சரத்பவார், உத்தவ் தாக்கரேவை சந்தித்தது போல் மம்தா – கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு: எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள மம்தா பானர்ஜியை, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென சந்தித்ததால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் முகாமிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரான மருமகன் அபிஷேக் பானர்ஜின் அதிகாரபூர்வ இல்லத்தில் தங்கியிருந்த மம்தாவை, டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றிரவு சந்தித்தார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு சுமார் 30 நிமிடம் வரை நீடித்தது.  இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more

பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசிச்சென்ற அவலம்: பெண்சிசுக் கொலையா என போலீசார் விசாரணை

ஓசூர் அருகே ஏரியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை. பெண்சிசுக் கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அச்செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் குழந்தையின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மத்திகிரி போலீசார், ஏரியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை இருந்ததை உறுதி செய்தனர். இந்நிலையில், பெண் குழந்தையின் தொப்பில் கிளிப் கூட கழற்றப்படாத நிலையில், உடல் வீங்கி இருந்தது, பச்சிளம் … Read more

உத்தராகண்ட் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளை மீட்ட ராணுவ வீரர்கள்

உத்தராகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளை ராணுவ வீரர்கள் காப்பாற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் பூல் சாட்டி என்ற இடத்தில் சாகச நீர் பயணத்தில் ஈடுபட்டிருந்த சிறுமிகள், தங்கள் படகுகளில் இருந்து தவறி விழுந்ததாகத் தெரிகிறது. அவர்கள் உயிர்காக்கும் உடை அணிந்திருந்ததால், நீரினுள் மூழ்கவில்லை. அதேநேரத்தில் ரிஷிகேஷ் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அந்த சிறுமிகளை கயிறை வீசி … Read more

ஆயிரம் கோடி வசூலை கடந்தது கேஜிஎஃப்-2 ! இந்தியில் மட்டும் 350 கோடி வசூலை வாரிக் குவித்தது!

உலகளவில் கேஜிஎஃப்-2 ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதன் இந்தி பதிப்பும் ரூ.350 கோடி வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக ராக்கி பாய் கதாபாத்திரத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் கன்னடா, இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என 5 மொழிகளில் கே.ஜி.எஃப் … Read more

பொன்னியின் செல்வன் – ஓடிடி உரிமை இவ்வளவு விலையா?

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது. தெலுங்கு, கன்னட மொழியில் வெளியாகி பான்-இந்தியா படமாக வசூலைக் குவித்த படங்களுக்கு பதில் சொல்லும் விதமாக தமிழில் இந்தப் படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இப்படத்தின் இரண்டு பாகங்களின் ஓடிடி … Read more

வரதட்சணைக்காக மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்ட கணவன்

ஜெய்ப்பூர் ராஜஸ்தானின் பரத்பூர்  கமான் பகுதியை சேர்ந்த ஒருவர் அரியானாவை சேர்ந்த பெண்ணை கடண்டஹ் 2019 ஆம் ஆண்டு திருமண செய்து கொண்டார். தம்பதிகள் ராஜஸ்தானில் குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் வரதட்சணை கேட்டு அந்த நபரின் தாயார் அந்த பெண்ணை கொடுமைசெய்து வந்துள்ளார். இதனால், அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால், கணவர் அவரை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீடு வந்ததும் கணவர் தனது உறவினர்கள் இருவரை வீட்டிற்கு அழைத்து உள்ளார். … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தாக்குப்பிடிக்குமா மும்பை அணி..? – இன்று மோதல்

மும்பை, நடப்பு தொடரில் ஆரஞ்சு நிற தொப்பி (ஜோஸ் பட்லர்- 3 சதம் உள்பட 499 ரன்), ஊதா நிற தொப்பி (யுஸ்வேந்திர சாஹல்- 18 விக்கெட்) இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களே தக்க வைத்துள்ளனர். சூப்பர் பார்மில் உள்ள ராஜஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும்வரிசையாக வெற்றிக்கனியைபறித்துள்ளது. ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், கேப்டன் சாம்சன் பேட்டிங்கிலும், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர … Read more

கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 46.66 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 27 லட்சத்து 36 ஆயிரத்து 640 ஆக … Read more

பெங்களூரை அடுத்து கேரளா.. தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து வரும் நிறுவனங்கள்..!

பல்வேறு காரணங்களுக்காக வெளி மாநிலங்களில் இயங்கி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டு இருக்கும் நிலையில், பெங்களூர் நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது கேரள நிறுவனம் ஒன்று தனது கேரள வர்த்தகத்தை மொத்தமாக மூடிவிட்டு தமிழ்நாட்டில் வர்த்தகத் தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் ஆக இருந்தாலும், கேரளாவுக்குப் பெரும் பிரச்சனையாக விளங்குகிறது. அமேசான் வரலாற்று வீழ்ச்சி.. 7 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்..! தமிழ்நாடு அரசு புதிய முதலீட்டை ஈர்க்கவும், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் … Read more