ரஷ்ய விவகாரம்: “வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்க விரும்புகிறீர்கள்?" -இந்தியாவுக்கு அமெரிக்கா கேள்வி

உக்ரைனில் 22-வது நாளாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நடந்து வரும் போரால் நாளுக்கு நாள் உக்ரைனைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளும் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. ரஷ்யாவின் போர் நடவடிக்கை காரணமாக அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இதனால் கச்சா எண்ணெயை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் என்ன மாதிரியான முடிவெடுப்பது என தவித்து வருகின்றன. இந்த நிலையில் தான், ரஷ்யா தற்போது இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.

கச்சா எண்ணெய்

அதையடுத்து, ரஷ்யாவின் இந்த ஒப்பந்தத்தை இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் ஜாவோவிடம், இந்தியாவின் செயல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜென் ஜாவோ, “எந்தவொரு நாட்டுக்கும் எங்கள் செய்தி அது தான், நாங்கள் விதித்த, பரிந்துரைத்த பொருளாதார தடைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். எனினும் இந்தியாவில் நடவடிக்கை இது அதை மீறும் என்று நான் நம்பவில்லை. ஆனால் வரலாறு எழுதப்படும்போது நீங்கள் எங்கு நிற்க விரும்புகிறீர்கள் என்பதையும் சிந்தியுங்கள்” என பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.