பாலா, மனைவி பிரிய என்ன காரணம்?: வெளியான திடுக் தகவல்

இயக்குநர் பாலாவுக்கும், தேனியை சேர்ந்த முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி மதுரையில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. சிலை மாதிரி மனைவி கிடைத்திருக்கிறார் என்று பலரும் தெரிவித்தனர்.

பாலா,
முத்துமலர்
தம்பதிக்கு பிரார்த்தனா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து
விவாகரத்து
பெற்றுவிட்டனர்.

இது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது,

பாலாவும், முத்துமலரும் பிரிந்ததில் ஆச்சரியம் இல்லை. இது எதிர்பார்த்தது தான். கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களுக்கு இடையே ஒரே பிரச்சனை.

பிரச்சனை மேல் பிரச்சனையாக இருந்தது. ஒரு கட்டத்தில் இனியும் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

சேர்ந்து இருந்து சண்டை போடுவதை விட பிரிந்துவிடலாம் என விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார்கள் என்கிறார்கள்.

பாலாவுக்கும், முத்துமலருக்கும் திருமணமான அதே ஆண்டு தான் தனுஷுக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் திருமணம் நடந்தது. அவர்களும் பிரிந்துவிட்டார்கள். முறைப்படி விவாகரத்து பெறாவிட்டாலும் மீண்டும் சேரும் எண்ணம் இல்லையாம்.

Simbu:என்னாது, சிம்புவை ஓகே பண்ணிட்டாரா ஐஸ்வர்யா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.