ஷூட்டிங் தொடங்காத தளபதி 67 இவ்வளவு வியாபாரமா?… தலையை பிய்த்துக்கொள்ளும் கோலிவுட்

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளியாகிறது. வம்சி இயக்க தில்ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல், விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் என வாரிசை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள். இருப்பினும் மனம் தளராத விஜய் ரசிகர்கள் வாரிசு படத்துக்காக வெயிட்டிங். அதேசமயம் விஜய்யின் அத்தனை ரசிகர்களும் இப்போதே அதீதமாக எதிர்பார்த்திருப்பது லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணையும் அடுத்த படத்துக்காகத்தான்.

தளபதி 67 படத்தின் கதை, திரைக்கதை எழுதுவதற்காக லோகேஷும் சோஷியல் மீடியாக்களிலிருந்து வெளியேற படத்தின் அப்டேட் குறித்து எதுவும் வெளியாகாமல் இருந்தது. ஆனால் படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் படத்தில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அந்தப் படமானது மும்பையை மையப்படுத்தி இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் தளபதி 67ல் விஜய் டானாக நடிப்பார் என ரசிகர்கள் கணித்துவருகின்றனர். 

மேலும் படத்தில் நடிப்பதற்கு கௌதம் வாசுதேவ், சஞ்சய் தத் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இதனை கௌதம் வாசுதேவும் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். முக்கியமாக தளபதி 67 லோகேஷ் யுனிவெர்ஸ் என்பதன் அடிப்படையில் உருவாகுமா என்பது குறித்தும் ரசிகர்கள் விவாதித்துவருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 160 கோடி ரூபாய்க்கும், சேட்டிலைட் உரிமையை சன் டிவி 80 கோடி ரூபாய்க்கும் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

அதேசமயம் படத்தின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் படத்தின் திரைக்கதையை லோகேஷ் இன்னும் முடிக்கவில்லை என கூறப்படுகிறதும். இப்படிப்பட்ட சூழலில் எப்படி ஒரு படம் 240 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகும் எனவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.