‘பிள்ளைனாலே பிரச்னைதாங்க’… இபிஎஸ் முன் பஞ்சாயத்தை கூட்டிய எஸ்.ஏ.சி

தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது வசூல் மன்னனாக வலம் வந்தாலும் இவரது ஆரம்ப காலத்தில் இவருக்கு மிகப்பெரும் துணையாக இருந்தவர் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, விஜயகாந்த்திடம் சொல்லி அவருடன் விஜய்யை நடிக்க வைத்து பிரபலமாக்குவது என பல காரியங்களை செய்தார். ஒருகட்டத்தில் மகனுக்கும், தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது அனைவரது வீட்டுக்குள்ளும் நடப்பது போல் வழக்கமான ஒன்றுதான் என நினைத்திருக்க இந்த கருத்து வேறுபாடு … Read more

பழனி போக பிளானிங்கா? கவனிங்க; 3 மணி நேரம் நடை மூடப்படும்

சந்திர கிரகணத்தின்போது சந்திரன் பகுதி சிவப்பு நிறத்தில் தோன்றும். எனவே, இது பிளட் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. வருகிற நவம்பர் 8 ஆம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கின்றது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனை முழுமையாக … Read more

கேரள இளம்பெண் மரணத்தில் திருப்பம்! மாட்டி கொண்ட கணவர் மற்றும் குடும்பம்

கேரளாவில் திருமணமான இளம்பெண் தற்கொலை. கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு. கேரளாவில் இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஸ்ரீஜீஷ். இவருக்கும் அனகா என்ற பெண்ணிற்கும் கடந்த 2020ல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரயில் மோதியதில் அனகா உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில் ஸ்ரீஜீஷ் மற்றும் அவர் குடும்பத்தார் உடல் அளவிலும், மனதளவிலும் … Read more

ஆத்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் மூடிக்கிடக்கும் கழிப்பறை: பொதுமக்கள் அவதி

நிலக்கோட்டை: பொதுமக்கள் அதிகம் கூடும் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மூடிக்கிடக்கும் பொதுக்கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேளாண்மை அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அலுவகங்கள் அமைந்துள்ளன. இந்த ஒருங்கிணைந்த அலுவலக வளாகப் பகுதியில் இதர அலுவலகங்களுக்கு தினமும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்காக கட்டப்பட்ட சிறிய அளவிலான கழிப்பறை கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் … Read more

நவம்பர் 9-ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நவம்பர் 9-ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு  திசையில் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

50 நாள் தனிமையில் இருந்து விடுதலை: நமீபியா சிவிங்கி புலிகளை காட்டில் விட நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் பூங்காவில் உள்ள நமீபியா சிவிங்கி புலிகளை வனப்பகுதிக்குள் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிவிங்கி புலிகள் கடந்த 1952ம் ஆண்டுடன் அழிந்து விட்டதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனை மீண்டும் இந்தியாவில் இனப்பெருக்கம் செய்வதற்காக நடவடிக்கை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக, நமீபியாவில் இருந்து 5 பெண், 3 ஆண் என மொத்தம் 8 சிவிங்கி புலிகள் தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள … Read more

வறுமையின் கொடுமை: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளை மருத்துவமனையில் ஒப்படைத்த அவலம்

குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை அரசு மருத்துவமனையிலேயே ஒப்படைத்துச் சென்ற அவலம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்திற்கு கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அக்டோபர் 20ஆம் தேதி ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளை பராமரிக்க முடியாத சூழல் இருப்பதாக குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவமனை முதல்வர் வள்ளியிடம் தெரிவித்தனர்.               … Read more

ஒரு லட்சத்தை தொடும் ஓலா ஸ்கூட்டர் தயாரிப்பு| Dinamalar

பெங்களூரு :’ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், அதன் ஒரு லட்சமாவது மின்சார ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. அதுவும் 11 மாதங்களில். கிருஷ்ணகிரியில் உள்ள முழுவதும் பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வரும் ஓலா தயாரிப்பு ஆலையிலிருந்து இவ்வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பண்டிகை மாதமான அக்டோபரில், இந்தியாவிலேயே அதிகமாக, கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது, ஓலா நிறுவனம். இதுகுறித்து, இந் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் கூறியதாவது: மின்சார வாகன சந்தை வேகம் எடுப்பதால், அடுத்த ஒரு லட்ச … Read more

காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளருடன் புஷ்பா இயக்குனர் கூட்டணி

ஹிந்தியில் இந்த வருட துவக்கத்தில் வெளியாகி அரசியல் ரீதியாக மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். அபிஷேக் அகர்வால் தயாரித்திருந்த இந்த படத்தை இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி இயக்கியிருந்தார். மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் இந்த படம் பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்தடுத்த படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பயணிக்க இருக்கின்றனர். இந்தநிலையில் இவர்களது கூட்டணியில் புஷ்பா படத்தின் இயக்குனரான சுகுமாரும் கைகோர்த்துள்ளார். அது இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தைத் தயாரிப்பதற்காகவா அல்லது அந்தப் படத்தை … Read more

டெல்லியில் தீவிர காற்று மாசு: சமூக ஊடகத்தில் பரவும் கலகல மீம்ஸ்கள்…

புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக உள்ளது என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள 1 முதல் 5 வரையிலான மாணவ மாணவிகள் படிக்கும் முதன்மை நிலை பள்ளிகளுக்கு இன்று முதல் காற்று மாசு சூழல் மேம்படும் வரை விடுமுறை விடப்படுகிறது என முதல்-மந்திரி கெஜ்ரிவால் … Read more