உலக செய்திகள்
இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது
கொழும்பு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இலங்கையில் இந்திய ரூபாயை பொது பணமாக பயன்படுத்த தயாராக இருப்பதாக கூறியிருந்தார். அதன்பிறகு அரசு முறை பயணமாக இந்திய வந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனிடையே ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணத்துக்கு பிறகு, இலங்கையில் அமெரிக்க டாலர், சீனாவின் யென் ஆகியவற்றை போல இந்திய … Read more
ரஷியாவில் இருந்து முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் லூனா-25
லூனா-24 என்பது சோவியத் ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். இது கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது. இந்தநிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11-ந் தேதி ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறும்போது நிலவின் … Read more
மெக்சிகோவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதலில் 7 பேர் பலி
தொழிற்சாலை பணியாளர்கள் வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் குவெரேடாரோ மாகாணத்தில் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் அங்குள்ள தொழிற்சாலை பணியாளர்கள் பலர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எல் மார்க்ஸ்வெஸ் நகரில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே பஸ் சென்றது. அதேசமயம் அந்த தண்டவாளத்திலும் ரெயில் வந்து கொண்டிருந்தது. பஸ் தூக்கி வீசப்பட்டது ஆனால் தண்டவாளம் அருகே சிக்னல், கேட் எதுவும் இல்லாததால் அந்த ரெயில் வந்தது பஸ் டிரைவருக்கு தெரியவில்லை. எனவே … Read more
Canadian Prime Minister Trudeau separated from his wife | மனைவியை பிரிந்தார் கனடா பிரதமர் ட்ரூடோ
டொரன்டோ: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி சோபி கிரிகோரி ஆகியோர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக, கூட்டாக நேற்று அறிவித்தனர். வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக, 2015 முதல் பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ, 51. இவர், தன் சிறு வயது தோழியான சோபி கிரிகோரி, 48, என்பவரை காதலித்து, 2005ல் திருமணம் செய்து கொண்டார். சோபி, ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு, சேவியர், 15, … Read more
சிறுவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்த சீன அரசு கட்டுப்பாடு
பெய்ஜிங்: சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் தூக்கமிழப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாவதாக கூறப்படும் நிலையில், சீன அரசு ஸ்மார்ட்போன் பயன்பாடு சார்ந்து புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வரைவை சீன அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு … Read more
140 ஆண்டுகளில் இல்லாத மழை… 27 பேர் பலி.. கொட்டும் மழையால் உருக்குலைந்த சீனா!
உலகம் முழுவதும் பருவநிலை மாறுபாடு ஒவ்வொரு மாதிரியாக பிரதிபலித்து வருகிறது. சில நாடுகளில் கொளுத்தும் வெயில், உயரும் வெப்பநிலை, தண்ணீர் பஞ்சம் என மக்கள் வறட்சியை சந்தித்து வருகின்றனர். சில நாடுகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சீனாவில் கன மழை கொட்டி வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் கிழமை … Read more
டைட்டைன் நீர்மூழ்கி நிறுவனத்தின் அடுத்த பிளான் இதுதான்..! வீனஸ் கிரகத்துக்கு போலாமா?
OceanGate நிறுவனத்தின் இணை நிறுவனரான Guillermo Sohnlein, அறிவித்துள்ள அடுத்த சாகச பயணம் தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
பிரேசில் பயங்கரம்… போதைப்பொருள் கும்பல் அட்ராசிட்டி… சீறிய புல்லட்கள்… 43 பேர் சுட்டுக் கொலை!
பிரேசில் நாட்டின் சா பாலோ நகரில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் போதைப் பொருள் கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க சிறப்பு அதிரடிப் படை போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஆபரேஷன் ஷீல்டு என்ற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தினர். பிரேசில் ரெய்டு சம்பவங்கள் எங்கு பார்த்தாலும் அதிரடி ரெய்டு, கைது நடவடிக்கைகள் பாய்ந்தன. போதைப் பொருள் கும்பல்கள் சந்திக்கும் இடங்கள் குறித்து உளவுத்துறையிடம் இருந்து போலீசார் ரகசிய தகவல்களை பெற்றனர். … Read more