பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்துவருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருகிறது – ஐநா.சபையில் இந்தியா <!– பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்துவ… –>

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் நிதியுதவி அளித்துவருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதித்திட்டங்களை அரங்கேற்றி வருவதாக இந்தியா ஐநா.சபையில் முறையிட்டது.

தெற்காசிய நாடுகள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்திய ஐநாவுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், தீவிரவாதத்தின் மையப்பகுதியாக பாகிஸ்தான் விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை இந்தியா இழந்ததை சுட்டிக் காட்டிய அவர், அவர்களைக் கொன்ற தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தனர் என்பது உலகத்திற்கே தெரியும் என்று கூறினார்.

மும்பைத் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் சுட்டிக்காட்டிய ராஜேஷ் பரிஹார் பாகிஸ்தான் டிரோன்களைப் பயன்படுத்தி எல்லைத் தாண்டி ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும் கடத்தி வருவதையும் கண்டித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.