திமுக கொடி கம்பத்தின் அருகே இருந்த விசிக கொடிக்கம்பம் மாயம்., போராட்டத்தில் குதித்த விசிகவினர்.! 

நள்ளிரவில் நடப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் காலையில் காணாமல் போனதால், அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பாலூரில் இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் காலையில் காணாமல் போன சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலூர் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது கட்சியின் கொடி கம்பம் நடுவதற்கு முயற்சித்தனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெறிக்கவே சம்பவ இடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து இருதரப்பினரிடையே சமரச கூட்டம் நடத்தினர். 

இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் பாலூர் கடைத்தெருவில் திமுக கொடி கம்பத்தின் அருகே விசிக கொடி கம்பத்தை நட்டு விட்டு சென்றனர்.

இன்று காலை அங்கு அந்த கோடி கம்பம் காணாமல் போனது. இதனை கண்ட விடுதலை சிறுத்தை பிரமுகர்கள், நிர்வாகிகள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், கடலூர்-பாலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

போராட்டம் தொடர்ந்து நடப்பதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.