#Breaking || ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை.! 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நட்டு தலைவர்களும் தொலைபேசி மூலமாக சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் மோடியிடம் விளக்கமளித்துள்ளார்.

உக்ரைன் நிலவரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி இந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் இடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, உக்ரானில் நிலவி வரும் சூழல் தொடர்பாக அதிபர் செலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

உக்ரேன் அதிபருடன் 35 நிமிடங்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக உதவிய உக்ரைன் அதிபருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.