Dhanush: ஐஸ்வர்யாவுடன் பிரிவு… அம்மா, அப்பாவிடம் தஞ்சமடைந்த தனுஷ்..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
, ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர்.

அவர்களின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கே பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்தை தொடர்ந்து மகன்கள் இருவரும் சில நாட்கள் தனுஷுடனும், சில நாட்கள் ஐஸ்வர்யாவுடனும் இருந்து வருகின்றனர். மேலும், தங்கள் பெற்றோர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என யாத்ரா, லிங்கா விரும்புவதாகவும் கூறப்பட்டது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே தங்களின் சினிமா வேளைகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் வாத்தி, தனது அண்ணன்
செல்வராகவன்
இயக்கத்தில் ‘
நானே வருவேன்
‘ படங்களிலும் நடித்து வருகிறார். இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இன்னொரு தேசிய விருது கன்பார்ம்: மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி..!

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தளத்தில் தனது மகன் யாத்ராவுடன் தனுஷ் எடுத்து புகைப்படம் இணையத்தில் படு வைரலானது.

இந்நிலையில் தனுஷும் அவரது அண்ணன் செல்வராகவனும் தனது அம்மா, அப்பாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நெடு நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் தனுஷை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

BEAST VS KGF2 : யார் படம் ஓடும்?

அடுத்த செய்திபீஸ்ட் தீம் மியூசிக் காப்பியா ? ஆதாரத்துடன் சிக்கிக்கொண்ட அனிருத்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.