இலங்கை அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறித்து வெளியான அறிவிப்பு


அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

குறைக்கப்படும் ஓய்வுபெறும் வயதெல்லை

இலங்கை அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறித்து வெளியான அறிவிப்பு

கடந்த ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து.

எனினும் 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைத்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.