உக்ரைனில் இருந்து தமிழகத்தை சேர்ந்த மேலும் 4 மருத்துவ மாணவிகள் சென்னை வந்தடைந்தனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ரூமேனியா, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி ருமேனியாவில் இருந்து இந்தியா விமான படையின் விமானம் மூலம் 180 இந்தியர்கள் காஸியாபாத் விமான படை தளத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து ஹரிஷனா, செலின் சுவேதா, அனுப்ரியா மற்றும் ஜெயபிரபா ஆகிய தமிழகத்தை சேர்ந்த 4 மாணவிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.u