மே 4ம் தேதி எல்.ஐ.சி. பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என தகவல்

சென்னை:
மே 4ம் தேதி எல்.ஐ.சி. பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பொதுப்பங்குகள் மே 4 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும், இந்த விற்பனை மே 9 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்து, இதற்கான வரைவு அறிக்கையை செபியிடம் மத்திய அரசு தாக்கல் செய்தது.

காப்பீட்டு நிறுவனத்தை முழுவதுமாக வைத்திருக்கும் அரசாங்கம், 3.5 சதவீத பங்குகளுக்குச் சமமான சுமார் 22 கோடி பங்குகளை விற்று ரூ.21,000 கோடியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் ரூ.21,000 கோடி நிதி திரட்டும் வகையில் 3.5% பங்குகளுக்கான ஐபிஓக்கள் வரும் மே 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை விற்பனைக்காகac வெளியிடப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.