ரயில்வே நிலங்கள் நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரயில்வே நிலங்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், 35 ஆண்டுகள் வரை குத்தகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.டில்லியில் நரேந்திரமோடி தலைமை யில் அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் … Read more

சமந்தாவுடன் எனது பயணம் முடிவுக்கு வருகிறது : சின்மயி

பாடகி சின்மயி பாடலை தாண்டி அறியப்பட்டவர். துணிச்சலான கருத்துக்களை கூறக்கூடியவர். எவருக்கும் அஞ்சாமல் நியாயத்தை பேசுகிறவர் என்கிற இமேஜ் அவருக்கு உண்டு. அவர் அடிப்படையில் ஒரு டப்பிங் கலைஞரும்கூட. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவரை நீக்க பெரிய பெரிய ஆட்கள் முயற்சித்தபோதும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி அதில் நீடித்து வருகிறார். சின்மயி முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் பேசி வருகிறார். அவற்றில் முக்கியமானவர் சமந்தா. தற்போது நன்றாக தெலுங்கு பேச கற்றுக் கொண்ட சமந்த … Read more

”ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் ரெண்டுமே வேற வேற மாதிரி”: பங்கமாய் கலாய்த்த கார்த்தி

சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவரது கேரக்டர் குறித்து கார்த்தி விளக்கம் அளித்துள்ளார். கார்த்திக்கு அடித்த ஜாக்பாட் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ட்ரெய்லர் மற்றும் … Read more

80 – 90களில் கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் அவரது நாட்களில், முதல் தர போட்டிகளுக்கு 150 – 200 ரூபாய் வரையில் பெற்றுள்ளதாக மூத்த விளையாட்டு பத்திரிக்கையாளார் அயாஸ் மேமன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் எப்போதுமே இந்தியாவில் பிரபலமான ஒரு விளையாட்டாக இருந்து வருகின்றது. ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளை காட்டிலும் வீரர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கோடீஸ்வரர்களின் வீடுகளையும் பதம் பார்த்த வெள்ளம்.. படகில் மீட்கப்பட்ட தொழிலதிபர்கள்! கிரிக்கெட் வீரர்களுக்கு பல சலுகைகள் ஹாக்கி … Read more

தென்காசி: திருமணமான ஏழு நாளில் கொலையான இளம்பெண் – நடந்தது என்ன… போலீஸ் விசாரணை!

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள துப்பாக்குடி கிராமத்தின் அருகில் உள்ள ஓர் ஓடையில் இளம்பெண்ணின் உடல் கிடந்ததை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்க்குறிச்சி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் வந்து பார்த்தபோது உயிரிழந்தவரின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்ததால் கொலை என்பது உறுதியானது. கொலைசெய்யப்பட்ட இசக்கி செல்வி சுமார் 23 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், அந்தப் பெண் யார் என்பது … Read more

இந்திய ஒற்றுமை பயணம் | ராகுல் காந்தி நடைபயணம் – குமரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தேசிய கொடி வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து தொடங்கும் இந்த நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை வழங்கி தொடங்கி … Read more

டெல்லியில் ராஜபாதை பெயர் மாற்றம்: பின்னணி என்ன?

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ராஜபாதையின் பெயர் ‘கர்த்தவ்ய பாத்’ என்று மாற்றப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்டெல்லியில் நேதாஜி சிலை முதல்குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான சாலைக்கு ‘கிங்ஸ்வே’ என்று பெயர் சூட்டப்பட்டது. இதனை இந்தியில் ‘ராஜபாதை’ என்று அழைத்தனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜபாதையின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி டெல்லி ராஜபாதை இனிமேல் ‘கர்த்தவ்ய பாத்’ என்று அழைக்கப்படும். இதற்கு, ‘கடமையை செய்யும் பாதை’ என்று அர்த்தம். … Read more

மாணவர்களின் ஹெல்த் எப்படி இருக்கு? -ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு ஆர்டர்!

மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் தலையாய பணியுடன் தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் விவரம் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளும் பள்ளி ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தரப்பட்டு வருகிறது. இவற்றி்ன் வரிசையில் மாணவர்களின் உடல்நலம் சார்ந்த பல்வேறு தகவல்களை சேரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி வைட்டமின் குறைபாடு, ரத்த சோகை, கண் பார்வை பாதிப்பு, காசநோய், தைராய்டு பிரச்னை, பல் நோய்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அந்த தகவல்களை பட்டியலாக அனுப்ப மாநிலம் முழுவதும் … Read more

'முதல்வன்' பட பாணியில்… பீகாரில் மாஸ் காட்டிய தேஜஸ்வி யாதவ்.. குவியும் பாராட்டு!

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மாறுவேடத்தில் மருத்துவமனையை விசிட் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிஹார் மாநிலத்தில் அரசியலுக்கு பஞ்சம் இல்லாத நிலை நீடிக்கிறது. நிதிஷ் குமார் மற்றும் பாஜக இணைந்து நடத்திய கூட்டணி ஆட்சிக்கு முற்று புள்ளி வைத்து பின்னர் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கரம் கோற்றனர். பின்னர் இது கூட்டணியாக உருவெடுத்து சுமூகமான முறையில் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வகிக்கும் தேஜஸ்வி … Read more

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் எப்போது தொடக்கம்?

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆயிரத்து 545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். படிப்படியாக இந்தத் திட்டம் தமிழகம் … Read more