தெலங்கானா | ஏரியில் நீச்சல் பழக சென்ற 5 மாணவர்கள் உயிரிழப்பு: காப்பாற்ற சென்ற ஆசிரியரும் பலி

மெட்ச்சல்: தெலங்கானாவின் மெட்ச்சல் மாவட்டம், காச்சிகூடா நேரு நகர் பகுதியில் மதரஸா பள்ளி உள்ளது. இங்கு இஸ்லாமிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு படிக்கும் நேரு நகரை சேர்ந்த இஸ்மாயில் (12), ஜாபர் (13), சோஹைல் (14), அயோன் (14), ரியான் (14) ஆகிய 5 மாணவர்கள், நேற்று இதே பகுதியில் உள்ள எர்ரகுண்டா ஏரியில் நீச்சல் பழக சென்றனர். ஆனால், ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், இவர்கள் தொடர்ந்து நீந்த முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். … Read more

சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்ய முடியும்: முரசொலிக்கு தமிழிசை பதில்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்போவதாக அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார். இதனைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜனுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்!’ என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியானது. அதில், … Read more

பாஜக பிளான் தவிடுபொடி; அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் திக்… திக்… முடிவுகள்!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆதம்பூர் (ஹரியானா), தம்நகர் (ஒடிசா), கோலா கோக்ராநத் (உத்தரப் பிரதேசம்) ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரா) உத்தவ் தாக்கரே சிவசேனா, கோபால்கஞ்ச் (பிகார்), மொகாமா (பிகார்) ஆகிய தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தள், முனுகோட் (தெலங்கானா) தெலங்கானா ராஷ்டிர … Read more

'அந்த நடிகையின் ஆபாச படம் என்னிடம் உள்ளது…' – அவதூறு வழக்கு போட்ட மற்றொரு நடிகை

இந்தி இயக்குநர் சஜித் கான், பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதை அடுத்து, அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றும்படி டெல்லி மகளிர் ஆணையம், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து, சஜித் கான் மீது #MeToo-வில் புகார் கூறிவந்த நடிகை ஷெர்லின் சோப்ராவும், அவரை பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்.  மேலும், சஜித் கான் தனக்கு அளித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் தடலாடியாக பல குற்றச்சாட்டுகளையும் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, சஜித் கானுக்கு … Read more

ரஷ்யாவில் கபேயில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு..!

ரஷ்யாவில், கபேயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். கோஸ்ட்ரோமா நகரில் உள்ள பாலிகன் கபேயில், நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியதை அடுத்து, கட்டடத்தில் இருந்த 250 பேர் பாதுகப்பாக வெளியேற்றப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். Source link

ராமநாதபுரம் மாவட்டத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்; திரளாக திமுகவினர் பங்கேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அளவிலான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகிக்க, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா வரவேற்றார். திராவிட இயக்க வரலாறு குறித்து பேராசிரியர் கொளத்தூர் மணியும், … Read more

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி வெற்றி பெற 128 ரன் இலக்கு

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு 128 ரன் இலக்கை வங்கதேசம்  அணி நிர்ணயத்தது.  முதலில் ஆடிய வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மறுதாக்கல் செய்யப்படுமா? அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2014ல் ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த மசோதா காலாவதியானது. இதன் பின் மீண்டும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு … Read more

`ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு ஏன்?' – கொளத்தூர் தொகுதில் அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்!

“தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க, சாதி மத மோதல் இல்லாமல் இருக்க முதலமைச்சர் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பார்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான பருவக்கால மருத்துவ முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா, உட்பட அதிகாரிகளும் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “நேற்றைய மருத்துவ முகாமில் சென்னையில் 82,000 பேர் பயன்பெற்றுள்ளனர். சென்னையில் கடந்த ஆண்டு மழையின் போது நீரில் … Read more