தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர ரஜினி போட்ட திட்டம்! கசிந்த தகவல்


தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசத்தலான திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர்.

இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு குடும்பமே இருவரையும் சேர்த்து வைக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் ஐஸ்வர்யா மனமிறங்கி மீண்டும் தனுஷுடன் வாழ விரும்பி உள்ளார். ஆனால் தனுஷ் எனக்கு ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை

என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இப்படியே விட்டால் சரிவராது என்று எண்ணி ரஜினி ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார்.

அதாவது பிள்ளைகள் மூலமாக பெற்றோர் இருவரையும் சந்திக்க வைக்க நடிகர் ரஜினிகாந்த் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிள்ளைகள் பேசும் போது பெற்றவர்களின் மனம் கட்டாயமாக மாறும் என்ற எண்ணத்தில் ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.       



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.