வேலைக்குச் சேர்ந்த 10-வது நாளில் பணத்துடன் எஸ்கேப்; போலீஸிடம் வசமாக சிக்கிய அண்ணன், தம்பி – எப்படி?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, ஐசக் தெரு சந்திப்பில் பூக்கடை போலீஸார், 1-ம் தேதி அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரண்டு பேர் பெரிய பையுடன் வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் சந்தேகமடைந்து பையை சோதனை செய்தனர். அதற்குள் கட்டுக்கட்டாக பணம், வெள்ளி நாணயங்கள், வெள்ளி சிலை ஆகியவை இருந்தன. அதுதொடர்பாக விசாரித்தபோது, கடையிலிருந்து திருடி வந்தது … Read more

கவிதை யூடியூப்பருக்கு கடுக்கா கொடுத்த துடுக்கான அழகி..! போச்சே.. ரூ.30 லட்சம் போச்சே என புலம்பல்..!

கவிதை வீடியோவில் நடிக்க வந்த இரு குழந்தைகளின் தாயை, இளம் மாடல் என நம்பி காதலில் விழுந்த யூடியூப்பர் ஒருவர் 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்து தவிப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அழகில் மயங்கி காதலில் விழுந்தவர் புகாருடன் காவல் நிலையத்தில் காத்திருக்கும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. அவளின் பாதம் தொடங்கி.. நடையில்…. உடையில்… கண் அசைவில்.. புன்னகையில்… என்று வரி வரியாய் கவிதை பாடி மொத்தமாக 30 லட்சம் ரூபாயை … Read more

கனமழை எச்சரிக்கை எதிரொலி: கோவை மாநகரில் சிறப்பு குழுக்கள் அமைப்பு

கோவை: கோவை மாநகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாநகரில் முன்னெச்சரிக்கையாக 5 மண்டலத்துக்கும் தலா ஒரு உதவி ஆணையர் தலைமையில் குழு அமைத்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள், இதர பணியாளர்கள் இருப்பர். மேலும், தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற மின் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். … Read more

சஞ்சய் ராவத் மீது ஸ்வப்னா பட்கர் போலீஸில் புகார்

சஞ்சய் ராவத்தின் முன்னாள் உதவியாளர் ஸ்வப்னா பட்கர் என்ற பெண் அளித்த புகாரின் பேரில் ராவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வயதான ஸ்வப்னா பட்கர், மும்பை புறநகர்ப் பகுதியில் கிளினிக் வைத்து, உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தனக்கு பாலியல் தொல்லை தருவதாக மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டதாகவும், மேலும் ஆடியோ மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகாரில் ஸ்வப்னா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சஞ்சய் ராவத் மீது பல்வேறு பிரிவுகளில் மும்பை … Read more

வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்ட காட்டுயானை.. கரைக்கு வரமுடியாமல் தவிப்பு.!

கேரளாவின் திருச்சூரில் உள்ள வெள்ளப்பெருக்கில் காட்டுயானை ஒன்று சிக்கி தவித்த காட்சி வெளியாகியுள்ளது. கேரளா மாநிலத்தில் கனமழை தொடர்வதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரப்பள்ளி அருவிக்கு அருகேயுள்ள சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட யானை, போராடி தானாகவே கரை திரும்பியது.   Source link

உக்ரைனின் கனரக பீரங்கி படைப்பிரிவினரின் மெய்சிலிரிக்க வைக்கும் வீடியோ காட்சி!

உக்ரைனின் 43 வது கனரக பீரங்கி படைப்பிரிவினர் தொடர்பான மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல இடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் இரு தரப்பிலும் மிகப்பெரிய உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனின் 43 வது பீரங்கி படையின் வீரர்கள் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 💥👍👊👊Fighters of the 43rd Artillery Brigade 🇺🇦 #StopPutinNow #Ukraine … Read more

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகம் உள்பட 10இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

டெல்லி:  சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மற்றும் அது சம்பந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேஷனல் ஹெரால்டு பணமோசடி புகாரில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே சில நாட்கள் விசாரணை நடத்தி முடித்த  நிலையில் இன்று நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகம் மற்றும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் … Read more

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 300 கிலோ கடல் அட்டைகளை கடத்த முயன்ற நபர் கைது..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 300 கிலோ கடல் அட்டைகளை கடத்த முயன்ற மன்சூர் அலிகான் என்பவர் கைது செய்யப்பட்டார். தேவிபட்டினம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நடத்திய சோதனையில் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

2022 ஜூலையில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 பில்லியன் யூபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன: பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: 2022 ஜூலையில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 பில்லியன் யூபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர், யூபிஐ பரிவர்த்தனையில் இது மிகப்பெரிய சாதனையாகும் என பாராட்டு தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்பங்களை ஏற்படுத்திலும், பொருளாதாரத்தை சீராக்குவதிலும் இந்திய மக்களின் கூட்டான முடிவு இது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

அரபிக்கடல் பகுதியில் சூறைக்காற்று: கடலுக்குச் செல்லாத கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நிலையில் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது. அதேபோல் அரபிக்கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படும் எனவும் எச்சரித்திருந்தது. இதையடுத்து அரபிக்கடல் பகுதியில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றமாகவே … Read more