பைக் ரேஸில் ஈடுபட்ட 7 வாலிபர்கள் சிக்கினர்

அண்ணாநகர்: அண்ணாநகர், வில்லிவாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் நேற்று  7 வாலிபர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். தகவலறிந்த இந்த 3 காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து 7 பேரையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.    மேலும், மீண்டும் தடையை மீறி பைக் ரேஸில் ஈடுபட்டால் லைசென்ஸ் பறிமுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.