மனித உரிமைகள் ஆணையம் ஆப்கனில் கலைப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் நாடு கடந்த ஆண்டு தலிபான்கள் வசம் மீண்டும் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த நாடு தீவிரவாதிகளின் புகலிடமாக மாறும் என உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. ஆனால் அதை மறுக்கும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் மண்ணில் எந்தவொரு தீவிரவாத இயக்கத்தையும் அனுமதிக்கமாட்டோம் என கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவந்த மனித உரிமைகள் ஆணையத்தை தலிபான்கள் கலைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், நாட்டில் செயல்பட்டு வந்த தேசிய நல்லிணக்க உயர் கவுன்சில் (எச்சிஎன்ஆர்) உள்ளிட்ட … Read more

இலங்கையில் பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பு

இலங்கையில் கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது . தலைநகர் கொழும்புவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா இதுவரை நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மதிப்புடைய டீசலை 12 முறை கப்பல்களில் அனுப்பி வைத்துள்ளது. ஆயினும் இன்னும் கடுமையான பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கிறது. எந்தப் பெட்ரோல் நிலையத்திலும் கையிருப்பு இல்லை என்ற பலகை காணப்படுவதாக ஓட்டுனர்கள் கூறுகின்றனர். Source link

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கான் அரசே காரணம் என கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதில் இம்ரான்கான் அரசு கவிழந்து, அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே பிரதமர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்ரான்கான் தனது கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 14-ந்தேதி பஞ்சாப் மாகாணம் சியால்கோட் நகரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இம்ரான்கான் தன்னை … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுத உதவி தொடர்ந்து வழங்கப்படும்: பிரான்ஸ் உறுதி

18.05.2022 04.20:  பிரான்சில் நடைபெறும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாடினார். உக்ரைனில் ரஷியாவின் ஆக்ரமிப்பு குறித்து திரைப்படம் எடுக்குமாறு, புதிய தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.  ஹிட்லர் குறித்து 1940ம் ஆண்டில் வெளியான தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தில் சார்லி சாப்ளினின் பேசும் இறுதி காட்சி வசனத்தை ஜெலன்ஸ்கி மேற்கோள் காட்டினார்.   மனிதர்களின் வெறுப்பு மறைந்து விடும், சர்வாதிகாரிகள் இறந்து விடுவார்கள், மேலும் அவர்களிடம் இருந்த … Read more

6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கிரீன் கார்டு; அமெரிக்க அதிபர் ஆலோசனை குழு பரிந்துரை| Dinamalar

வாஷிங்டன் : ‘அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான, ‘கிரீன் கார்டு’ கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்’ என, அமெரிக்க அதிபருக்கான ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு, பல்வேறு வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ‘எச்1பி விசா’ அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் மென்பொருள் இன்ஜினியர்கள் உட்பட, தொழில்முறை பணிகளில் அதிக அளவில் இது வழங்கப்படுகிறது. இதை … Read more

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமெரிக்கா

ஏற்றுமதிக்கு தடை கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்தியா 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய எண்ணி இலக்கு வைத்து இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த 13-ந் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது. உள்நாட்டில் விலை ஏற்றத்தை தடுக்கிற நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த … Read more

ராணுவ புரட்சி முறியடிப்பு; மாலி அரசு அறிவிப்பு| Dinamalar

பமாகோ : மேற்கத்திய நாட்டின் பின்னணியில் உருவான ராணுவ புரட்சியை, வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக, மாலி அரசு அறிவித்துள்ளது.மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த மாலியில், ராணுவ தளபதி அசிமி கோய்டா, 2020 மற்றும் 2021ல் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றினார். இதற்கு, ஐேராப்பிய நாடான பிரான்ஸ் உள்ளிட்ட நாடு கள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, மாலி – பிரான்ஸ் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்தது. மாலியில் தேர்தல் நடத்த பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தி வந்தன. இதையடுத்து, … Read more

"பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை நம்ப தயாராக இல்லை" – துருக்கி அதிபர் எர்டோகன்

அங்காரா, உக்ரைன் மீதான ரஷியயா படையெடுப்பை தொடர்ந்து, ரஷியாவின் அண்டை நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இருநாடுகளும் விரைவில் இணைவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.  ரஷிய படையெடுப்பில் இருந்து பாதுகாப்பு வேண்டி தாங்கள் நேட்டோவில் இணையவுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்தன. ஆனால் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்றால் அதன் தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளின் ஒப்புதல் தேவைப்படுகிறது.  இந்தநிலையில், நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் … Read more

ஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார் 

புதுடெல்லி: அரசு முறைப் பயணமாக ஜமைக்காவுக்கு சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தைத் திறந்து வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் நாடான ஜமைக்காவுக்கு மே 15-ம் தேதி மாலை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை கிங்ஸ்டனில் உள்ள தேசிய மாவீரர் பூங்காவுக்கு சென்ற … Read more