உக்ரைன் நாட்டு அதிபருடன் அமெரிக்க பார்லி., சபாநாயகர் பேச்சு| Dinamalar

ஜபோரிஜியா-உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மத்தியில், உக்ரைன் சென்ற அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசி, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில், ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.துறைமுக நகரமான மரியுபோலில் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதி மட்டும் உக்ரைன் ராணுவம் வசம் உள்ளது. அங்கு, … Read more

பாக்., மாஜி பிரதமர் உட்பட 150 பேர் மீது வழக்கு| Dinamalar

லாகூர்-சவுதி அரேபியாவின் மதினா பள்ளி வாசலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக பலர் கூச்சலிட்ட சம்பவம் தொடர்பாக, பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உட்பட, 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோல்வி அடைந்ததை அடுத்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மதினா பள்ளி வாசலில் … Read more

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர்- உக்ரைன் அதிபர் சந்திப்பு

கீவ்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உக்ரைனுக்கு சென்றுள்ளார். தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர், சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காக நன்றி தெரிவிக்க வந்ததாகவும், போராட்டம் முடியும் வரை உக்ரைனுடன் இருப்பதாகவும் உறுதி அளித்தார்.  இருவரும் சந்தித்தபோது எடுத்த விடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். ரஷியாவின் அத்துமீறலுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் … Read more

உலகின் மிக உயரமான இயேசு சிலை இதுதான்!

பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் உள்ள கொர்கொவாடோ மலை மீது 125 அடி உயர இயேசு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நிறுவப்பட்ட இந்த சிலை பிரேசிலின் நாட்டின் அடையாக சின்னமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ரியோவில் உள்ள இயேசு சிலையைவிட உயரமான சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற நகரத்தில் உள்ள மலை மீது 141 அடி உயர இயேசு சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. … Read more

நான் எவ்வாறு இடதில் இருந்து வலதுசாரி ஆனேன்..?- விளக்குகிறார் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: தான் எவ்வாறு இடதில் இருந்து வலதுசாரி ஆனேன் என்று விளக்க, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கதில் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்தார். தற்போது இதனை இணையத்தில் விற்க அதனை வரைந்த ஓவியக் கலைஞர் முயன்று வருகிறார். அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முன்னதாக டிவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கினார். இதனை அடுத்து அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் … Read more

நியூசிலாந்தில் முதன்முறையாக ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு உறுதி

வெல்லிங்டன், சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.  உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 9 லட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நியூசிலாந்து நாட்டில் … Read more

அமெரிக்காவின் ஆன்டோவர் நகரில் கடந்து சென்ற மிகப்பெரிய சூறாவளிக்காற்று..!

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆன்டோவர் நகரில் மிகப்பெரிய சூறாவளி காற்று கடந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. விச்சிட்டா நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தூரத்தில் வீசிய அந்த சூறாவளி காற்று பல வீடுகளையும், கட்டிடங்களையும் சேதப்படுத்தியது. மேலும் மின் இணைப்பு துண்டிப்பால் ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சூறாவளி, பட்லர் மற்றும் செட்விஜ் கவுண்டிகள் வழியே கடந்து செல்லும் போது பயங்கரமாக சுழன்று சென்றதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். … Read more

அமெரிக்காவில் உணவு திருவிழாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 5 பேர் காயம்

மிஸ்ஸிஸிப்பி, அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி நகரில் ஆண்டுதோறும் மட்பக்ஸ் என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டும் இதேபோன்று திருவிழா களை கட்டியது.  இந்த திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில் விழாவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.  5 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி நகர ஷெரிப் டைரீ ஜோன்ஸ் கூறும்போது, படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு … Read more

நிலக்கரி வாங்க பணமில்லை; 18 மணிநேரம் மின்வெட்டால் தவிக்கும் பாகிஸ்தான்: மக்கள் போராட்டம் 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு எழுந்தது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் … Read more

இலங்கையில் தொழிலாளர் தின விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இன்று நுவேரா எலியாவில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  இதுதொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- இலங்கையின் நுவேரா எலியாவில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) மே தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது பிரதமர்  மோடி அவர்கள், தமிழர்களுக்காகவும், இலங்கைக்காகவும் செய்யும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இன்று இங்குக் கூடியிருந்தனர்.  2017ஆம் ஆண்டு … Read more