பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.!

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் தரணிஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தரணீஷ் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார். இதில் அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் தரணீஷை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.