மாநில அளவிலான பேச்சு போட்டி: ஆதித்யா மாணவிகள் அபாரம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி அரசு தேசிய மனநல திட்டம் மற்றும் சர்வதேச தற்கொலை விழிப்புணர்வு திட்டம் சார்பில் தற்கொலை விழிப்புணர்வு பேச்சு போட்டி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிறுவன மாணவி அனிஷா மாநில அளவில் இரண்டாம் இடம், மாணவி தாரணி மூன்றாம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில அளவிலான பேச்சு போட்டியில் வென்று சாதித்த மாணவிகளை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்ய நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்ட்டி அனுதா பூனமல்லி மற்றும் கல்லுாரி முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.