ஆமாம்…! அபிஷேக் பச்சனை பழிவாங்குவதற்காக ஃபோனை திருடினேன்…! உண்மையை கூறிய பிரியங்கா சோப்ரா…!

அபிஷேக் பச்சனின் ஃபோனை நான் தான் திருடினேன்’ என்று பேட்டியில்
பிரியங்கா சோப்ரா
கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

பின் இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு பிரியங்கா சோப்ரா 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த
தமிழன்
என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.

ப்ளூ சட்டை மாறனின் ‘வலிமை’ விமர்சனம்: சார்பட்டா பட நடிகர் வேம்புலியின் பதிலடி..!

அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கி விட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட்,
பாலிவுட்
,
வெப் சீரிஸ்
என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இதனிடையே பிரியங்கா சோப்ரா அவர்கள் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து வந்தார்.

பின் இவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்கள். அதுமட்டும் இல்லாமல் வெகு சிறப்பாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதோடு பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தற்போது இத்தம்பதியினர் பெற்றோர்களாகி உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று உள்ளனர். இவர்களுக்கு
பெண் குழந்தை
பிறந்து உள்ளது. குழந்தையின் பெயர் குறித்து பிரியங்கா சோப்ரா இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் பெற்றோர்கள் ஆனதை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். இருந்தாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது சரியா? என்று சிலர் கேள்வியும் எழுப்பி இருந்தார்கள்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா பிரபல நடிகரின் போனை திருடிய சம்பவம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சில வருடங்களுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் அமிதாப் பச்சனின் மகன்
அபிஷேக் பச்சன்
குறித்து கேட்டு இருந்தார்கள். அதற்கு பிரியங்கா சோப்ரா கூறியது, அபிஷேக் mad. ஒரு முறை நான் அவர் போனை திருடினேன். ஆனால், அபிஷேக் தான் என்னுடைய போனை முதலில் திருடினார். அதற்கு பழிவாங்க தான் நான் அவருடைய போனை திருடினேன்.

பின் அந்த போனில் I miss you where have been? You wanna என்று ஒரு நடிகைக்கு மெசேஜ் அனுப்பினேன். அது
ப்ரீத்தி ஜிந்தா
தான். பிறகு நான் மெசேஜ் அனுப்பி விட்டு போனை வேனில் ஒளித்து வைத்து விட்டு ஓடி விட்டேன். அந்த மெசேஜ் பார்த்த ப்ரீத்தி ஜிந்தா அதிர்ச்சி ஆகி what is wrong with you என பதிலும் அனுப்பி இருக்கிறார் என்று பிரியங்கா சோப்ரா கூறி இருந்தார். இப்படி பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.