கள்ளக்குறிச்சி கலவரம் – கைது செய்யும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கலவரத்தின் போது, காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த இளைஞர் அடையாளம் காணப்பட்டு அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. பள்ளி பேருந்துகள் சேதப்படுத்தி எரிக்கப்பட்ட நிலையில், வெளியே வந்த கலவரக்காரர்கள் காவல்துறையின் வாகனத்திற்கும் தீ வைத்தனர்.

வன்முறை சம்பவத்தில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியை சேர்ந்த நித்திஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.