தினமும் எகிறி அடிக்கும் கொரோனா…நாடு முழுவதும் விரைவில் பொது முடக்கம்?

பொது முடக்கம், தடுப்பூசி போன்றவற்ரால் உலக அளவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் சில நாடுகள் இன்னும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.

குறிப்பாக ஆசிய நாடுகளை இன்னும் கொரோனா முற்றிலும் விடுவதாக இல்லை. இதற்கு தென்கொரியாவில் சமீப நாட்களாக அன்றாடம் பதிவாகி வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், அதன் விளைவான மரணங்களுமே உதாரணம்.

அங்கு நேற்று முன்தினம் 3. 47 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் தலைநகர் சியோலில் மட்டுமே 81 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இதுக்கொரு எண்டே இல்லையா? – ஒரே நாளில் 3.35 லட்சம் பேருக்கு கொரோனா!

இந்த நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 4.24 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1.27 கோடியாக அதிகரித்துள்ளது.

இதேபோன்று நேற்று ஒரே நாளில் தென் கொரியாவில் 432 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதால், அங்கு இதுநாள் வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

சமீபகாலமாக நாள்தோறும் லட்சக்கணக்கில் பதிவாகிவரும் கொரோனா பாதிப்புகள், நூற்றுக்கணக்கில் நிகழ்ந்துவரும் கொரோனா பலிகள் காரணமாக தென் கொரியாவில் பொது முடக்கம் அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அப்படியொரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டால், தங்களது வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்ற அச்சத்தில் தென் கொரிய மக்கள் உள்ளனர்.

அடுத்த செய்திஒரு வேளை இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தால்.. நவாஸ் ஷெரீப் தம்பி பிரதமராவார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.