பிரான்சில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி! பொலிஸ் விசாரணை


பிரான்சில் மனைவியை கொன்ற பிரித்தானியர் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்மேற்கு பிரான்சின் Occitanie மாநிலத்தில், Haute-Garonne பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரது 64 வயது கணவர் (பிரித்தானியரும் இறந்து கிடந்தார்.

பெண்ணின் உடலில் அடி மற்றும் கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டபோது, அதற்கு முன்பே உடல்கள் குறைந்தது 72 மணிநேரத்திற்கு மேலேக அங்கேயே இருந்து இருக்கலாம் என தெரிகிறது..

சம்பவ இடத்தில் காணப்பட்ட ஒரு குறிப்பு கணவன் நிதி சிக்கல்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கிறது.

இருவரது மரணத்துக்கான காரணத்தை அறிய இன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பௌட்ராக் கிராமத்தில் தங்கள் வீட்டை வாங்கியுள்ளனர். ஒரு விருந்தினர் மாளிகையை திறக்கும் திட்டம் இருவருக்கும் இருந்ததாகவும், ஆனால், நிதி பிரச்சினை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் தரப்பினர் சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற நிலையில், இந்த சம்பவம் ஒரு கொலை-தற்கொலை என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.