'காதலியின் போட்டோக்களை இணையத்தில் பதிவு செய்வேன்' என மிரட்டியதாக புகார்- காதலனுக்கு ஜாமீன்

காதலிக்கும்போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வேன் என காதலன் மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த காதலனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
காதலிக்கும்போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வேன் என காதலன் மிரட்டியதாக காதலி அளித்த புகாரின்பேரில் செய்யது முகமது என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினரால் மார்ச் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி  செய்யது முகமது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், இதுவரை எந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை எனவும், மனுதாரர் மீது வேறு எந்த ஒரு குற்றச்செயலும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், மனுதாரர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை. ஆனால், இணையத்தில் தனிப்பட்ட இடத்தில் கடவுச்சொல் மூலம் புகைப்படங்களை மறைத்து வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
image
இதனையடுத்து நீதிபதி, மனுதாரர் காதலிக்கும்போது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் கடவுச்சொல் வைத்து மறைத்து வைத்துள்ளார். மனுதாரர் இணையத்தில் மறைத்து வைத்துள்ள புகைப்படங்களுக்கான கடவுச்சொல்லை (password) விசாரணை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அதில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விசாரணை அதிகாரி அழிக்க (Delete) வேண்டும். அதேசமய மனுதாரர் சாட்சியங்களை அளிக்கக்கூடாது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை மனுதாரர் தலைமறைவாகக்கூடாது போன்ற விதிமுறைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் விதிமீறலில் ஈடுபட்டால் கீழமை நீதிமன்றம் மனுதாரருக்கு வழங்கிய ஜாமீனை ரத்துசெய்யலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.