புதுடில்லி : ‘டுவிட்டர், மைக்ரோசாப்ட்’ ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, ‘அமேசான்’ நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
அமெரிக்க மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், அதன் லாபமில்லாத பிரிவுகளில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளது.இந்நிறுவனம் புதிதாக நபர்களை பணியமர்த்துவதை நிறுத்தி வைத்திருப்பதாக, கடந்த வாரம் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், தற்போது ஆள்குறைப்பிலும் இறங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிறுவனத்தின் ‘ரோபோடிக்ஸ்’ பிரிவில் உள்ள அனைவரும் வேலையிழப்புக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இப்பிரிவில் 3,000த்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.மேலும், அதிக லாபம் ஈட்டாத பல பிரிவுகளில் உள்ள ஊழியர்களிடம், விரைவில் இந்த திட்டங்கள் மூடப்படும் அல்லது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்பதால், வேறு வேலைகளை தேடிக் கொள்ளுமாறு அமேசான் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது நாங்கள் அசாதாரணமான ஒரு பொருளாதார சூழலை எதிர்கொண்டுள்ளோம். இதற்கேற்ற வகையில், எங்கள் பணியமர்த்தல் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறோம்.
நிச்சயமற்ற மற்றும் சவாலான பொருளாதார சூழலை நாங்கள் எதிர்கொள் வது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பும் சந்தித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement