இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 6 ஆயிரத்திற்கு கீழ் சென்றது| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேருக்கு கோவிட் உறுதியானது. 11,651 பேர் குணமடைந்தனர். 289 பேர் உயிரிழந்தனர்.
தற்போது, 63,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,23,78,721 பேர் கோவிட்டில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பும் 5,14,878 ஆனது. தினசரி கோவிட் தொற்று விகிதம் 0.63 ஆக உள்ளது.

178.55 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.