சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுக அமைப்புகளின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.