாவிலும் பிளாஸ்டிக் கழிவுகள்

புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகாவில், புதிய பனிப்பொழிவில் நெகிழி துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பனிப்பொழிவில் நெகிழி துகள்கள் தென்படுவதை நியூசிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு லிட்டர் பனியில், சராசரியாக 29 நெகிழி துகள்கள் இருப்பதும், குளிர்பான பாட்டில்களிலும், ஆடைகளில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள் எனவும் தெரியவந்துள்ளது. Source link

அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, “வியாழக்கிழமை மதியம் மேரிலாண்டின் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து போலீஸார் … Read more

தாய்லாந்தில் போதை வஸ்துக்கள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்..கைது செய்யப்பட்ட 3,000 பேர் விடுவிப்பு..!

தாய்லாந்தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்பட்டதை தொடர்ந்து கஞ்சா சார்ந்த குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். சிறை வாசல்களில் காத்திருந்த உறவினர்கள் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆசிய நாடுகளில் முதல் முறையாகத் தாய்லாந்தில் போதை வஸ்துக்கள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கஞ்சா செடிகளை பயிரிடவும், உணவில் சேர்த்து கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது. அதே சமயம், கஞ்சா புகைப்பது இன்னும் குற்றச்செயலாக … Read more

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மேர்காங் நகரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தன்னாட்சி பெற்ற அபா திபெத்தியன் – கியாங் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேர்காங் நகரத்தில் ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகிய நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரோடு மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டு சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  Source link

தென்சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

தென்சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம், நிலச் சரிவுகளில் சிக்கி புதையுண்ட 25 பேரின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டனர். ஏறத்தாழ ஒரு லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள், 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட வீடுகள் பெருமழை வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகின. ஏறத்தாழ 10 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் கனமழைக்கு வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் மின் தடையால் இருளில் … Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசர் எச்சம் கண்டெடுப்பு… 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என கணிப்பு

ஐரோப்பாவின், இறைச்சி உண்ணும் மிகப் பெரிய டைனோசரின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். “ஐல் ஆப் வைட்” தீவு கடற்கரையில் பாறைகளுக்கிடையே டைனோசரின் புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டைனோசரின் பல்வேறு எலும்புகளை ஆய்வு செய்ததில் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த வகை டைனோசர் வாழ்ந்திருக்கலாம் என்றும், 33 அடி நீளம் இருந்திருக்கக் கூடும் எனவும் கருதுகின்றனர். கண்டுபிடிக்கப்பட்டவை Spinosaurs வகை டைனோசர்களாக கூட இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். Source link

இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பசில் ராஜபக்ச கடந்த ஆண்டு ஜூன் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரையில் இலங்கையின் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் நிதியமைச்சர் பதவியிலியிருந்து அவர் ராஜினாமா … Read more