காயிதே மில்லத் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை

சென்னை: காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்” இந்தித் திணிப்பு எதிர்ப்பு – தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி – மத நல்லிணக்கம் – சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி எனத் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியச் சிறுபான்மையினருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் பிறந்தநாளில் அவர்தம் தொண்டை நினைவுகூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


— M.K.Stalin (@mkstalin) June 5, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.