பஞ்சாபில் வீடு,வீடாகச் சென்று ரேசன்பொருள் வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் முதலமைச்சர் பகவந்த் மான்

பஞ்சாபில் வீடுகளுக்குச் சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பகவந்த் மான் தொடக்கி வைத்துள்ளார்.

அலுவலர்கள் தொலைபேசியில் அழைத்து நேரம் கேட்டுக் குறித்த நேரத்தில் வீட்டுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்குவர் என அவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் விருப்பத் தேர்வுதான் என்றும், ரேசன் கடைகளுக்கு நேரடியாகச் சென்றும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

 நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆன பின்னும் ரேசன் கடைகளில் பொருட்களைப் பெற மக்கள் வரிசையில் நிற்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.