வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு பகுதியில் இளைஞர் ஒருவர் கேபிள் ஒயரை வைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர். தப்பியோட முயன்ற அவரை துரத்தி சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைசெய்யபட்டவரின் முகம் சிதைந்து போனதால் அவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.