பிரித்தானியா, சுவிஸ் உட்பட பல்வேறு நாடுகளுக்கு எதிராக ரஷ்ய நடவடிக்கை! புடின் ஆணை


 நட்பற்ற நாடுகளுக்கு எதிராக ரஷ்ய அதிபர் புடின் புதிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ரஷ்ய நட்பற்றதாக கருதும் நாடுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தும் ஆணையில் புடின் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த ஆணை திங்கட்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் நார்வே, சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கான ரஷ்யாவின் எளிமைப்படுத்தப்பட்ட விசா வழங்கும் திட்டத்தை இந்த ஆணை ரத்து செய்துள்ளது.

மேலும், ரஷ்யா மீதும், அதன் குடிமக்கள் அல்லது அதன் சட்ட நிறுவனங்களுக்கு எதிராக நட்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மற்றும் நாடற்ற மக்கள் மீது தனிப்பட்ட நுழைவு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவு செய்ய ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது புதிய நடவடிக்கைகள் எடுக்காததற்கு ஜேர்மனி தான் காரணம்! போட்டுடைத்த போலந்து 

உக்ரைன் மீது படையெடுத்ததற்காக தங்கள் நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்த நாடுகளை ரஷ்யா நட்பற்ற நாடுகளாக கருதுகிறது.

கடந்த மாதம் நட்பற்ற நாடுகளின் பட்டியலுக்கு ரஷ்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

இந்த பட்டியிலில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.