#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பிரான்ஸ் பத்திரிகையாளர் குண்டுவீச்சில் பலி – விசாரணைக்கு அழைப்பு

Live Updates 31 May 2022 3:35 AM GMT ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு 31 May 2022 12:35 AM GMT ரஷியா மீதான எண்ணெய் தடைக்கு ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான சார்லஸ் மைக்கேல், உக்ரேனில் போருக்கான ரஷியாவின் நிதியுதவியை குறைக்கும் முயற்சியில், ரஷியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வரும் எண்ணெய் இறக்குமதியில் 2/3ஐ தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவித்தார். … Read more

ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு கல்லீரல் தொடர்புடைய ஹெபாடிடிஸ் நோய்..!

ஆர்கானிக் ஸ்ட்ராபரி பழங்களில் இருந்து பரவும் கல்லீரல் தொடர்புடைய ஹெபாடிடிஸ் நோய் குறித்து அமெரிக்கா மற்றும் கனடா  உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் விசாரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா நகரங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்டராபரி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு ஹெபாடிடிஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரு நாடுகளிலும் 15க்கும் மேற்பட்டோர் கல்லீரல் செயலிழக்க நோயால் அவதிப்படுவதாகவும் காலாவதியான ஸ்டராபரி பழங்களை மக்கள் தூக்கி எறியுமாறும் உணவு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.   Source link

அமெரிக்காவில் 2 படகுகள் நேருக்கு நேர் மோதல் – 5 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமை ராணுவ வீரர்களுக்கான நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படும். மேலும் நினைவு நாளுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை நாட்கள் ஆகும். எனவே இந்த 3 நாள் தொடர் விடுமுறையை அமெரிக்க மக்கள் பூங்கா, ஏரி, கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கொண்டாடித்தீர்ப்பார்கள். அந்த … Read more

'மங்கும் பார்வை; தீவிர புற்றுநோய்: ரஷ்ய அதிபர் புதின் 3 ஆண்டுகளே உயிருடன் இருப்பார்' – உளவாளி

புற்றுநோய் முற்றிவிட்டதால் ரஷ்ய அதிபர் புதின் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வாழலாம் என்று மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதுவரை எதையுமே ரஷ்ய அரசு தரப்பு உறுதி செய்யவில்லை. அண்மையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் முற்றிவிட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்போகிறார். அதனால், அவர் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய நிக்கோல் பாத்ருசேவுக்கு … Read more

போரில் உக்ரைனுக்கு பெரிதும் உதவிய துருக்கி டிரோன்களுக்கு முழு உலகமும் வாடிக்கையாளராக மாறும் – துருக்கி டிரோன் வடிவமைப்பாளர்

உக்ரைன் போருக்குப் பிறகு முழு உலகமும் தங்களின் டிரோன் தயாரிப்புக்கு வாடிக்கையாளராக மாறி விடும் என்று துருக்கி டிரோன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவக் கூடிய வகையில் துருக்கி தயாரிப்பான  Bayraktar TB2 வான்வழி டிரோன்கள் ரஷ்ய பீரங்கிகள், கவச வாகனங்கள் முற்றிலுமாக அழித்தது. இஸ்தான்புல்லைச் சேர்ந்த Bayraktar டிரோன் நிறுவனம் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போரில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த TB2 ரக டிரோன்கள் 12மீட்டர் நீள இறக்கைகள் கொண்டது. 25ஆயிரம் அடி உயரத்திற்கு … Read more

பெண் வேடமிட்டு வந்து மோனலிசா ஓவியம் மீது ‘கேக்’ வீசியவர் கைது

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகின் மிகப் பெரிய லூவ்ரே அருங்காட்சியகம் உள்ளது. இங்கு லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் பாதுகாக்கப்படுகிறது. வழக்கம் போல் அருங்காட்சியகத்துக்கு நேற்று முன்தினம் பார்வையாளர்கள் ஏராளமானோர் வந்தனர். சக்கர நாற்காலியில் மூதாட்டி போல் வேடமிட்டு வந்த நபர் ஒருவர் திடீரென குதித்து எழுந்து, தான் அணிந்திருந்த ‘விக்’கை தூக்கி வீசினார். மோனலிசா ஓவியத்தை அவர் உடைக்க முயன்றார். ஆனால் குண்டு துளைக்காத கண்ணாடியால் அந்த ஓவியம் பாதுகாக்கப்பட்டிருந்ததால் அவரது … Read more

கியூபாவில் புகையிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.!

கியூபாவில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. பினார் டெல் ரியோவில் அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான புகையிலை சேகரிப்பு கிடங்கு மற்றும் உற்பத்தி ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென பரவியது. அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், விண்ணை முட்டும் அளவுக்கு கரும் நச்சுபுகை வெளியேறியது. சுமார் 26 டன் அளவிலான விற்பனை தயாராக இருந்த புகையிலை பொருட்கள் தீக்கிரையாகியது.  Source link

கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை முடக்கம்: கனடா அதிரடி அறிவிப்பு

ஒட்டாவா : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் … Read more

ரஷ்ய அதிபர் புடினுக்கு பார்வையிழப்பா?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ :ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண் பார்வையை இழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றி ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிபர் விளாடிமிர் புடின் 69 புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.மூன்று ஆண்டுகளுக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருக்காது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையை இழந்து வருகிறார். அவர் பேச வேண்டியதை பெரிய எழுத்துக்களில் உருவாக்கித் தர வேண்டியுள்ளது. கை கால்களில் … Read more

நேபாளத்தில் விமான விபத்து: உயிரிழந்தவர்களில் 21 பயணிகளின் உடல்கள் இதுவரை மீட்பு

காத்மாண்டு: விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துப் பகுதியில் இருந்து இதுவரை 21 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய ரக 9 என்ஏஇடி விமானம் 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகருக்கு கிளம்பியது இந்த … Read more