விராட் கோலி தங்கியிருந்த அறையை படம் எடுத்த மர்ம நபருக்கு கோலி கண்டனம்..!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி,தமது அறையை ஒருவர் படம் எடுத்து இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

அவர்,  டி  20 கிரிக்கெட் கோப்பை ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில்  கிரவுண்ட் டவர் என்ற ஓட்டலில் தங்கியிருந்த அறையில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஞாயிறு அன்று தென்னாப்பிரிக்கா உடனான ஆட்டத்திற்கு சென்று இருந்த போது மர்ம நபர் அவரது அறைக்குள் நுழைந்து படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இது தமது தனிப்பட்ட சுதந்தி ரத்தை பாதிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ள கோலி அந்த வீடியோவையும் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.