லதா மங்கேஷ்கர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும்: பாக். அமைச்சர் புகழஞ்சலி

இஸ்லாமாபாத்: தலைசிறந்த பாடகர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இதயங்களைக் கட்டி ஆளும் என்று பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. லதா செப்டம்பர் 28, 1929 அன்று பாரம்பரிய பாடகரும் நாடகக் கலைஞருமான பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் மற்றும் ஷெவந்தி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். மறைந்த … Read more

குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க 8 வாரங்கள் தேவை: நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து ட்விட்டர் பதில்

முழு நேரக் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கத் தங்களுக்கு 8 வாரங்கள் தேவை என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, 2 நாட்களில் ட்விட்டர் நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், புதிய விதிகளின்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது. அதற்கு ட்விட்டர் … Read more

ஹிஜாப் தடை: ஆதரிக்கும் இஸ்லாமியர்கள்!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகள் சிலவற்றில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் (தலை மறைப்பு துணி) அணிய தடை விதிக்கப்பட்டது. அப்படி அணிந்த மாணவிகளை பள்ளிக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம், “அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் துண்டு அணிந்து வருவோம்” என்று இந்து மாணவிகள் சிலர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த ஹிஜாப் தடையை பாஜக உள்ளிட்ட இந்துத்து அமைப்புகள் ஆதரிக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. காங்கிரஸுடன் இணைந்து, … Read more

ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். அவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும், அவர்களை சேர்த்து வைக்க இரு குடும்பத்தாரும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். நீ ஐஸ்வர்யாவுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று அப்பாவும், அம்மாவும் தனுஷிடம் கூறினார்களாம். அப்பா, என் திருமண வாழ்க்கையில் நடந்தது என்னவென்றே உங்களுக்கு தெரியாது. ஐஸ்வர்யா என்னவெல்லாம் செய்தார் தெரியுமா என்று தன் மனதில் இருந்ததை எல்லாம் அரை மணிநேரம் கொட்டித் தீர்த்தாராம் தனுஷ் … Read more

இலங்கை மக்களுக்கு விரைவில் ஏற்படப் போகும் பாரிய நெருக்கடி நிலை

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலர்  பற்றாக்குறையால் குறித்த இக்கட்டான நிலை ஏற்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.   துறைமுகத்தில், 500 அரிசி கொள்கலன்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் டொலர் நெருக்கடியின் காரமணாக  சிக்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  குறித்த கொள்கலன்களில் சீனி, உருளைக்கிழங்கு, பருப்பு, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இருக்கின்றன. இந்த கொள்கலன்களை, விடுவிக்க முடியாமல் போனால் சந்தையில் அத்தியாவசிய … Read more

மொராக்கோ நாட்டில் 104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு <!– மொராக்கோ நாட்டில் 104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவ… –>

மொராக்கோ நாட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 5 வயதுச் சிறுவனின் சடலத்தை மீட்புக் குழுவினர் மீட்டனர். 25 சென்டி மீட்டர் விட்டமுள்ள கிணற்றில் 104 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் ராயனை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வந்தனர். ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய குழித் தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளிட்ட இடையூறுகளால் மீட்பு பணியில் தொய்வு … Read more

அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதி விபத்து… 3 பேர் உயிரிழப்பு <!– அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோத… –>

ஹரியானா மாநிலம் களனூரிலிருந்து ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர். லஹ்லி கிராமத்திற்கு அருகே ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், எதிர்புறத்தில் இருந்து வந்த டிராக்டர் டிராலி மீது பலமாக மோதியது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

லதா மங்கேஷ்கர் மரணம்! இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பு- அரசின் முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை 8.12 மணிக்கு காலமானார். கொரோனா சிகிச்சைக்கு பின்னர், பல உடல் உறுப்புகள் பாதிப்படைந்ததால் நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது, இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.07 லட்சம் பேர் பாதிப்பு – 14.48 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,11,666 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 14,48,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,474 பேர் அதிகரித்து மொத்தம் 4,21,88,138 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 865 அதிகரித்து மொத்தம் 5,01,979 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 2,13,248 பேர் குணமடைந்து இதுவரை 4,04,61,148 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 12,25,011 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 45,10,770 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

தேன் குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடியவர் லதா மங்கேஷ்கர்: தமிழக முதல்வர் இரங்கல்

சென்னை: இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைகிறேன்.  எண்பதாண்டுகாலம் பரந்து விரிந்ததான அவரது இசை வாழ்வில் தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அவர் வருடிச் சென்றுள்ளார்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். திராவிடர் கழக … Read more